செய்திகள் :

மதுபோதை: பழக்கடையில் வியாபாரியை தாக்கி பணம் பறித்த கும்பல் - சிவகாசியில் கொடூரம்

post image

சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட திருத்தங்கல்லிருந்து பள்ளப்பட்டி செல்லும் சாலை திருவள்ளுவர் காலனியில் வசிக்கும் ராமர் என்பவர் கக்கன் காலனியில் பழக்கடையுடன் குளிர்பானக் கடையும் நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது, கடைக்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த 6 பேர் கொண்ட இளைஞர்கள் கும்பல், மது போதையில் வியாபாரி ராமரிடம் மாமூல் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

மதுபோதை
மதுபோதை

ராமர் தன்னிடம் பணம் இல்லை எனக் கூறி பணம் கொடுக்க மறுத்ததால், ஆத்திரமடைந்த இளைஞர்கள் ராமரை சரமாரியாக தாக்கி, அவரிடமிருந்து 2,000 ரூபாய் பணத்தை பறித்துச் சென்றனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிவகாசி கிழக்குக் காவல் நிலைய போலீசார் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, ராமரின் கடையில் இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேர்களை வலைவீசித் தேடியுள்ளனர்.

வியாபாரியின் பணம் பறிப்பு

அதனைத் தொடர்ந்து சந்தோஷ், சாமுவேல்ராஜன் மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட 3 பேரை கைது செய்துள்ள போலீசார், தலைமறைவாயுள்ள மூவரை தேடி வருகின்றனர்.

மது போதையில் வியாபாரியிடம் மாமூல் கேட்டு அவர் மீது வாலிபர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் சிவகாசி மற்றும் திருத்தங்கல் நகர்ப் பகுதிகளின் மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கரூர் துயர சம்பவம்: த.வெ.க முக்கிய நிர்வாகிகள் சி.பி.ஐ விசாரணைக்கு ஆஜர்

த.வெ.க சார்பில் கரூர் வேலுச்சாமிபுரத்தில் மக்கள் சந்திப்பு கூட்டம் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி இரவு 7 மணியளவில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் உரையாற்றும் போது ஏற்பட்ட க... மேலும் பார்க்க

`US விசா கிடைக்காத விரக்தி' - உயிரை மாய்த்துக்கொண்ட மருத்துவர்; ஹைதராபாத்தில் சோகம்

ஆந்திரா மாநிலம் குன்டூரைச் சேர்ந்த 38 வயது மருத்துவர், அமெரிக்கா செல்வதற்கான விசா கிடைக்காததால் ஏற்பட்ட மன அழுத்தத்தின் விளைவாக, ஹைதராபாத்தில் உள்ள தனது அப்பார்ட்மெண்ட் வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்... மேலும் பார்க்க

திருமணமான ஒரு ஆண்டுக்குள் உயிரை மாய்த்த மனைவி; அமைச்சரின் உதவியாளர் கைது - அதிர்ச்சி புகார்

மகாராஷ்டிராவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருப்பவர் பங்கஜா முண்டே. இவரிடம் ஆனந்த் கர்ஜே என்பவர் உதவியாளராக இருக்கிறார். இவரது மனைவி கௌரி. இவர் மும்பையில் உள்ள கே.இ.எம். மருத்துவமனையில் டாக்டராக பணி... மேலும் பார்க்க

திருச்சி: ரயில் நிலையத்தில் பயணிடம் ரூ.60 லட்சம் திருட்டு! - ரயில்வே போலீஸார் உள்பட 4 பேர் கைது

சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் வளையம்பட்டி அருள் நகரை சேர்ந்தவர் ஆரோக்கிய ஜான் கென்னடி (32). இவர், கடந்த 30 -ம் தேதி சென்னையிலிருந்து தனது உறவினர் கொடுத்த ரூ. 60 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்... மேலும் பார்க்க

தென்காசி: ஸ்டாப்பில் நிற்காமல் சென்ற அரசு பேருந்து; வாதம் செய்த பயணியை காலணியால் தாக்கிய நடத்துனர்!

தென்காசி, கடையநல்லூர் அருகே நயினாரகரத்தைச் சேர்ந்தவர் சுப்பையா (50). இவர் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் நயினாரகரம் செல்வதற்கு தென்காசியில் இருந்து மதுரை செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்... மேலும் பார்க்க

பயணப்படிக்கு விண்ணப்பம் கொடுத்த பெண் இன்ஸ்பெக்டர்; ஆபாச படங்கள் அனுப்பிய எஸ்.பி அலுவலக பணியாளர் கைது

ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவகத்தில் அமைச்சுப் பணியில் ஈடுபட்டு வந்தவர் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயதான முருகன். அரசின் நிரந்தர பணியாளரான இவர், காவலர்களுக்கான பயணப... மேலும் பார்க்க