செய்திகள் :

"கே.என்.நேரு மீதான ஊழல் புகார் குறித்து திமுக வாய் திறக்கவில்லை" - தவெக சி.டி.ஆர் நிர்மல் குமார்

post image

பனையூரில் உள்ள தவெக-வின் தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. மாநில அளவிலான நிர்வாகிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கின்றனர்.

இதையடுத்து பனையூரில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார், "அடுத்த 3 மாதங்களுக்கான தேர்தல் பணிகள் குறித்தும் சவால்கள் குறித்தும் பேசினோம். திமுக என்ன மாதிரியான இடையூறுகளை கொடுக்கும் என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினோம்.

பனையூர் தவெக அலுவலகம்

தலைவரை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வோருடன்தான் கூட்டணி. ரோடு ஷோவுக்கு அனுமதி இல்லாததால், கூட்டம் நடத்தவே அனுமதி கேட்கிறோம். ஆனால், காவல்துறை மூலம் மற்ற கட்சிகளுக்கு இல்லாதவாறு முட்டுக்கட்டை போடுகின்றனர்.

ஜனவரி, பிப்ரவரியில்தான் விருப்ப மனு விநியோகமெல்லாம் நடக்கும்.

கே.என்.நேரு மீதான ஊழல் புகார் குறித்து திமுக வாய் திறக்கவில்லை. இதையெல்லாம் மக்களிடம் கொண்டு போய் சேர்ப்போம். செந்தில் பாலாஜி கைதின் போது தொட்டுப்பார் சீண்டிப்பார் என முதல்வர் வீடியோ வெளியிட்டார். நேரு விவகாரத்தில் ஏன் வாய் திறக்கவில்லை.

பனையூரில் சி.டி.ஆர் நிர்மல் குமார்

திமுகவின் தலைமையின் பெயரை சொல்லி 'Party Fund' எனக் கூறிதான் நேரு பணம் வாங்கியிருக்கிறார். லஞ்ச ஒழிப்புத்துறையில் வழக்குப் பதிவு செய்து விசாரிப்பதில் என்ன பிரச்னை?

பாமக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வது பற்றி தலைவர் முடிவெடுப்பார்." என்று பேசியிருக்கிறார்.

"கலைஞர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்" - தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை!

இன்றைய மக்களவை கூட்டத்தில் திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் முன்னாள் தமிழக முதல்வர் மு.கருணாநிதிக்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்இது குறித்துப் பேசியிருக்கும் தமிழச்சி த... மேலும் பார்க்க

உங்களுக்கு வருமான வரி ரீஃபண்ட் இருக்கிறதா? இன்னும் ரீஃபண்ட் கிடைக்கவில்லையா? செக் செய்வது எப்படி?

பொதுவாக, வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்த 4-5 வாரங்களில், வருமான வரி ரீஃபண்ட் கிடைத்துவிடும். ஆனால், சிலருக்கு இன்னும் கிடைக்காமல் இருக்கும். இவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.eportal.... மேலும் பார்க்க

கோவை: நாளை முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்படும் செம்மொழிப் பூங்கா!

செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செ... மேலும் பார்க்க

SIR: ராகுல் காந்தி விடுத்த சவால்; ஆவேசமான அமித் ஷா - மக்களவையில் காரசார விவாதம்!

நாடாளுமன்ற லோக் சபாவில் தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் இன்று SIR குறித்த விவாதங்கள் அமித் ஷா, ராகுல் காந்தி இடையே காரசாரமாக நடந்திருக்கிறது. நேற்று (டிச 9) மக்களவைய... மேலும் பார்க்க

"தமிழ்நாட்டில் ஒரு கோடி வாக்காளர்களின் உரிமை பறிபோகும் நிலை" - மக்களவையில் திருமா

நாடாளுமன்ற லோக் சபாவில் SIR குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இன்றைய மக்களவையில் SIR குறித்துப் பேசியிருக்கும் எம்.பி திருமாவளவன், "எதிர்கட்சிகள் எவ்வளவோ எதிர்ப்பு தெரிவித்தும் தேர்தலை ஒட... மேலும் பார்க்க

``RSS அமைப்பு தேர்தல் ஆணையத்தையும் கைப்பற்றிவிட்டது'' - ராகுல் காந்தி அடுக்கும் குற்றச்சாட்டுகள்

நாடாளுமன்ற லோக்சபாவில் தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று பேசியிருக்கும் எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, SIR குறித்த விவாதத்தை தொடங்கி வைத்து அந்தப் பணிகளை உட... மேலும் பார்க்க