செய்திகள் :

மகாராஷ்டிரா: சட்டமன்றம் செல்ல ரயில், காரில் பயணம்; இண்டிகோ விமானம் ரத்தால் அமைச்சர்கள் திண்டாட்டம்

post image

நாட்டில் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், எம்.பி.க்களும் தப்பவில்லை.

மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் ஒவ்வொரு ஆண்டும் மாநிலத்தின் எல்லையில் இருக்கும் நாக்பூரில் நடைபெறுவது வழக்கம்.

இதற்காக வழக்கமாக எம்.எல்.ஏ.க்கள் விமானத்தில் பயணம் செய்வது வழக்கம். ஆனால் இப்போது இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

IndiGo - இண்டிகோ
IndiGo - இண்டிகோ

மும்பையிலிருந்து ரயில் அல்லது கார் மூலம் நாக்பூர் செல்வதாக இருந்தால் 12 மணி நேரம் பிடிக்கும். எம்.எல்.ஏ.க்கள் இன்று தொடங்கிய குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்க இண்டிகோ விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து வைத்திருந்தனர். ஆனால் அதில் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன.

இதனால் வேறு வழியில்லாமல் எம்.எல்.ஏ.க்கள் கார் மூலமும் ரயில் மூலமும் நாக்பூர் சென்றனர்.

சிவசேனா (உத்தவ்) எம்.எல்.ஏ. அனில் பரப் ரயில் மூலம் நாக்பூர் சென்றதாக தெரிவித்துள்ளார். புனேயில் இருந்து பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுனில் காம்ப்ளே 12 மணி நேரம் காரில் பயணம் செய்து நாக்பூர் சென்றதாக தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல் ஒரு படி மேலே சென்று தனி விமானத்தை ஏற்பாடு செய்து நாக்பூருக்கு சென்றுள்ளார். அவருடன் 3 எம்.எல்.ஏ.க்களும் சேர்ந்துள்ளனர்.

மேலும் சில எம்.எல்.ஏ.க்கள் ரூ.35 ஆயிரம் கொடுத்து நாக்பூருக்கு வேறு விமானத்தில் சென்றதாக தெரிவித்தனர். கடைசி நேரத்தில் விமானம் ரத்து செய்யப்பட்டதால் ரயிலில் செல்லலாம் என்று டிக்கெட் கேட்க சென்றபோது, அங்கேயும் டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்திருந்தன.

சந்திரகாந்த் பாட்டீல்
சந்திரகாந்த் பாட்டீல்

இதனால் வேறு வழியில்லாமல் சில எம்.எல்.ஏ.க்கள் தங்களது காரில் நாக்பூருக்கு புறப்பட்டுச் சென்றனர். ஏற்கெனவே நாக்பூரில் இருந்து மும்பைக்கு புதிதாக போடப்பட்டுள்ள நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன.

இதனால் எம்.எல்.ஏ.க்கள் பயந்துகொண்டே காரில் பயணம் செய்தனர். விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் சட்டமன்ற கூட்டத்திற்கு முன்பாக வழக்கமாக நடைபெறும் தேனீர் விருந்தில் அதிகமான எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ள முடியவில்லை.

சட்டமன்ற கூட்டத்தொடர் முடிந்த பிறகு வரும் 14, 15-ம் தேதிகளில் நாக்பூரில் இருந்து மும்பைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று சட்டமேலவை தலைவர் ராம் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

பழைய கர்சீஃப்களை வைத்து இப்படியொரு சட்டையா? - இணையத்தை கலக்கும் ‘விண்டேஜ்’ டிசைன்!

ஃபேஷன் என்ற பெயரில் பல்வேறு விஷயங்களை செய்துவருகின்றனர். பழைய காலத்து ஆடைகளை நவீனமாக மாற்றுவதும், வித்தியாசமான பொருட்களை வைத்து ஆடைகளை வடிவமைப்பதும் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. அந்த வகையில், கைக்குட்... மேலும் பார்க்க

``வழுக்கை தலையில் முடி வளர மருந்து, சோதனையில் நல்ல பலன்'' - அயர்லாந்து மருந்துக் கம்பெனி சொல்வதென்ன?

ஆண்களுக்கு தலையில் முடி உதிர்ந்து வழுக்கையாக மாறுவது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. சிலருக்கு 70 வயதான பிறகும் முடி உதிர்ந்திராதிருக்கலாம். ஆனால் சிலருக்கு 20 வயதிலேயே முடி உதிர்ந்து வழுக்கையாகி இருப்பார... மேலும் பார்க்க

நிலநடுக்கத்தின்போது உயிரை காப்பாற்றிய ராணுவ வீரரையே திருமணம் செய்துகொள்ளும் பெண் - அடடே லவ் ஸ்டோரி

சீனாவில் ஏற்பட்ட கோர நிலநடுக்கத்திலிருந்து மீட்கப்பட்ட ஒரு பெண் 15 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது உயிரை காப்பாற்றிய ராணுவ வீரரை திருமணம் செய்து கொள்ள உள்ளார். 2008ஆம் ஆண்டு சீனாவின் வென்சுவான் மாகாணத்தில்... மேலும் பார்க்க

இண்டிகோ விமானத்துக்குள் பறந்த புறா; விரட்டி பிடித்த பணிப்பெண்கள் - வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய விதிமுறைகளால் இண்டிகோ விமான சேவை ஏற்கனவே நாடு முழுவதும் கடந்த ஒரு வாரமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் முன்பதிவு செய்திருந்த ரூ.600 கோடிக்கும் அதிகமான பணத்தை இண... மேலும் பார்க்க

களம்காவல்: `மொழி கடந்து பார்த்த ரசிகர்களுக்கு.!" - வைரலாகும் நடிகர் மம்மூட்டி வீடியோ

74 வயதிலும் அதே வேகத்துடனும், விவேகத்துடனும் திரையுலகில் பயணித்து வருபவர் நடிகர் மம்மூட்டி. கடந்த சில வருடங்களில் இவர் நடித்தப் படங்கள் காதல் தி கோர், பிரமயுகம், பீஷ்ம பர்வம் போன்ற படங்களும், கதைத் தே... மேலும் பார்க்க