செய்திகள் :

திருமணமான ஒரு ஆண்டுக்குள் உயிரை மாய்த்த மனைவி; அமைச்சரின் உதவியாளர் கைது - அதிர்ச்சி புகார்

post image

மகாராஷ்டிராவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருப்பவர் பங்கஜா முண்டே. இவரிடம் ஆனந்த் கர்ஜே என்பவர் உதவியாளராக இருக்கிறார். இவரது மனைவி கௌரி. இவர் மும்பையில் உள்ள கே.இ.எம். மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதத்தில்தான் திருமணம் நடைபெற்றது.

கௌரியின் சொந்த ஊர் பீட் மாவட்டம் ஆகும். இவர்கள் மும்பை ஒர்லி பகுதியில் வசித்து வந்தனர். திடீரென கௌரி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கௌரியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து ஆனந்தை கைது செய்துள்ளனர்.

உயிரிழப்பு
உயிரிழப்பு

இதுகுறித்து கௌரியின் தந்தை அசோக் போலீஸில் கொடுத்துள்ள புகாரில்,

“எனது மகளை ஆனந்தும், அவரது பெற்றோரும், சகோதரரும், சகோதரியும் சேர்ந்து வீட்டு வேலை செய்வது தொடர்பாக அடிக்கடி சித்திரவதை மற்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த செப்டம்பர் 30-ம் தேதி அவர்கள் வேறு வீட்டிற்கு மாறியுள்ளனர். அந்நேரம் பொருட்களை மாற்றும் போது கர்ப்ப பரிசோதனை அறிக்கை ஒன்று கௌரியிடம் கிடைத்தது.

அது கிரண் என்பவரின் கர்ப்பப் பரிசோதனை அறிக்கையாகும். அதில் ஆனந்த் – கிரண் மனைவி என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை கேட்ட கௌரி, ஆனந்திடம் வாக்குவாதம் செய்தபோது, ‘நான் தற்கொலை செய்து கொள்வேன்; அதற்குக் காரணம் நீதான் என்று எழுதி வைத்துவிடுவேன்’ என்று மிரட்டியுள்ளார். இது பொறுத்துக்கொள்ள முடியாவிட்டால், ஆனந்துக்கு வேறு திருமணம் செய்து வைப்பேன் என்று ஆனந்தின் சகோதரி சீத்தல் மிரட்டியுள்ளார். நாங்கள் அக்டோபர் 3-ம் தேதி ஆனந்தின் பிறந்தநாளுக்காக திடீரென அவர்களது வீட்டிற்கு சென்றோம். அப்போது கௌரியின் முகம் மற்றும் கழுத்தில் காயங்கள் இருந்தன.

அது குறித்து விசாரித்தபோது, ஆனந்தின் மிரட்டல் மற்றும் சித்திரவதை பற்றிச் தெரிவித்தார். அதன் பிறகு கடந்த 22-ம் தேதி திடீரென ஆனந்த் எங்களுக்கு போன் செய்து, கௌரி தற்கொலை செய்து கொண்டதாகவும், மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாகவும் தெரிவித்தார்.

நாங்கள் மும்பை வந்தபோதும், கௌரி தற்கொலை செய்து கொண்டதாகவே ஆனந்த் கூறினார். இது குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும்” என்று புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

பங்கஜா முண்டே
பங்கஜா முண்டே

இதுகுறித்து போலீஸார், ஆனந்த், அவரது சகோதரி சீத்தல் மற்றும் சகோதரர் அஜய் ஆகியோர்மீது வழக்கு பதிவு செய்து, ஆனந்தை கைது செய்துள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் பங்கஜா முண்டே, “இதை கேட்டவுடன் நான் நொறுங்கிப்போனேன். ஆனந்த் அழுதபடியே போனில் பேசினார். இச்சம்பவத்திற்கு யார் காரணம் என்றாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கௌரியின் தந்தையிடமும் பேசினேன்” என்று தெரிவித்துள்ளார்.

திருச்சி: ரயில் நிலையத்தில் பயணிடம் ரூ.60 லட்சம் திருட்டு! - ரயில்வே போலீஸார் உள்பட 4 பேர் கைது

சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் வளையம்பட்டி அருள் நகரை சேர்ந்தவர் ஆரோக்கிய ஜான் கென்னடி (32). இவர், கடந்த 30 -ம் தேதி சென்னையிலிருந்து தனது உறவினர் கொடுத்த ரூ. 60 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்... மேலும் பார்க்க

தென்காசி: ஸ்டாப்பில் நிற்காமல் சென்ற அரசு பேருந்து; வாதம் செய்த பயணியை காலணியால் தாக்கிய நடத்துனர்!

தென்காசி, கடையநல்லூர் அருகே நயினாரகரத்தைச் சேர்ந்தவர் சுப்பையா (50). இவர் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் நயினாரகரம் செல்வதற்கு தென்காசியில் இருந்து மதுரை செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்... மேலும் பார்க்க

பயணப்படிக்கு விண்ணப்பம் கொடுத்த பெண் இன்ஸ்பெக்டர்; ஆபாச படங்கள் அனுப்பிய எஸ்.பி அலுவலக பணியாளர் கைது

ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவகத்தில் அமைச்சுப் பணியில் ஈடுபட்டு வந்தவர் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயதான முருகன். அரசின் நிரந்தர பணியாளரான இவர், காவலர்களுக்கான பயணப... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: நடுராத்திரியில் நடுங்க வைத்த பெண் குரல்... வைரல் வீடியோ குறித்து விளக்கமளித்த போலீஸ்!

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஜெகதேவி சாலை, எம்.ஜி.ஆர் நகரில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கி அருகில் வசிப்பவர் அர்ஜுனன் (வயது 71). விவசாயியான இவர், தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று... மேலும் பார்க்க

பள்ளிவாசலுக்கு மந்திரிக்க சென்ற இளம்பெண்ணை பாலியல் கொடுமை செய்ய முயன்ற நபர்; நரிக்குடியில் பரபரப்பு!

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே வீரசோழன்‌ பகுதியை சேர்ந்தவர் அப்துல் அஜீஸ். இவர் நரிக்குடி ஜூம்மா பள்ளிவாசலில் அஷ்ரத் ஆக பணியாற்றி‌ வருகிறார். இந்நிலையில் நரிக்குடி‌ பகுதியை சேர்ந்த 22 வயது இளம்... மேலும் பார்க்க

சிவகாசி: மின்வாரியத்தில் கத்தை கத்தையாக பணம் எண்ணிய அதிகாரி, லஞ்சமா? - பணியிடை நீக்கம்

சிவகாசியில் மின்வாரியத்தில் பணிபுரிந்த பெண் அதிகாரி ஒருவர் அலுவலகத்தில் பணம் எண்ணும் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.சிவகாசி மின்வாரிய செயற்பொறியாளராக பணியாற்றி வந்தவர் பத்ம... மேலும் பார்க்க