செய்திகள் :

தூத்துக்குடி: ”லேசாகதான் வெட்டினேன்; ஆனால்” - கொலை வழக்கில் சரண்டரான ரவுடி இசக்கிமுத்து வாக்குமூலம்

post image

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் – திருச்செந்தூர் சாலையோரம் கடந்த மாதம் 17-ம் தேதி, அதே பகுதியைச் சேர்ந்த அருண் செல்வம் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து சிவந்திபட்டி காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், கொலை செய்யப்பட்ட அருண் செல்வத்தின் அண்ணன் கார்த்திக்கிற்கும், ஆதிச்சநல்லூரைச் சேர்ந்த பிரபல ரவுடியான இசக்கிமுத்து என்பவருக்கும் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்விரோதம் இருந்தது தெரிய வந்தது.

சிவந்திபட்டி காவல் நிலையம்
சிவந்திபட்டி காவல் நிலையம்

இந்த முன்விரோதத்தின் காரணமாக இசக்கிமுத்துவின் நண்பரான வள்ளிமுத்து என்பவரை போலீஸார் ஏற்கெனவே கைது செய்தனர். தலைமறைவாக இருந்த இசக்கிமுத்துவை போலீஸார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் நாங்குநேரி நீதிமன்றத்தில் அவர் சரணடைந்தார். இதனையடுத்து அருண் செல்வம் கொலை வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட இசக்கிமுத்து மீது ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கும் நிலுவையில் இருந்ததால், அன்றைய தினமே சென்னை போலீஸார் அவரை சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.

சென்னை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அருண் செல்வம் கொலை வழக்கு குறித்து விரிவான விசாரணை நடத்திட சிவந்திபட்டி காவல் நிலைய போலீஸார், அவரை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

அப்போது போலீஸாரின் விசாரணையில் பேசிய அவர், “கடந்த ஆண்டு அருண் செல்வத்தின் ஊர் வழியாக  நான் சென்றபோது திருட வந்ததாகக் கூறி ஊர் மக்களுடன் சேர்ந்து என்னை போலீஸில் பிடித்துக் கொடுத்தார். இதனால் எனக்கும் அவருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது.

சிவந்திபட்டி காவல் நிலையம்
சிவந்திபட்டி காவல் நிலையம்

இந்தச் சூழலில் சமீபத்தில் கார் கண்ணாடி உடைப்பு பிரச்னையும் ஏற்பட்டதால் அவர் மீது கோபம் இன்னும் அதிகமானது. இந்த நிலையில்தான் கடந்த மாதம் 17-ம் தேதி டாஸ்மாக் கடையில் அருண் செல்வத்தைப் பார்த்தேன்.

அவரை அரிவாளால் லேசாக வெட்டி மிரட்டி அனுப்பலாம் என நினைத்து லேசாகத்தான் வெட்டினேன். ஆனால், அந்த அரிவாள் வெட்டில் அவர் உயிரிழந்தது பிறகுதான் தெரிந்தது. உடனே அங்கிருந்து தப்பி ஓடிவிட்டேன்” என்றார்.

இசக்கிமுத்து மீது 4 கொலை வழக்குகள் உட்பட 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன.

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர், தலைமையாசிரியர் மீது போக்சோ வழக்கு பதிவு

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் ஆசிரியர் மீதும், அவர்மீது நடவடிக்கை எடுக்காத தலைமையாசிரியர் மீதும் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியு... மேலும் பார்க்க

இளம்பெண்ணைக் கொன்று மூட்டைகட்டி வீசிய ஜோடி; சாலையோரம் தவித்த கைக்குழந்தை - பகீர் பின்னணி

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அருகேயுள்ள கழிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவ விவசாயி சக்திவேல். இவரின் மனைவி அம்சா (வயது 28). இவர்களுக்கு 4 வயதில் நிவிஸ்தா என்ற மகளும், ஒன்றரை வயதில் நிவிலன் என்... மேலும் பார்க்க

கொல்கத்தா: 4 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை; ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட அவலம்

கொல்கத்தாவில் நான்கே வயதாகும் சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.நாடோடி சமூகத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமி தனது பாட்டியுடன் கொல்கத்தா தாரகே... மேலும் பார்க்க

ராஜபாளையம்: முதியோரின் ATM கார்டைப் பயன்படுத்தி நூதனத் திருட்டு; சகோதரர்கள் கைதான பின்னணி என்ன?

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் முகில் வண்ணம் பிள்ளை தெருவைச் சேர்ந்த ரமேஷ் (57). இவர் அதே பகுதியில் உள்ள எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம்-ல் தனது ஏ.டி.எம் கார்டைப் பயன்படுத்தி பணம் எடுக்க வந்துள்ளார்.அப்போது ... மேலும் பார்க்க

காரைக்குடி : காருக்குள் கொலை செய்யப்பட்டு கிடந்த பெண்; நகைகள் திருட்டு; சிக்கிய டிரைவர்!

காருக்குள் பெண் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் காரைக்குடி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், டிரைவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Murder (Representational Image)ச... மேலும் பார்க்க

கோவை: ஆர்டர் போட்டது சோப்பு.. கிடைச்சது ஐபோன், லேப்டாப்.. ஃபிளிப்கார்ட் நிறுவனத்தில் பலே மோசடி

கோவை மாவட்டம், ஒத்தக்கால் மண்டபம் அருகே ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் அலுவலகம் இயங்கி வருகிறது. அங்கு சுமார் 1,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். மிகப்பெரிய குடோனும், வாடிக்கையாளர்கள் ஆ... மேலும் பார்க்க