செய்திகள் :

`என்னைப் பத்தி அவங்க சொன்னதெல்லாம் பொய்னு சட்டப்படி நிரூபிச்சிட்டேன்!’ - பிக்பாஸ் தினேஷ்

post image

சில தினங்களுக்கு முன் மோசடிப் புகார் தொடர்பாக பிக்பாஸ் தினேஷ் கைது என செய்தி வெளியானது நினைவிருக்கலாம்.

வள்ளியூரைச் சேர்ந்த கருணாநிதி என்பவர், அரசு வேலை வாங்கித் தருவதாக தன்னிடம் தினேஷ் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டார் எனப் புகார் தந்ததாக வெளியானது அந்தச் செய்தி.

செய்தி வெளியான உடனேயே அதை மறுத்த தினேஷ், நாய்க்குட்டி செல்வின் என்பவருக்கும் தனக்கும் இடையில் நடக்கும் ஒரு வழக்கின் தொடர்ச்சியாக அவரது தூண்டுதலின் பெயரில் தரப்பட்டிருக்கும் பொய்ப் புகார் இது எனக் குறிப்பிட்டிருந்தார். தவிர புகார் தந்தாகச் சொல்லப்படும் கருணாநிதியை தான் பார்த்ததே இல்லை எனவும் சொல்லியிருந்தார்.

'பிக் பாஸ்' தினேஷ்
'பிக் பாஸ்' தினேஷ்

இந்த நிலையில் தற்போது தன் மீது போடப்பட்ட எஃப் ஐ ஆர் ரத்து செய்து முடித்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறியிருக்கிறார்.

தினேஷிடம் பேசினோம்.

‘காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தந்தேன். விசாரிச்ச போலீஸ் பொய்ப் புகார்னு சொல்லி, அதை க்ளோஸ் செய்திடுச்சு.

உடனே சம்பந்தப்பட்ட கருணாநிதி என்கிற அந்த நபர் லோக்கல் போலீஸ் மீது நம்பிக்கை இல்லை, சிபிசிஐடி விசாரணை வேணும்னு கோர்ட்டுக்குப் போனார். கோர்ட்டுலயும் அவரது மனு தள்ளுபடி ஆகிடுச்சு.

முதல்ல நான் கைது செய்யப்பட்டதா செய்தி வெளியானதும் என் குடும்பத்தைச் சேர்ந்தவங்க ,மனசளவுல ரொம்பவே பாதிக்கப்பட்டாங்க. எனவேதான் இப்ப இந்தச் செய்தியையும் எல்லாருக்கும் சொல்லிடலாம்னு நினைச்சேன்.

கொஞ்சம் பிரபலங்களா இருக்கிறவங்க மீது இந்த மாதிரி பொய்ப் புகார் தந்தா, அவங்க பெயர் கெட்டுப் போகுமோனு பயந்து காசு தருவாங்கனு நினைக்கிறாங்க சிலர். இந்த மாதிரி ஆளுங்களைக் கடுமையாத் தண்டிக்கனும்னு இந்த நேரத்துல அரசையும் காவல்துறையையும் கேட்டுக்கறேன்’ என்கிறார்.

BB 9 : "இது உங்க வீடு இல்ல; நீங்க எப்படி ரூல்ஸ் போடலாம்?"- சாண்ட்ராவிடம் காட்டமாக பேசிய விஜய்சேதுபதி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 75 நாட்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடைபெற்ற டபுள் எவிக்ஷனில் ரம்யா ஜோ, வியானா வெளியேறினர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக வினோத் இருந்தார்.நாமினேஷனில் சான்ட்ரா, FJ,... மேலும் பார்க்க

BB Tamil 9: "இதுக்கு இவ்வளவாமா? ஓவர் ரியாக்ஷனா இருக்கே"- சான்ட்ராவை சாடுகிறாரா விஜய் சேதுபதி?

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 75 நாட்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடைபெற்ற டபுள் எவிக்ஷனில் ரம்யா ஜோ, வியானா வெளியேறினர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக வினோத் இருந்தார்.நாமினேஷனில் சான்ட்ரா, FJ,... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 75: அலப்பறை செய்த சான்ட்ரா; பாருவை வென்ற திவ்யா - 75வது நாளில் நடந்தது என்ன?

ரயில் பயணங்களில் பக்கத்து இருக்கைக்காரரிடம் சில மணி நேரங்கள் பழகி விட்டாலே நமக்கு முகதாட்சண்யம் ஏற்பட்டு விடுகிறது. அவருடைய தவறுகளை சகித்துக் கொள்கிறோம்.ஆனால் பிக் பாஸ் வீட்டில் பல நாட்கள் பழகிய ஒருவர... மேலும் பார்க்க

BB Tamil 9: "அப்படி தான் தெரியுது; பச்சையா தெரியுது FJ"- வாக்குவாதம் செய்யும் அரோரா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 11 வாரங்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடைபெற்ற டபுள் எவிக்ஷனில் ரம்யா ஜோ, வியானா வெளியேறினர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக வினோத் இருக்கிறார்.நாமினேஷனில் சாண்ட்ரா, ... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 74: `வலை வீசி பிடிச்சிட்டியே.. திருட்டுப்பயலே' தொடரும் கம்மு - பாரு அலப்பறை

டான்ஸ் டாஸ்க்கில் ‘யம்மாடி ஆத்தாடி’ அணி வெற்றி பெற்றிருக்கிறது. அந்த அணியில் எவருடைய குடும்பத்தினர் 24 மணி நேரத்திற்கு வீட்டில் தங்க வாய்ப்பு கிடைக்கும்? அடம் பிடித்து பாரு வாங்கிவிடுவாரா?‘என் குழந்தை... மேலும் பார்க்க