செய்திகள் :

"தனுஷ் மீது நான் குற்றச்சாட்டு வைக்கவில்லை" - நடிகை மான்யா விளக்கம்!

post image

நடிகை மான்யா ஆனந்த், நடிகர் தனுஷ் குறித்து பேசியதாக எழுந்த சர்ச்சை சமூக வலைதளங்களில் தீயாகப் பரவியது. இந்த விவகாரம் வைரலானதை தொடர்ந்து மான்யா ஆனந்த் தற்போது இது குறித்து ஒரு விரிவான விளக்கத்தை அளித்துள்ளார்.

சின்னத்திரையில் தொடர்களில் நடித்து வரும் மான்யா ஆனந்த், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், திரைத்துறையில் தனக்கு ஏற்பட்ட சில சவால்களைப் பற்றி வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டார்.

ஆனால் அவர் தெரிவித்த கருத்துக்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு, சமூக வலைதளங்களில் வேறு விதமாகப் பரவத் தொடங்கி இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

தனுஷ் மீது குற்றச்சாட்டு வைத்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதற்கு அவர் விளக்கம் கொடுத்து வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

அதில் அவர் பேசியதாவது, ``அட்ஜஸ்ட்மென்ட் குற்றச்சாட்டு வைத்ததாக ஒரு செய்தி பரவி வருகிறது. அது முற்றிலும் தவறானது. நான் தனுஷை எந்த இடத்திலும் குறை சொல்லவில்லை, தனுஷ் மீது நான் அட்ஜஸ்ட்மென்ட் குற்றச்சாட்டு வைக்கவில்லை. அவருடைய மேனேஜர் என்று ஒருவர் எனக்கு போன் செய்து பேசினார், அவர் உண்மையில் மேனேஜரா அல்லது வேறொரு நபரா என்று எனக்கு தெரியாது.

இப்படியும் சினிமா துறையில் வாய்ப்பு தேடி வருபவர்களுக்கு பிரச்சனை இருக்கிறது என்றுதான் நான் சொல்ல வந்தேன். இது ஒரு விழிப்புணர்வாக தான் நான் பேசினேன். ஆனால் இது தவறான விதத்தில் போய்க் கொண்டிருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க தான் இந்த வீடியோவை வெளியிடுகிறேன்” என்று பேசியிருக்கிறார்.

Keerthy Suresh: "அந்த மாதிரி டிரெஸ் போட்டிருந்தேனானு..." - ஏ.ஐ எடிட்கள் குறித்து கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் 'ரிவால்வர் ரீட்டா' திரைப்படம் இம்மாத ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அப்படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளில் இப்போது கீர்த்தி சுரேஷ் களமிறங்கிவிட்டார். இன்று அப்படத்திற்காக செய... மேலும் பார்க்க

"என் பெயரை வைத்து தவறான செயலில் ஈடுபடுகிறார்கள்" - தனுஷின் மேலாளார் ஸ்ரேயாஸ் அளித்த விளக்கம்!

சின்னத்திரை நடிகையான மான்யா ஆனந்த் அண்மையில் யூடியூப் நேர்காணல் ஒன்றில், "நடிகர் தனுஷின் மேலாளர் ஸ்ரேயஸ் என ஒருவர் என்னைத் தொடர்புகொண்டு ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்தினார். பிறக... மேலும் பார்க்க

Roja: "பவன் கல்யாண் பண்ற தப்பை விஜய் சார் பண்ணக்கூடாது" - ரோஜா பேட்டி

ஆந்திர அரசியலில் பரபரப்பாக இயங்கி வந்தார் நடிகை ரோஜா. சினிமாவிலிருந்து விலகிய அவர் முழுமையாக அரசியலில் கவனம் செலுத்திவந்தார். 12 வருட இடைவெளிக்குப் பிறகு இப்போது கங்கை அமரனுடன் 'லெனின் பாண்டியன்' படத்... மேலும் பார்க்க

’தேவதைக்குத் தந்தையாகியுள்ள பிரேம்ஜிக்கு வாழ்த்துகள்’ - வல்லமை பட இயக்குநர் நெகிழ்ச்சி

நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி மற்றும் இந்து தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்ததாக 'வல்லமை’ பட இயக்குநர் கருப்பையா முருகன் தனது ஃபேஸ்புக் மூலம் தெரிவித்துள்ளார்.இந்த செய்தி வெளியானதையடுத்து, திரையுலக... மேலும் பார்க்க

''இது யாரும் செய்திடாத சாதனை" - தனி ஒருவராக முழு படத்தையும் எடுத்திருக்கும் சங்ககிரி ராஜ்குமார்

எப்போதுமே ஒரு திரைப்படத்தை முழுமையாக எடுத்து முடிப்பதற்கு, அத்தனை துறைகளிலிருந்தும் பலரின் பங்களிப்பு தேவைப்படும். தனி நபரால் ஒரு திரைப்படத்தை எடுத்து முடிக்கமுடியுமா எனக் கேட்டால், அனைவரின் பதிலும் ச... மேலும் பார்க்க