செய்திகள் :

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர், தலைமையாசிரியர் மீது போக்சோ வழக்கு பதிவு

post image

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் ஆசிரியர் மீதும், அவர்மீது நடவடிக்கை எடுக்காத தலைமையாசிரியர் மீதும் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போக்சோ வழக்கு
போக்சோ வழக்கு

மதுரை திருப்பரங்குன்றம் சாலையில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியர் ஜெயராம் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வதாகவும், இதுகுறித்து புகார் செய்தும் தலைமையாசிரியை பொற்செல்வி, உதவி தலைமையாசிரியை கிருஷ்ணவேணி எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என 7 மாணவிகள் சைல்ட் லைனிலும், போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் தெரிவித்தனர்.

புகாரில், "ஆசிரியர் ஜெயராம் மூலம் எங்களுக்கு பாலியல் கொடுமைகள் நடக்கின்றன. இதற்கு தலைமையாசிரியை, உதவி தலைமையாசிரியை உடந்தையாக உள்ளனர். வகுப்பறையில் எந்நேரமும் ஆபாசமாகப் பேசுகிறார்கள். மாணவர்கள் வகுப்புக்கு மது அருந்திவிட்டு வருகிறார்கள். இதுகுறித்து பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை இல்லை, வகுப்பறையிலிருந்த கண்கானிப்பு கேமிராக்களை வெளியில் மாட்டினார்கள். மாணவிகளையும், பெற்றோர்களையும் ஆசிரியர்கள் தகாத வார்த்தைகளில் பேசுகிறார்கள். உங்களுக்கு விருப்பம் இருந்தால் இங்கே படியுஙகள் என்று சொல்கிறார்கள். ஆசிரியர் ஜெயராம் மாணவிகளைத் தொடுவது, மொபைலில் ஆபாச வீடியோக்களை காண்பிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்" என்று தெரிவித்துள்ளனர்.

போக்சோ
போக்சோ

இதைத்தொடர்ந்து புகாரின் அடிப்படையில் ஆசிரியர் ஜெயராம், தலைமையாசிரியை, உதவி தலைமையாசிரியை மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த மதுரை திலகர் திடல் மகளிர் காவல்துறையினர், இப்புகார் குறித்தும் இப்பள்ளி ஆசிரியர்கள் மீதான மேலும் சில புகார்கள் குறித்தும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

தூத்துக்குடி: ”லேசாகதான் வெட்டினேன்; ஆனால்” - கொலை வழக்கில் சரண்டரான ரவுடி இசக்கிமுத்து வாக்குமூலம்

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் – திருச்செந்தூர் சாலையோரம் கடந்த மாதம் 17-ம் தேதி, அதே பகுதியைச் சேர்ந்த அருண் செல்வம் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.இதுகுறித்து சிவந்திபட்டி காவல் நிலைய... மேலும் பார்க்க

இளம்பெண்ணைக் கொன்று மூட்டைகட்டி வீசிய ஜோடி; சாலையோரம் தவித்த கைக்குழந்தை - பகீர் பின்னணி

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அருகேயுள்ள கழிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவ விவசாயி சக்திவேல். இவரின் மனைவி அம்சா (வயது 28). இவர்களுக்கு 4 வயதில் நிவிஸ்தா என்ற மகளும், ஒன்றரை வயதில் நிவிலன் என்... மேலும் பார்க்க

கொல்கத்தா: 4 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை; ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட அவலம்

கொல்கத்தாவில் நான்கே வயதாகும் சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.நாடோடி சமூகத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமி தனது பாட்டியுடன் கொல்கத்தா தாரகே... மேலும் பார்க்க

ராஜபாளையம்: முதியோரின் ATM கார்டைப் பயன்படுத்தி நூதனத் திருட்டு; சகோதரர்கள் கைதான பின்னணி என்ன?

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் முகில் வண்ணம் பிள்ளை தெருவைச் சேர்ந்த ரமேஷ் (57). இவர் அதே பகுதியில் உள்ள எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம்-ல் தனது ஏ.டி.எம் கார்டைப் பயன்படுத்தி பணம் எடுக்க வந்துள்ளார்.அப்போது ... மேலும் பார்க்க

காரைக்குடி : காருக்குள் கொலை செய்யப்பட்டு கிடந்த பெண்; நகைகள் திருட்டு; சிக்கிய டிரைவர்!

காருக்குள் பெண் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் காரைக்குடி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், டிரைவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Murder (Representational Image)ச... மேலும் பார்க்க

கோவை: ஆர்டர் போட்டது சோப்பு.. கிடைச்சது ஐபோன், லேப்டாப்.. ஃபிளிப்கார்ட் நிறுவனத்தில் பலே மோசடி

கோவை மாவட்டம், ஒத்தக்கால் மண்டபம் அருகே ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் அலுவலகம் இயங்கி வருகிறது. அங்கு சுமார் 1,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். மிகப்பெரிய குடோனும், வாடிக்கையாளர்கள் ஆ... மேலும் பார்க்க