செய்திகள் :

மும்பை: சுழற்றியடித்த புயல்; அவசரமாகத் தரையிறங்கிய ஏக்நாத் ஷிண்டேவின் ஹெலிகாப்டர்

post image

மும்பையில் நேற்று திடீரென சூறாவளிப் புயல் வீசியது. இதனால் கூரை வீடுகளில் தகரங்கள் அடித்து செல்லப்பட்டன. எங்கும் புழுதியாக இருந்தது.

மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மும்பை அருகில் உள்ள முர்பாட் என்ற இடத்தில் நடந்த கட்சி நிர்வாகி ஒருவரின் குடும்பத் திருமணத்தில் பங்கேற்க செல்ல முடிவு செய்தார்.

இதற்காக அவர் மும்பை ஒர்லி ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து தனி ஹெலிகாப்டரில் முர்பாட் புறப்பட்டார். ஹெலிகாப்டர் மும்பை புறநகரில் உள்ள ஐரோலி என்ற இடத்தை நெருங்கியபோது சற்று தூரத்தில் கடுமையான புயல் காற்று வீசுவதை ஹெலிகாப்டர் பைலட் கவனித்தார்.

அங்கு சென்றால் புயலில் சிக்கிக்கொள்ள வேண்டிய சூழ்நிலை வரும் என்று துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயிடம் பைலட் தெரிவித்தார். உடனே பிரச்னை வேண்டாம் என்று கருதி ஹெலிகாப்டரைத் திருப்பும்படி ஷிண்டே கேட்டுக்கொண்டார்.

மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே
மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே

இதையடுத்து ஹெலிகாப்டர் பத்திரமாக ஜுகு விமான நிலையத்தில் தரையிறங்கியது. இதில் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. ஷிண்டே திருமணத்திற்குச் செல்லாமல் வீட்டிற்குச் சென்றார்.

பைலட் சமயோகித்தமாகச் செயல்பட்டுள்ளார். ஹெலிகாப்டரில் ஏக்நாத் ஷிண்டேயுடன் அவரது உதவியாளர், பாதுகாவலர் மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரிகளும் இருந்தனர்.

'மக்களவையில் வேற இடம் கொடுங்க, காங்கிரஸுடன் எங்களால்.!'- மக்களவை சபாநாயருக்கு கனிமொழி கோரிக்கை

நடந்து முடிந்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கட்சி தோல்வியைத் தழுவிய நிலையில், த.வெ.க அதிக இடங்களை வென்ற தனிக்கட்சியாக உள்ளது. ஆனாலும் தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைப்பதற்கான எண்ணிக்கை த.வெ.கவி... மேலும் பார்க்க

`உலக நாடுகளுக்கு 10% வரி சட்டத்திற்குப் புறம்பானது' - நீதிமன்ற தீர்ப்பு; மீண்டும் சறுக்கிய ட்ரம்ப்

கடந்த ஏப்ரல் மாதம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலக நாடுகளின் மீது பரஸ்பர வரியை அறிவித்தார். வரி அமலாகும் தேதியில் பல நீட்டிப்புகள் இருந்தாலும், ஆகஸ்ட் மாதம் பரஸ்பர வரி அமலுக்கு வந்தது. பரஸ்பர வரியை 'சட்ட... மேலும் பார்க்க

கோவில்பட்டி: கனிமொழிக்கு வழங்கப்பட்ட அசைன்மென்ட்; கைகொடுத்த சமூக வாக்குகள் - திமுக சாதித்த பின்னணி!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 6 தொகுதிகளில், தி.மு.க-வும் த.வெ.க-வும் தலா 3 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கின்றன. இதில், ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவிர 5 தொகுதிகளிலும் அ.... மேலும் பார்க்க

'ஆதரவு கோர விரும்பும் அரசியல் தலைவர்களை விஜய் நேரில் சந்தித்திருக்க வேண்டாமா?'- சிந்தனை செல்வன்

விஜய்யின் தவெக பெரும்பான்மையை நிரூபிக்க விசிகவிடம் ஆதரவு கோரியிருக்கும் நிலையில், வாட்ஸ்ஆப்பில் ஆதரவு கேட்டு கடிதத்தை அனுப்பிவிட்டு பதில் சொல்லுங்கள் என்பதை எப்படி புரிந்து கொள்வது? என்று விசிக பொதுச்... மேலும் பார்க்க

தவெக: `விஜய் வளர விடக்கூடாது என்ற நோக்கில், திமுக அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கக்கூடும்' - எஸ்.வி.சேகர்

தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் குழப்பங்களுக்கு இடையே ஆட்சி அமைக்கப்போவது யார்? என்றக் கேள்வியுடன் தேர்தல் முடிவு வெளியாகி 4 நாள்கள் ஆகியும் தொடர்கிறது. இந்த நிலையில், நடிகர் எஸ்.வி.சேகர் செய்தியாளர்க... மேலும் பார்க்க

கேரள முதல்வர் யார்? - முக்கோண மோதலில் காங்கிரஸ்!

கேரளத்தில் 102 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி வென்றும் முதல்வராக யாரை நியமிப்பது என காங்கிரஸ் தலைமை திணறிவருகிறது!கேரள மாநிலத்தில் மொத்தமுள்ள 140 சட்டமன்றத் தொகுதிகளில், 102 தொகுதிகளை வாரிச்சுருட்டியது... மேலும் பார்க்க