2026-ம் ஆண்டு தங்கம் விலை எதுவரை செல்லும்? உலக வங்கிகளின் கணிப்புகள்
Rukmini Vasanth: "அந்த அழைப்பும் செய்திகளும் போலியானவை"- ருக்மிணி வசந்த் எச்சரிக்கை
தமிழில், விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’ படம் மூலம் அறிமுகமானவர் கன்னட நடிகை ருக்மிணி வசந்த். அதைத் தொடர்ந்து, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய ‘மதராஸி’ என தமிழில் நடித்தார். சமீபத்தில் வெளியான `காந்தாரா சாப்டர் 1' படத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் ஹீரோவாக நடிக்கும் பான் இந்தியா படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், செல்போன் எண் ஒன்றைக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.
அதில், “அந்த செல்போன் எண்ணைப் பயன்படுத்தும் ஒருவர், என்னைப்போல ஆள்மாறாட்டம் செய்து பல்வேறு நபர்களைத் தொடர்பு கொள்வது எனது கவனத்துக்கு வந்துள்ளது. அது என்னுடைய எண் இல்லை.
அதிலிருந்து வரும் அழைப்பும் செய்திகளும் போலியானவை. தயவுசெய்து அதற்கு பதிலளிக்கவோ அவரைத் தொடர்புகொள்ளவோ வேண்டாம்.
இந்த ஆள்மாறாட்டம் சைபர் குற்றத்தின் கீழ் வருகிறது. எந்த விஷயத்துக்கும் நேரடியாக என்னை அல்லது எனது டீமைத் தொடர்பு கொள்ளலாம்” என தெரிவித்திருக்கிறார்.














