செய்திகள் :

மகாராஷ்டிரா: "மராத்தியர்கள் விழிப்புடன் இருக்காவிடில், மும்பை நம் கையை விட்டு போகும்" - ராஜ் தாக்கரே

post image

மகாராஷ்டிராவில் மும்பை மாநகராட்சி உட்பட மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு ஜனவரி மாதம் தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.

இத்தேர்தலில் எதிர்க்கட்சிகளின் மகா விகாஷ் அகாடியில் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவைச் சேர்க்க வேண்டும் என்பதில் உத்தவ் தாக்கரே உறுதியாக இருக்கிறார். ஆனால் ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவை இக்கூட்டணியில் சேர்க்க காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதோடு தாங்கள் மும்பை மாநகராட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாகவும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

ராஜ் தாக்கரே தனது கட்சியின் கொங்கன் திருவிழாவைத் தொடங்கி வைத்து பேசுகையில், பா.ஜ.கவைக் கடுமையாக விமர்சித்தார். அவர் தனது உரையில், ''மராத்தி பேசாத மக்களால் மும்பை மாநகராட்சித் தேர்தலின் அரசியல் சூழல் மேலும் மேலும் பதட்டமடைந்து வருகிறது.

மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே
ராஜ் தாக்கரே

எனவே மராத்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மும்பையில் வசிக்கும் மராத்தியர்களுக்கு இது மிகவும் முக்கியமான கடைசி தேர்தலாக இருக்கும். நாம் கவனக்குறைவாக இருந்தால் மும்பை நம் கையை விட்டு சென்றுவிடும். அப்படி நடந்தால் அது மராத்தி மக்களுக்குப் பேரழிவாக அமையும். வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் அதிகமாக இருப்பது கவலையளிக்கிறது.

எனவே வாக்காளர்கள் உண்மையானவர்களா அல்லது போலியா என்பதை மக்கள் கவனத்தில் கொள்வது அவசியம். மக்கள் இதில் கவனமாகவும், விழிப்புடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டார்.

ராஜ் தாக்கரே கடந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தார். ஆனால் தேர்தலில் போட்டியிடவில்லை. கடந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தன் கட்சியை பா.ஜ.க அதன் கூட்டணியில் சேர்த்துக்கொள்ளும் என்று ராஜ் தாக்கரே எதிர்பார்த்தார். ஆனால் ராஜ் தாக்கரே கட்சியை பா.ஜ.க கழற்றிவிட்டது. இதனால் தனித்து போட்டியிட்டு அனைத்து தொகுதியிலும் தோல்வியைத் தழுவியது.

ராஜ் தாக்கரே வீட்டுக்கு சென்ற உத்தவ் தாக்கரே
ராஜ் தாக்கரே வீட்டுக்கு சென்ற உத்தவ் தாக்கரே

இப்போது உத்தவ் தாக்கரேயுடன் ராஜ் தாக்கரே கைகோர்த்து இருக்கிறார். ராஜ் தாக்கரேயை எதிர்க்கட்சிக் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்பதில் சரத்பவார் ஆதரவாகவே இருக்கிறார். ஆனால் இது தொடர்பாக சரத்பவார் தனது முடிவை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.

மும்பையில் கான் யாரையும் மேயராக்க விடமாட்டோம் என்றும், இந்து ஒருவர்தான் மும்பைக்கு மேயராவார் என்றும் மும்பை பா.ஜ.க தலைவர் அமீத் சாத்தம் சமீபத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

`அமைச்சர் தொகுதியில், படம் போட்டு பரிசு பொருள் விநியோகம்’ - கோவி.செழியன் மீது எழுந்த புகார்

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்ற தொகுதிகளில் ஒன்று திருவிடைமருதுார் (தனி) தொகுதி. இங்கு தி.மு.க சார்பில் தொடர்ந்து மூன்று முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற கோவி.செழியன் தற்போது உயர்க்கல்வித்துற... மேலும் பார்க்க

புதுச்சேரி: "விஜய் ஒரு சின்ன குழந்தை; சினிமா வசனத்தை மேடையில் பேசுகிறார்" - ஜெகத்ரட்சகன் காட்டம்

புதுச்சேரியில் உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் தி.மு.க உறுப்பினர் சேர்க்கை நடத்தி வருகிறது. அதன்படி நவம்பர் 23-ம் தேதி மண்ணாடிப்பட்டு தொகுதியில் எம்.பி ஜெகத்ரட்சன், புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் சிவ... மேலும் பார்க்க

"ஆச்சரியக்குறி, தற்குறி... எந்தக் குறியாக இருந்தாலும் கவலை இல்ல"- விஜய் குறித்து அமைச்சர் ரகுபதி

அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் இன்று (நவ.24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். ``ஆச்சரியக்குறி, தற்குறி என விஜய் எந்தக் குறியாக இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. எங்களுடைய குறி தேர்தல் க... மேலும் பார்க்க

'உதவி செய்தும் நன்றி காட்டவில்லை' உக்ரைனை சாடிய ட்ரம்ப்; உடனே சரண்டர் ஆன ஜெலன்ஸ்கி - என்ன நடந்தது?

வரி விதிப்பு, எச்சரிக்கை, மிரட்டல்... - இப்படி என்ன செய்து பார்த்தும், ரஷ்யா உக்ரைன் மீதான போரை நிறுத்தியபாடில்லை. இந்தப் போர் நிறுத்தத்திற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஓயாமல் முயன்று வருகிறார். ஆனால்,... மேலும் பார்க்க

ஆட்டத்தை தொடங்கிய மகாராஷ்டிரா பாஜக; தொட்டதற்கெல்லாம் டெல்லி சந்திப்பு! - சிக்கலில் ஷிண்டே?

மகாராஷ்டிராவில் தற்போது பா.ஜ.க, சிவசேனா(ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ்(அஜித்பவார்) கூட்டணி அரசு பதவியில் இருக்கிறது. மகாராஷ்டிராவில் சாதாரண ஒரு அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டேயை முதல்வராகவும், துணை முதல்... மேலும் பார்க்க

TVK Vijay: ``விஜய் வாக்குறுதிகள்: முதலில் அத்தைக்கு மீசை முளைக்கட்டும்" - ஜெயக்குமார் பதில்

மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். நடிப்பில் 1975-ம் ஆண்டு வெளியான திரைப்படம் இதயக்கனி. தற்போது இந்த திரைப்படம் டிஜிட்டல் வடிவம் பெற்று சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் திரையிடப்பட்டு 150 நாட்களை எட்ட உள்ளது.... மேலும் பார்க்க