செய்திகள் :

சேலம்: பண உதவி செய்வதாக ஏமாற்றி 30 பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்த தவெக நிர்வாகி - அதிர்ச்சி பின்னணி

post image

சேலம் மாவட்டம் நெய்க்காரப்பட்டி அருகில் உள்ள புத்தூர் அக்ரஹாரம் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் 40 வயதான மணிகண்டன். த.வெ.க ஒன்றிய நிர்வாகியான மணிகண்டன், வீட்டின் அருகில் கடை நடத்தி வரும் நிலையில், தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனை செய்த விவகாரத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பண நெருக்கடியில் ஆதரவின்றி தவிக்கும் பெண்களை குறித்து பழகும் இவன், அந்த பெண்களுக்கு கடன் உதவிகளை செய்து கொடுப்பதைப் போல ஏமாற்றி தவறான எண்ணத்தில் நெருங்கி பழகி வந்திருக்கிறான். அந்த பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டுவதுடன் அதை வைத்தே பாலியல் இச்சைகளை நிறைவேற்றி வந்திருக்கிறான். இவனால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் நேற்று வெளியிட்ட ஆடியோ ஒன்று இணையத்தில் பரவியது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். மணிகண்டனின் செல்போனை ஆய்வு செய்த காவல்துறையினர், 30 பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்திருப்பதை உறுதி செய்துள்ளனர். மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல்துறை விசாரணையில் மணிகண்டன்

இந்த கொடூர பின்னணி குறித்து தெரிவித்த காவல்துறையினர், " நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த தமிழக வெற்றிக்கழக ஒன்றிய நிர்வாகி மணிகண்டன் பெண் ஒருவருக்கு நிதி நிறுவனத்தில் கடனாக பணம் பெற்று தந்துள்ளார். இதன் மூலம் மணிகண்டன் அந்த பெண்ணுடன் நெருங்கி பழகியுள்ளார். அதை வீடியோ எடுத்துள்ளார்.

சில நாள்களுக்கு முன் அந்தப் பெண்ணை யாரும் இல்லாத இடத்திற்கு மீண்டும் மணிகண்டன் அழைத்துள்ளார். அந்தப் பெண் சென்ற நிலையில், மணிகண்டன் செல்போனை எடுத்துப் பார்த்திருக்கிறார். பல பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து வைத்திருப்பதைப் பார்த்து அந்தப் பெண் அதிர்ச்சியடைந்திருக்கிறார். சம்மந்தப்பட்ட பெண்களின் வீடியோவை காட்டி மிரட்டி அவரது நண்பர்களின் ஆசைக்கு இணங்க கட்டாயப்படுத்தி உள்ளார். மேலும் சில பெண்களை பாலியல் தொழிலிலும் ஈடுபடுத்தி வந்ததாக தெரிகிறது. இது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது " என்றனர்.

பீகார் : 40 மீட்டர் மொபைல் போன் டவரை தூக்கிச் சென்ற திருடர்கள்! - அதிகாரிகள் அதிர்ச்சி

பீகாரில் அடிக்கடி வித்தியாசமான திருட்டு நடப்பது வழக்கம். இதற்கு முன்பு ஆற்றின் அமைக்கப்பட்டு இருந்த இரும்பு பாலத்தை கூட இரவோடு இரவாக திருடிச்சென்ற சம்பவங்கள் நடந்து இருக்கிறது. இப்போது மொபைல் போன் டவர... மேலும் பார்க்க

கேரள - தமிழக எல்லை: 13 ஆண்டுகளில் 23 குழந்தைகள் மர்ம மரணம் - சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்த கோர்ட்!

கேரளம்-தமிழ்நாடு எல்லையோர மாவட்டமான பாலக்காட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 13 ஆண்டுகளில் 23 குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். பாலக்காடு மாவட்டத்தில் ​வாளையார், கசபா, கொல்லங்கோடு, ​பட்டாம்ப... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி : 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோ வழக்கில் 16 வயது சிறுவன் கைது!

16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஓசூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போக்சோகிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டாரத்தில... மேலும் பார்க்க

காய்கறிகளுக்கு இடையே ரகசியமாக கஞ்சா செடி வளர்ப்பு – ஒடிசா மாநில தொழிலாளி சிக்கியது எப்படி?

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மாதாபெனந்தா ஜெனா (46) என்ற நபர், கடந்த 27 ஆண்டுகளாக கோவையில் தங்கி கட்டிட வேலை செய்து வருகிறார். இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக தடாகம் அருகேயுள்ள பன்னிமடை கணேஷ் நகர் பகுதியில் உள்... மேலும் பார்க்க

மைசூரு டு கோவை: பூண்டு லோடில் பதுக்கி கொண்டு வரப்பட்ட 440 கிலோ குட்கா மூட்டைகள் - பிடிபட்டது எப்படி?

தமிழ்நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ள குட்கா, பான் மசாலா பொருள்கள் அண்டை மாநிலமான கர்நாடகாவில் எந்தவித தடையும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகின்றன. கர்நாடகாவில் இருந்து கிலோ கணக்கில் குட்கா பொருள்களை பதுக... மேலும் பார்க்க

திருத்தணி: சிறுவன் கொலை; 4 மாதங்களுக்கு பிறகு உண்மையைக் கூறிய அம்மா - தம்பதி சிக்கிய பின்னணி

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் திருத்தணி அருகே உள்ள முருகம்பட்டு என்ற இடத்தில் கோழி பண்ணை ஒன்றை நடத்தி வருகிறார். இந்தப் பண்ணையில் வெண்ணிலா என்பவர் வேலை ச... மேலும் பார்க்க