செய்திகள் :

புதிய அரசு: காத்திருக்கும் பொருளாதாரச் சவால்கள்!

post image

தமிழ்நாட்டின் அரசியல் சூழலில், தனிப் பெரும்பான்மை இல்லாத நிலை, குழப்பமான கூட்டணிக் கணக்குகள், ஸ்திரமான ஆட்சியின் மீதான சந்தேகம் ஆகிய அனைத்தும் சேர்ந்து மாநிலத்தின் பொருளாதார எதிர்காலத்தைப் பற்றிய கவலையை அதிகரித்துள்ளன.

‘அமையவிருக்கும் அரசு தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் தொடர வைக்குமா அல்லது கடன் அதிகரிப்பு, வேலை இழப்பு, நிதி அழுத்தம் ஆகியவற்றின் சுழலில் தள்ளுமா?’ என்பது இந்தத் தருணத்தின் முக்கியக் கேள்வி.

தமிழ்நாடு தற்போது நாட்டிலேயே பெரிய பொருளாதாரமாக உள்ளது. 2025-26 நிதியாண்டில் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் ரூ.35.67 லட்சம் கோடி. வளர்ச்சி விகிதம் 10.8%; இது இந்திய சராசரியைவிட அதிகம்.

இந்தியாவின் மிகப்பெரிய உற்பத்தி மையங்களில் ஒன்று தமிழ்நாடு. ஆட்டோமொபைல், எலெக்ட்ரானிக்ஸ், மின்வாகனம், ஐ.டி, ஏற்றுமதி மற்றும் தொழில்துறை சார்ந்த வேலைவாய்ப்புகளில் நாட்டிலேயே முதலிடம் என நடைபோடுகிறது. இந்த வலுவான பொருளாதார அடித்தளத்தைத் தொடர்ந்து நிலைத்திருக்கச் செய்வது, அமையவிருக்கும் அரசுக்கு உள்ள மிகப்பெரும் பொறுப்பு. தவறான முடிவுகள் எடுத்தால், ‘முன்னிலை’ என்ற இடம் சில ஆண்டுகளில் சரிந்துபோகும் அபாயம் இருக்கிறது.

தற்போதைய நிலவரப்படி, தமிழ்நாடு அரசின் கடன் ரூ.9.3 லட்சம் கோடி. கடன் தவறல்ல; ஆனால் அதன் அளவும், அது எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பதுமே முக்கியம். உள்கட்டமைப்பு வசதிகள், தொழில் பூங்காக்கள், உற்பத்தி மையங்கள் போன்ற எதிர்காலத்தில் வருமானத்தைக் கொண்டுவரும் விஷயங்களுக்கான கடன்கள் அவசியமானவையே. ஆனால், அரசியலுக்காக அறிவிக்கப்பட்ட இலவசங்கள், வருவாயைக் குறைக்கும் வகையிலான திட்டங்கள் ஆகியவற்றால் உருவாகும் கடன்கள், பெரும் சுமையாக மாறும்.

தமிழ்நாட்டின் மிகப்பெரிய நிதிச் சிக்கல் என்னவென்றால், அரசின் வருவாயில் பெரும் பகுதி கடனுக்கான வட்டி செலுத்தவும், பழைய கடன்களை அடைக்கவும், ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கவும் சென்று கொண்டிருக்கிறது. இதனால் புதிய முதலீட்டு செலவினங்களுக்கான வெளி குறைகிறது. இந்தச் சூழலில் கடனும் அதிகரிக்காமல், வளர்ச்சியையும் தக்கவைக்கும் வகையில் திட்டங்களை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகிறது.

தமிழ்நாட்டின் மிகப்பெரிய பலமான தொழில் முதலீடுகள் எந்த வகையிலும் அரசியலால் பாதிக்கக் கூடாது. அதிகரிக்கும் வேலை இழப்பு, விலைவாசி ஏற்றம், தொழில்துறையை பாதிக்கும் சர்வதேச காரணிகள் எனப் பல முக்கியப் பிரச்னைகள் வரிசைகட்டிக் காத்திருக்கின்றன. எனவே, நீண்டகால இலக்கு அடிப்படையிலான நலத்திட்டங்கள் மற்றும் வீண்செலவு கட்டுப்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

கடனைக் கட்டுப்படுத்தி, அனைவருக்குமான வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும் புதிய அரசு. தமிழ்நாட்டின் ‘ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம்’ இலக்கு நிறைவேற வேண்டும்.

- ஆசிரியர்

'மக்களவையில் வேற இடம் கொடுங்க, காங்கிரஸுடன் எங்களால்.!'- மக்களவை சபாநாயருக்கு கனிமொழி கோரிக்கை

நடந்து முடிந்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கட்சி தோல்வியைத் தழுவிய நிலையில், த.வெ.க அதிக இடங்களை வென்ற தனிக்கட்சியாக உள்ளது. ஆனாலும் தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைப்பதற்கான எண்ணிக்கை த.வெ.கவி... மேலும் பார்க்க

`உலக நாடுகளுக்கு 10% வரி சட்டத்திற்குப் புறம்பானது' - நீதிமன்ற தீர்ப்பு; மீண்டும் சறுக்கிய ட்ரம்ப்

கடந்த ஏப்ரல் மாதம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலக நாடுகளின் மீது பரஸ்பர வரியை அறிவித்தார். வரி அமலாகும் தேதியில் பல நீட்டிப்புகள் இருந்தாலும், ஆகஸ்ட் மாதம் பரஸ்பர வரி அமலுக்கு வந்தது. பரஸ்பர வரியை 'சட்ட... மேலும் பார்க்க

கோவில்பட்டி: கனிமொழிக்கு வழங்கப்பட்ட அசைன்மென்ட்; கைகொடுத்த சமூக வாக்குகள் - திமுக சாதித்த பின்னணி!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 6 தொகுதிகளில், தி.மு.க-வும் த.வெ.க-வும் தலா 3 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கின்றன. இதில், ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவிர 5 தொகுதிகளிலும் அ.... மேலும் பார்க்க

'ஆதரவு கோர விரும்பும் அரசியல் தலைவர்களை விஜய் நேரில் சந்தித்திருக்க வேண்டாமா?'- சிந்தனை செல்வன்

விஜய்யின் தவெக பெரும்பான்மையை நிரூபிக்க விசிகவிடம் ஆதரவு கோரியிருக்கும் நிலையில், வாட்ஸ்ஆப்பில் ஆதரவு கேட்டு கடிதத்தை அனுப்பிவிட்டு பதில் சொல்லுங்கள் என்பதை எப்படி புரிந்து கொள்வது? என்று விசிக பொதுச்... மேலும் பார்க்க

தவெக: `விஜய் வளர விடக்கூடாது என்ற நோக்கில், திமுக அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கக்கூடும்' - எஸ்.வி.சேகர்

தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் குழப்பங்களுக்கு இடையே ஆட்சி அமைக்கப்போவது யார்? என்றக் கேள்வியுடன் தேர்தல் முடிவு வெளியாகி 4 நாள்கள் ஆகியும் தொடர்கிறது. இந்த நிலையில், நடிகர் எஸ்.வி.சேகர் செய்தியாளர்க... மேலும் பார்க்க

கேரள முதல்வர் யார்? - முக்கோண மோதலில் காங்கிரஸ்!

கேரளத்தில் 102 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி வென்றும் முதல்வராக யாரை நியமிப்பது என காங்கிரஸ் தலைமை திணறிவருகிறது!கேரள மாநிலத்தில் மொத்தமுள்ள 140 சட்டமன்றத் தொகுதிகளில், 102 தொகுதிகளை வாரிச்சுருட்டியது... மேலும் பார்க்க