செய்திகள் :

'குக்கர் பரிசு, அறுசுவை விருந்து' - தொகுதி மக்களை 'வெயிட்டாக' கவனித்த அமைச்சர் ஆனந்த்!

post image

தி.நகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அத்தொகுதியின் எம்.எல்.ஏவும் நீர்வளத்துறை அமைச்சருமான என்.ஆனந்த் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் தொகுதி மக்களுக்கு 'குக்கர்' பரிசு வழங்கி உற்சாகமூட்டியிருந்தார்.

அமைச்சர் ஆனந்த்
அமைச்சர் ஆனந்த்

மேதாது அணை விவகாரம் தொடர்பாக முதல்வர் விஜய் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தியிருந்தார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிகாரிகளுடன் கலந்துகொண்டிருந்தார் அமைச்சர் என்.ஆனந்த்.

அந்தக் கூட்டத்தை முடித்துவிட்டு மதியம் 12 மணிக்கு மேல் தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தைத் திறப்பதற்காக வருகை தந்தார்.

சிறப்புப் பூஜைகளை முடித்துவிட்டு அலுவலகத்தைத் திறந்த என்.ஆனந்த், அங்கு கூடியிருந்த தொகுதி மக்களுக்கு 2000 ரூபாய் மதிப்புள்ள 3 லி 'குக்கர்'களைப் பரிசாக வழங்கினார்.

குடும்ப அட்டையின் அடிப்படையில் 105 குடும்பங்களுக்கு குக்கர் வழங்கிய அமைச்சர் ஆனந்த், அவர்களுக்கு அறுசுவை மதிய விருந்தையும் வழங்கினார்.

அமைச்சர் ஆனந்த்
அமைச்சர் ஆனந்த்

இந்த நிகழ்வை முடித்த பிறகு அமைச்சர் ஆனந்திடம் மேகதாது அணை விவகாரம் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் கூறியவர், ''எங்கள் நிலைப்பாடுகள் சம்பந்தமாக விளக்கமளிக்க செய்தித்தொடர்பாளர்களை நியமிப்போம். என்னுடைய துறை சார்ந்த விவகாரங்களை அறிக்கையாக கொடுப்பேன்'' என்று மட்டும் கூறிவிட்டு சென்றார்.

மேகதாது: `தமிழர்களுக்கு எந்த வகையிலும் துரோகம் இழைக்கக் கூடாது என்பதில்...' - அமைச்சர் பி.விஸ்வநாதன்

தமிழ்நாட்டின் புதிய உயர்கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் பி.விஸ்வநாதன், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது மேகதாது அணை விவகாரம், ஆளுநர் உடனான உறவு... மேலும் பார்க்க

சட்டம் ஒழுங்கு: ``இது தமிழ்நாடா, உத்தரபிரதேசமா?" - தவெக அரசை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது மாற்றம் வேண்டும் என்ற முழக்கத்துடன் தேர்தலை எதிர்கொண்டது சி.ஜோசப் விஜய் தலைமையிலான தவெக. அதைத் தொடர்ந்து, 60 ஆண்டுக்காலமாக மாறி மாறி ஆட்சியில் இருந்த திம... மேலும் பார்க்க

`மின் தடை பிரச்னைகளுக்குக் காரணம் இதுதான்..!' - அமைச்சர் நிர்மல் குமார் சொல்வதென்ன?

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் (TANGEDCO) சார்பில் சோலார், விண்ட் பவர் உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின் உற்பத்தித் துறையில் ஈடுபட்டுள்ள சிறு தொழில் நிறுவனங்கள், வெண... மேலும் பார்க்க

'அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா!' - யார் யார்? அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுடன் சந்திப்பு - விவரம் என்ன?

அதிமுக இரு பிளவாக பிரிந்திருக்கும் நிலையில், அக்கட்சியை சேர்ந்த மூன்று எம்.எல்.ஏக்கள் சபாநாயகரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்திருக்கின்றனர்.சி.வி அணிதவெகவுக்கு ஆதரவளிக்கும் விவகாரத்தில் அதிமுகவுக... மேலும் பார்க்க

வேலூர்: செங்கல் சூளைகளில் மாமூல் கேட்டதாகப் புகார்; தவெக ஒன்றியச் செயலாளரைக் கண்டித்து போராட்டம்

வேலூர் அடுத்த கணியம்பாடி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சண்முகம், தினகரன், சுனில்குமார், ரமேஷ், சுமன். இவர்கள் அதே பகுதியில் செங்கல் சூளை தொழில் செய்கின்றனர். இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின்... மேலும் பார்க்க

மேகதாது அணை: "தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கத் துடிக்கிறது கர்நாடக காங்கிரஸ் அரசு" - கனிமொழி கண்டனம்

மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்க்க தமிழகத்திற்கு உரிமை இல்லை என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்ததற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேகதாது அணை விவகாரம் தொட... மேலும் பார்க்க