செய்திகள் :

தஞ்சாவூர்: ``திமுக முன்னாள் எம்.பி ஏ.கே.எஸ்.விஜயன் வீட்டில் கொள்ளை'' - போலீஸ் விசாரணை

post image

திமுக முன்னாள் எம்.பி ஏ.கே.எஸ்.விஜயன் இவர் திமுக விவசாய பிரிவின் மாநில செயலாளராகவும், தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியாகவும் இருக்கிறார்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள சித்தமல்லி இவருடைய சொந்த ஊராகும். தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சேகரன் நகர் பகுதியில் ஏ.கே.எஸ்.விஜயனுக்குச் சொந்தமாக வீடு ஒன்று உள்ளது.

நகை கொள்ளைபோன வீடு
நகை கொள்ளைபோன வீடு

இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லை என சொல்லப்படுகிறது. இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று இரவு வீட்டின் முன் பக்க கதவை உடைத்து உள்ளே சென்று இரும்பு பீரோவை உடைத்து அதில் இருந்த தங்கம், வெள்ளி பொருள்கள் மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

சுமார் 300 பவுன் கொள்ளை போயிருப்பதாக சொல்லப்படுகிறது. இதையறிந்த ஏ.கே.எஸ்.விஜயன் தரப்பு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக காவல் நிலைய போலீஸாருக்கு புகார் அளித்தனர்.

இதையடுத்து வந்த காவல்துறையினர் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை செய்தனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும் கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சாவூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொள்ளை
கொள்ளை

இது குறித்து சிலர் கூறுகையில், ஏ.கே.எஸ். விஜயன் தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக இருக்கிறார். டெல்லி மற்றும் சென்னையில் இல்லாத நாட்களில் கட்சி வேலை இருக்கும் பட்சத்தில் தஞ்சாவூர் வீட்டில் தங்குவதை வழக்கமாக வைத்துள்ளார். ஏ.கே.எஸ். விஜயன் குடும்பத்தினர் அடிக்கடி வீட்டில் இல்லாமல் பூட்டிவிட்டு வெளியே செல்வதை கொள்ளையர்கள் நோட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில், ஏ.கே.எஸ். விஜயனின் நெருங்கிய உறவினர் ஒருவரின் மகன் தஞ்சாவூரில் இறந்துவிட்டார். இதில் கலந்துகொள்வதற்காகவும் பூட்டிவிட்டுச் சென்றுள்ளனர். வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த கொள்ளையர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து நகையைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். வீட்டில் கொள்ளை போன நகை சுமார் 300 பவுன் இருக்கும் என சொல்லப்படுகிறது.

US: `டவுன் சென்டர் மாலில் துப்பாக்கிச் சூடா?' - காவல்துறை சொல்வது என்ன?

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் போகா ரேடன் பகுதியில் உள்ளது டவுன் சென்டர் மால். இந்த மாலில் கடந்த சனிக்கிழமை (நவம்பர் 29-ம் தேதி) துப்பாக்கிச் சூடு நடந்ததாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகின. இதனால் ... மேலும் பார்க்க

ஆணவக் கொலை செய்யப்பட்ட காதலன்; சடலத்துடன் திருமணம் செய்த காதலி - கலங்கிய கிராமம்

மகாராஷ்டிராவின் நான்டெட் பகுதியைச் சேர்ந்த சக்ஷம் டேட் என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த ஆஞ்சல் என்பவரும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்தனர். இருவரும் வேறு வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், ஆ... மேலும் பார்க்க

கோவை: 3 மணி நேரத்தில் 12 வீடுகளில் கொள்ளை; அடுக்குமாடி குடியிருப்பில் வட மாநில கொள்ளையர்கள் கைவரிசை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் அரசு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அங்கு அரசு அலுவலர்கள், பத்திரிகையாளர்கள் வசித்து வருகிறார்கள். நேற்று அங்கு ஒரே நேரத்தில் அடுத்தடுத்து 12 வீடுகளில் நகை, பணம் கொள்ள... மேலும் பார்க்க

நீட் தேர்வில் மோசடி: '6 மாநிலங்கள்; ரூ.100 கோடி' - ஆள்மாறாட்டம் செய்த பொறியாளர் சிக்கியது எப்படி?

சமீபத்தில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக செய்திகள் வெளியாகின. இந்த மோசடி வடமாநிலங்களில் அதிக அளவில் நடக்கின்றன. அது போன்ற ஒரு மோசடியில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.உத்தரப்பிரதேச மாநிலத்தில் ம... மேலும் பார்க்க

சேலம்: மத்திய சிறையில் கைதிகளுக்கு செல்போன், கஞ்சா சப்ளை செய்ய முயன்ற சிறை காவலர் அதிரடி கைது

சேலம் மத்திய சிறையில் காவலர் மூலமாக செல்போன்கள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு வந்த நிலையில், சிறைத்துறை அதிகாரிகள் ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். கைதிகளை அழைத்து விசாரணை நடத்தப்பட்டது.இ... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர்: `பெண்ணை கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை' - 6 பேருக்கு ஆயுள் தண்டனை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே 43 வயது பெண் ஒருவர் 2022 ஆகஸ்ட் 22ஆம் தேதி மாலை விருதுநகரில் உள்ள உறவினர் வீட்டின் திருமண நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தார்.திருமண நிகழ்ச்சி முடிந்து மாலையில் வி... மேலும் பார்க்க