KAANTHA Team Exclusive Interview | Dulquer Salmaan, Rana Daggubati, Samuthirakan...
BB Tamil 9: "நீங்க தாராளமா வெளிய வந்துரலாம்" - அரோராவிடம் காட்டமான விஜய் சேதுபதி
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 4 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் 5 பேர் வெளியேறிய நிலையில் கடந்த வாரம் புதிதாக பிரஜின், சாண்ட்ரா, அமித் பார்கவ், திவ்யா கணேஷ் என நான்கு பேர் வைல்டு கார்டு மூலம் உள்ளே சென்றிருந்தனர்.

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் போட்டியாளர்களுக்கு 'ஆஹா ஓஹோ ஹோட்டல்' என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. அந்த ஹோட்டல் டாஸ்க்கில் கெஸ்ட் ஆக பழைய பிக் பாஸ் போட்டியாளர்களான தீபக், பிரியங்கா, மஞ்சரி உள்ளே வந்திருந்தனர்.
வழக்கம்போல இந்த டாஸ்க்கிலும் போட்டியாளர்களுக்குள் கலவரம் வெடித்தது.
இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் இரண்டாவது புரோமோவில், "நாட்களைக் கடந்தா போதும் என் அக்கவுண்ட்ல பணம் ஏறிறும்னு இந்த வீட்டில செயல்படுறது யாரு?" என விஜய் சேதுபதி கேட்க எல்லோரும் அரோராவைக் கைக்காட்டுகின்றனர்.

"எல்லா யுக்தியும் தெரியும். ஆனா விளையாட மாட்டிங்குறாங்க", "யாரையும் காயப்படுத்திடக்கூடாது'னு பேசவே மாட்டிங்குறாங்க" என அரோராவைச் சொல்கின்றனர்.
"வெளிய போணும்னா சொல்லிடுங்க. நானே பிக் பாஸ் கிட்ட சொல்லிடுறேன். தாராளமா வெளிய வந்துரலாம்" என்று விஜய் சேதுபதி அரோராவிடம் காட்டமாகப் பேசுகிறார்.


















