பீகார் : 40 மீட்டர் மொபைல் போன் டவரை தூக்கிச் சென்ற திருடர்கள்! - அதிகாரிகள் அதி...
சேலம்: பண உதவி செய்வதாக ஏமாற்றி 30 பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்த தவெக நிர்வாகி - அதிர்ச்சி பின்னணி
சேலம் மாவட்டம் நெய்க்காரப்பட்டி அருகில் உள்ள புத்தூர் அக்ரஹாரம் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் 40 வயதான மணிகண்டன். த.வெ.க ஒன்றிய நிர்வாகியான மணிகண்டன், வீட்டின் அருகில் கடை நடத்தி வரும் நிலையில், தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனை செய்த விவகாரத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பண நெருக்கடியில் ஆதரவின்றி தவிக்கும் பெண்களை குறித்து பழகும் இவன், அந்த பெண்களுக்கு கடன் உதவிகளை செய்து கொடுப்பதைப் போல ஏமாற்றி தவறான எண்ணத்தில் நெருங்கி பழகி வந்திருக்கிறான். அந்த பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டுவதுடன் அதை வைத்தே பாலியல் இச்சைகளை நிறைவேற்றி வந்திருக்கிறான். இவனால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் நேற்று வெளியிட்ட ஆடியோ ஒன்று இணையத்தில் பரவியது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். மணிகண்டனின் செல்போனை ஆய்வு செய்த காவல்துறையினர், 30 பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்திருப்பதை உறுதி செய்துள்ளனர். மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கொடூர பின்னணி குறித்து தெரிவித்த காவல்துறையினர், " நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த தமிழக வெற்றிக்கழக ஒன்றிய நிர்வாகி மணிகண்டன் பெண் ஒருவருக்கு நிதி நிறுவனத்தில் கடனாக பணம் பெற்று தந்துள்ளார். இதன் மூலம் மணிகண்டன் அந்த பெண்ணுடன் நெருங்கி பழகியுள்ளார். அதை வீடியோ எடுத்துள்ளார்.
சில நாள்களுக்கு முன் அந்தப் பெண்ணை யாரும் இல்லாத இடத்திற்கு மீண்டும் மணிகண்டன் அழைத்துள்ளார். அந்தப் பெண் சென்ற நிலையில், மணிகண்டன் செல்போனை எடுத்துப் பார்த்திருக்கிறார். பல பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து வைத்திருப்பதைப் பார்த்து அந்தப் பெண் அதிர்ச்சியடைந்திருக்கிறார். சம்மந்தப்பட்ட பெண்களின் வீடியோவை காட்டி மிரட்டி அவரது நண்பர்களின் ஆசைக்கு இணங்க கட்டாயப்படுத்தி உள்ளார். மேலும் சில பெண்களை பாலியல் தொழிலிலும் ஈடுபடுத்தி வந்ததாக தெரிகிறது. இது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது " என்றனர்.















