செய்திகள் :

"படங்களை மார்பிங் செய்து வெளியிட்டது தமிழகத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண்தான்"-அனுபமா பரமேஸ்வரன்

post image

நடிகை அனுபமா பரமேஸ்வரன் பெயரில் இன்ஸ்டாகிராமில் போலிக் கணக்கு தொடங்கப்பட்டு, அதில் அவரது புகைப்படங்களை மார்பிங் செய்து சிலர் பதிவிட்டு வருவதாக புகார்கள் எழுந்தன. இந்த விவகாரத்தில் குற்றவாளி யார் என்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அது தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 வயது பெண் எனவும் அனுபமா தெரிவித்திருக்கிறார்.

அனுபமா பரமேஸ்வரன்
அனுபமா பரமேஸ்வரன்

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "சில நாட்களுக்கு முன்பு, என்னைப் பற்றியும், என் குடும்பத்தாரைப் பற்றியும், என் நண்பர்கள் மற்றும் சக நடிகர்களையும் டேக் செய்தும், மிகவும் தவறான மற்றும் பொய்யான தகவல்களை வெளியிட்ட ஒரு இன்ஸ்டாகிராம் பக்கம் இருப்பதை அறிந்தேன்.

அந்த பதிவுகளில் தரக்குறைவாக எடிட் செய்யப்பட்ட புகைப்படங்களையும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் இருப்பதையும் பார்த்தேன். இவ்வளவு குறிவைத்து செய்யப்படும் இணையத் தாக்குதலை வருத்தத்தைக் கொடுத்தது.

மேலும் விசாரணையில், அதே நபர் பல போலி கணக்குகளை உருவாக்கி, என்னைச் சார்ந்த ஒவ்வொரு பதிவிலும் பிழையான கருத்துக்களை இடுவதன் மூலம் வெறுப்பை பரப்ப முயன்றது தெரியவந்தது.

இதை அறிந்தவுடன், உடனே கேரள சைபர் குற்றப்பிரிவில் புகார் செய்தேன். அவர்கள் விரைவாகவும் திறம்படவும் செயல்பட்டனர், அவர்களின் உதவியால், இந்தச் செயல்களின் பின்னால் இருந்த நபர் கண்டறியப்பட்டார்.

அந்த நபர் தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 வயது பெண் என்று தெரியவந்தது. எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

அவளின் வயதைக் கருத்தில்கொண்டும், அவளின் எதிர்காலம் மற்றும் மன அமைதிக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும், அவளின் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் இருக்க விரும்புகிறேன்.

ஆனால், இந்தச் சம்பவத்தைப் பகிர்வதன் மூலம் ஒரு விஷயத்தை தெளிவாகச் சொல்ல நினைக்கிறேன்.

அனுபமா பரமேஸ்வரன்
அனுபமா பரமேஸ்வரன்

ஒரு ஸ்மார்ட்போன் வைத்திருப்பது அல்லது சமூக ஊடகங்களில் கணக்கு வைத்திருப்பது என்பது யாருக்கும் மற்றவர்களை தொந்தரவு செய்ய, அவதூறு பரப்ப, அல்லது வெறுப்பை விதைக்க உரிமை கொடுப்பதாக ஆகாது.

ஆன்லைனில் செய்யப்படும் ஒவ்வொரு செயலுக்கும் தடயமுண்டு, அதற்கான பொறுப்பை சம்பந்தப்பட்டவர்கள் ஏற்றே ஆக வேண்டும்.

நாங்கள் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். அந்த நபர் தன் செயல்களுக்கு ஏற்ப விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

ஒரு நடிகை அல்லது பொதுமக்கள் மத்தியில் அறியப்பட்ட நபராக இருப்பதால் அடிப்படை உரிமைகளை அற்று நிற்க முடியாது. இணைய தாக்குதல் ஒரு தண்டனைக்குரிய குற்றம். சமூகவலைதளங்களில் உங்களின் செயல்பாட்டுக்கான பொறுப்பை நீங்கள் ஏற்றுதான் ஆக வேண்டும்.

கேரள திரைப்பட விருதுகள்: "குழந்தைகளுக்கான படங்கள் எங்கே?" - ஆதங்கப்பட்ட நடிகர் பிரகாஷ் ராஜ்

கேரள மாநிலத்தின் 55-வது திரைப்பட விருது நிகழ்வு நேற்று நடைபெற்றது. விருதாளர்கள் தேர்வுக் குழுவில் பிரகாஷ் ராஜ் தலைமையிலான விருதுகளுக்கான நடிகர்களைத் தேர்வு செய்தனர்.அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந... மேலும் பார்க்க

கேரள அரசு விருது: "நானும் இந்தத் தலைமுறையைச் சேர்ந்தவன்தான்" - சிறந்த நடிகர் விருது பெறும் மம்மூட்டி

கேரள மாநில அரசு சார்பில் ஆண்டுதோறும் சினிமா விருது அறிவிக்கப்பட்டு வருகிறது. 2024-ம் ஆண்டுக்கான சினிமா விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அதில் சிறந்த நடிகருக்கான விருது மம்மூட்டிக்கு அறிவிக்கப்பட்டுள்... மேலும் பார்க்க

"மம்மூட்டிக்கு விருது கொடுக்க அவர்களுக்கு தகுதியில்லை" - தேசிய விருதுகள் குறித்து பிரகாஷ் ராஜ்

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மம்மூட்டி, 2025 ஆம் ஆண்டுக்கான கேரள மாநில திரைப்பட விருதுகளில் 'பிரம்மயுகம்' படத்திற்காக 'சிறந்த நடிகர்' விருதைப் பெற்றுள்ளார்.'பிரம்மயுகம்' படத்திற்காக மம்மூட்டிக்கு... மேலும் பார்க்க

"விருதுகள் என்பது போட்டியை ஏற்படுத்த அல்ல" - 'சிறந்த நடிகர்' விருதைப் பெற்ற மம்மூட்டி

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மம்மூட்டி, 2025 ஆம் ஆண்டுக்கான கேரள மாநில திரைப்பட விருதுகளில் 'பிரம்மயுகம்' படத்திற்காக 'சிறந்த நடிகர்' விருதைப் பெற்றுள்ளார்.இதையடுத்து வாழ்த்துத் தெரிவித்து மம்மூட... மேலும் பார்க்க

Dies Irae Review: மிரட்டும் மேக்கிங்; திகிலூட்டும் பேய்; ஆனா அது மட்டுமல்ல! இந்த ஹாரர் எப்படி?

அமெரிக்காவில் ஆர்கிடெக்டாக இருக்கும் ரோஹன் (பிரணவ் மோகன்லால்) சில நாட்கள் தன்னுடைய சொந்த ஊரான எர்ணாகுளத்திற்கு வருகிறார். ரோஹன் இங்கு வந்திருக்கும் நேரத்தில் அவருடைய பள்ளித் தோழி கனி தற்கொலை செய்கிறார... மேலும் பார்க்க