செய்திகள் :

`பவர் முக்கியம் அமைச்சரே!’ ஜெயலலிதா குட்புக்கில் இருந்த எம்.சி.சம்பத், தவெகவில் தஞ்சமடைந்த பின்னணி!

post image

தமிழகத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றிபெற்றதையடுத்து, அதன் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அதே போல இந்தத் தேர்தலில் 47 இடங்களில் வெற்றிபெற்ற அ.தி.மு.க, எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையிலும் இரண்டாக உடைந்தது.

13.05.2026 அன்று சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் தீர்மானத்தை முதல்வர் விஜய் முன்மொழிந்தபோது, அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான 22 எம்.எல்.ஏ-க்கள் எதிர்த்தனர்.

அதேசமயம் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான 25 எம்.எல்.ஏ-க்கள் த.வெ.க-வுக்கு ஆதரவளித்தனர். அதன் காரணமாக விஜய் தலைமையிலான த.வெ.க ஆட்சி 144 எம்.எல்.ஏ-க்களுடன் மெஜாரிட்டியை நிரூபித்தது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

அதையடுத்து த.வெ.க-வுக்கு ஆதரவு கொடுத்த எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர், எம்.சி.சம்பத், அருண்மொழித்தேவன் உள்ளிட்ட பலரை கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கி உத்தரவிட்டார் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

மேலும், நீக்கப்பட்டிருந்தவர்களால் ஓரம் கட்டப்பட்டிருந்தவர்களுக்கும், கட்சியால் டம்மியாக்கப்பட்டிருந்தவர்களுக்கும் பொறுப்புகளை வழங்கினார் எடப்பாடி பழனிசாமி. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில், கடலூர் வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்த எம்.சி.சம்பத்தின் பதவி பறிக்கப்பட்டு, முன்னாள் அமைச்சர் எம்.சி.தாமோதரனுக்கு வழங்கப்பட்டது.

அதேபோல மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்த அருண்மொழித்தேவனின் பதவி பறிக்கப்பட்டு, நெய்வேலி தொகுதியில் எம்.எல்.ஏ சொரத்தூர் ராஜேந்திரனுக்கு கொடுக்கப்பட்டது.

தற்போது கடலூர் வடக்கு மாவட்டச் செயலாளர் பதவியைப் பெற்றிருக்கும் எம்.சி.தாமோதரன், முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத்தின் உடன் பிறந்த மூத்த சகோதரர். 1991 சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் நெல்லிக்குப்பம் தொகுதியில் வெற்றிபெற்ற தாமோதரனை, தன்னுடைய முதல் அமைச்சரவையில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராக அமர வைத்தார் ஜெயலலிதா.

அடுத்து வந்த 1996 தேர்தலில் அந்தத் தொகுதியில் தாமோதரனின் மனைவியை நிறுத்த நினைத்தார் ஜெயலலிதா. ஆனால் தாமோதரன் அதற்கு ஒப்புக் கொள்ளாததால் அவரை டம்மியாக்கிய ஜெயலலிதா, அவரிடம் இருந்த மாவட்டச் செயலாளர் பதவியைப் பறித்து எம்.சி.சம்பத்துக்கு வழங்கினார்.

அதையடுத்து ஜெயலலிதா இறக்கும் வரை அவரது குட்புக்கில் இருந்த சம்பத், கடலூர் மாவட்டத்தின் குறுநில மன்னராக வலம் வந்தார்.

எம்.சி.சம்பத்

அ.தி.மு.க ஆட்சியில் அமரும்போதெல்லாம் அமைச்சராகவே இருந்தார் எம்.சி.சம்பத். அவரைத்தான் இப்போது ஓரம்கட்டினார் எடப்பாடி பழனிசாமி. அதன்பிறகு தன்னுடைய ஆதரவாளர்களுடன் கட்சி அலுவலகத்தைக் கைப்பற்ற நினைத்தார் எம்.சி.சம்பத்.

ஆனால் அதுவும் புதிய மாவட்டச் செயலாளர் தாமோதரன் வசமே சென்றது. பெரும்பாலான கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் புதிய மாவட்டச் செயலாளர் பக்கமே நின்றதால் நொந்துபோனார் எம்.சி.சம்பத். மேலும், புதிய மாவட்டச் செயலாளர் உடன்பிறந்த அண்ணன் என்பதால், அமைதியாக ஒதுங்கிக் கொண்டார்.

ஆனால் அதிகாரத்தை சுவைத்தவர்களால் ஒருபோதும் அமைதியாக இருக்க முடியாது என்பது, அரசியல் அரிச்சுவடி சொல்லும் பாடங்களில் ஒன்று. அதன்படி, `பவர் முக்கியம் அமைச்சரே…!' என்ற ரீதியில் த.வெ.க பொதுச் செயலாளர் மற்றும் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் த.வெ.க-வில் இணைந்திருக்கிறார் எம்.சி.சம்பத்.

திருப்பரங்குன்றம் தூண் விவகாரம்: ``அமைச்சரின் பேச்சைக் கண்டிக்கிறேன்" - தமிழிசை காட்டம்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தனி நீதிபதியின் உத்தரவின் அடிப்படையில் தீபம் ஏற்றாததால், பதியப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழ்நாடு அரசு தன் நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும் என உயர்... மேலும் பார்க்க

'தவெக-வின் கொள்கை குறித்து அதிகம் பேசினார்' - TVK-வில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன்

எம்.எஸ்.எம். ஆனந்தன், அ.தி.மு.க- வின் இரண்டாம் கட்ட தலைவர்களில் ஒருவராக விளங்கியவர். விவசாயம் மற்றும் வணிக குடும்பப் பின்னணியைக் கொண்ட இவர், 2011-ம் ஆண்டு முதன் முதலாக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க த... மேலும் பார்க்க

CPI அலுவலகத்திற்குச் சென்ற ப.சிதம்பரம்; இடதுசாரிகளைக் கூட்டணிக்குள் இழுக்க முயற்சியா?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்திற்குச் சென்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியனை காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் சந்தித்திருக்கிறார்.இடதுசாரிகளைக் கூட்டணியில் சேர்க்க ப.சிதம்பரம் மு... மேலும் பார்க்க

Vijay: 'முதல்வர் விஜய் செய்தியாளர்களைச் சந்திக்க மறுப்பது ஏன்?'- நிர்மல்குமார் சொல்லும் காரணம் என்ன?

மதுரை அழகர் கோவில் சாலை பகுதியிலுள்ள அரசு சுற்றுலா மாளிகையில் அமைச்சர் நிர்மல்குமார் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமை... மேலும் பார்க்க

CJP: டெல்லி வந்த கரப்பான் பூச்சி கட்சி நிறுவனர் அபிஜீத் - ஜந்தர் மந்தரில் நடக்கும் போராட்டம்!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) என்ற அமைப்பின் நிறுவனர் அபிஜீத் திப்கே டெல்லியில் பிரம்மாண்ட போராட்டத்த... மேலும் பார்க்க

TVK: 'அன்று விஜய்யைக் கடுமையாக விமர்சித்தார்; ஆனால், இன்று...' - தவெக-வில் இணைந்த கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் அருகிலுள்ள சிதம்பராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கடம்பூர் ராஜூ. அடிப்படையில் ஒரு இடைநிலை ஆசிரியர். இதே ஊரில் உள்ள தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். எம்.ஜி.ஆர... மேலும் பார்க்க