செய்திகள் :

வாழ்க்கையை மாற்றிய மகள், மனைவியின் பிறந்தநாள் - அபுதாபியில் மலையாளிக்கு அடித்த ரூ.68 கோடி லாட்டரி!

post image

வாழ்க்கையை மாற்றுவது எது? முடிவில்லாத உழைப்பா அல்லது ஒரே ஒரு தருணத்தில் கதவைத் தட்டும் அதிர்ஷ்டமா? இந்த கேள்விக்கு அபுதாபியில் வசிக்கும் சுனில் குமார் சதாசிவன் என்ற இந்தியரின் வாழ்க்கை இப்போது ஒரு பதிலாக மாறியிருக்கிறது.

தனது மனைவி மற்றும் மகளின் பிறந்தநாட்களை லாட்டரி எண்களாகத் தேர்ந்தெடுத்த ஒரே ஒரு முடிவில், அவரது வாழ்க்கை ஒரே இரவில் தலைகீழாக மாறியுள்ளது. தி யூஏஇ லாட்டரியின் 'லக்கி டே டிரா'வில் 30 மில்லியன் திர்ஹம்கள், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 68 கோடி ரூபாயை வென்றுள்ளார் இந்த 52 வயது கேரளக்காரர்.

லாட்டரி - Lottery

அபுதாபியில் பராமரிப்பு தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றும் சுனில் குமார், தனது நண்பருடன் சேர்ந்து லாட்டரி சீட்டுகளை வாங்குவதை சமீபத்தில்தான் தொடங்கியுள்ளார். கடந்த வாரம் வாங்கிய முதல் டிக்கெட்டில் வெறும் 100 திர்ஹம்கள் மட்டுமே பரிசாகக் கிடைத்தது. அந்த சிறிய வெற்றி தந்த ஊக்கத்தில், இந்த புதன்கிழமை மீண்டும் ஒரு டிக்கெட்டை வாங்கியுள்ளனர்.

ஆனால் இந்த முறை, ஏதோவொரு எண்ணைத் தேர்ந்தெடுக்காமல், தன் வாழ்வின் அர்த்தமாக இருக்கும் மூன்று தேதிகளைத் தேர்ந்தெடுத்தார்.

"என் வாழ்க்கையில் மிக முக்கியமான தேதிகளை ஏன் பயன்படுத்தக் கூடாது என்று தோன்றியது. முதலில் என் மகளின் பிறந்தநாள், பிறகு என்னுடையது, அதன்பின் என் மனைவியின் பிறந்தநாள் என அந்த எண்களைத் தேர்வு செய்தேன்," என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் சுனில்.

அந்த முடிவுதான் அவரது தலைவிதியை மாற்றி எழுதியிருக்கிறது. வேலை முடிந்து தனது அறைக்குத் திரும்பி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, இரவு சுமார் 9:45 மணியளவில் தனது மொபைல் ஃபோனை எடுத்து லாட்டரி முடிவுகளைப் பார்த்துள்ளார். ஏதேனும் சிறிய பரிசு கிடைத்திருக்கும் என்ற எண்ணத்தில் பார்த்தவருக்கு, திரையில் தெரிந்த எண்களைக் கண்டதும் அதிர்ச்சியில் உறைந்து போனார். "வெற்றி பெற்ற எண்களைப் பார்த்தபோது என்னால் நம்பவே முடியவில்லை. முழுமையான அதிர்ச்சியில் இருந்தேன்," என்று அந்த தருணத்தை விவரிக்கிறார். தன் கண்களையே நம்ப முடியாமல், உடனடியாக நண்பரிடம் ஓடிச் சென்று டிக்கெட்டைக் காட்டியுள்ளார். அது நிஜம்தான் என்று உறுதியானதும், அவர் முதலில் அழைத்தது தன் மனைவியைத்தான்.

இந்த பிரம்மாண்டமான பரிசுக்குப் பின்னால், ஒரு தந்தையின் நீண்டகால கனவும், கண்ணீரும் கலந்த கதை இருக்கிறது. சுனில் குமாருக்கு, திருமணமாகி 12 ஆண்டுகள் கழித்து, பல விலையுயர்ந்த சிகிச்சைகளுக்குப் பிறகுதான் அவரது மகள் பிறந்திருக்கிறார். அந்தப் போராட்டம் அவர்களை நிதி ரீதியாக மிகவும் பாதித்தது. "என் மகள் இதைப் பார்த்தால் ஒன்று தெரிந்துகொள்ள வேண்டும். அவளுக்காகவே நானும் என் மனைவியும் வாழ்ந்தோம், காத்திருந்தோம். அவளை நன்றாகப் படிக்க வைத்து ஒருநாள் மருத்துவராகப் பார்ப்பதுதான் என் வாழ்வின் மிகப்பெரிய கனவு," என்று உணர்ச்சி பொங்கக் குறிப்பிடுகிறார் சுனில் குமார். பரிசுப் பணத்தைக் கொண்டு முதலில் தனது மகளுக்கு ஒரு பரிசு வாங்கப் போவதாகக் கூறும் அவர், இந்த வெற்றி பணத்தை விட, தன் குடும்பத்திற்கு மகிழ்ச்சியான தருணங்களை உருவாக்கும் ஒரு வாய்ப்பு என்கிறார்.

சிறுவயதிலிருந்தே உழைத்துக்கொண்டிருக்கும் சுனில் குமார், இனி சிறிது ஓய்வெடுக்கத் திட்டமிட்டுள்ளார். தனது குடும்பத்திற்காகக் கட்டிவரும் வீட்டின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்வது அவரது முதல் இலக்கு. ஆனால் அவரது திட்டங்கள் அத்துடன் முடியவில்லை. "வீடில்லாமல் கஷ்டப்படும் சிலர் எனக்குத் தெரியும். அவர்களுக்கும் வீடுகள் கட்டிக் கொடுக்க விரும்புகிறேன்," என்று அவர் கூறுவது, இந்த வெற்றி ஒரு தனிநபரின் வாழ்க்கையை மட்டுமல்ல, அவரைச் சுற்றியுள்ள பலரின் வாழ்க்கையையும் மாற்றப் போகிறது என்பதைக் காட்டுகிறது.

ஒவ்வொரு புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும் நடைபெறும் இந்த 'லக்கி டே டிரா', 30 மில்லியன் திர்ஹம்கள் முதல் பரிசு, 5 மில்லியன் திர்ஹம்கள் இரண்டாம் பரிசு மற்றும் தலா 50,000 திர்ஹம்கள் கொண்ட மூன்று உத்தரவாதப் பரிசுகளை வழங்குகிறது. பொது வர்த்தக விளையாட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் (GCGRA) முழுமையான கட்டுப்பாட்டில் இயங்குகிறது தி யூஏஇ லாட்டரி்.

`21 ஆண்டில் 25 முறை இடமாறுதல்' - IAS அதிகாரியின் நடடிக்கையால் கலக்கத்தில் பால்பண்ணைகள், உணவகங்கள்

மகாராஷ்டிராவில் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை கமிஷனராக இருப்பவர் துகாராம் முண்டே. 2005ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியான துகாராம் முண்டே, தான் எந்த துறையில் இருந்தாலும் அந்த துறையில் துணிச்சலுடன் செயல்ப... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: `வராத குடிநீருக்கு வரி' மல்லிகைப்பூ, அல்வா, காலிக்குடம்... திமுக கவுன்சிலர் போராட்டம்!

புதுக்கோட்டை மாநகராட்சியின் 42-வது வார்டுக்கு உட்பட்ட அசோக் நகர் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், மக்களுக்குக் குடிநீரே வழங்... மேலும் பார்க்க

ஈரோடு: பழைய இரும்பு வியாபாரி வீட்டில் கட்டுக்கட்டாக ரூ.8 கோடி பணம் - அதிர்ச்சியில் GST அதிகாரிகள்!

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 29 வயதான செல்வக்குமார் பெருந்துறை அருகில் உள்ள ஈங்கூர் பகுதியில் பழைய இரும்பு வியாபார கடை நடத்தி வருகிறார். வேறு சில தொழில்களும் ஈடுபட்டு வந்திருக்கிறார். இந்த நிலையில், கடந... மேலும் பார்க்க

அமெரிக்காவை உலுக்கிய லேசி பீட்டர்சன் கொலை வழக்கு: தீர்ப்பை கேள்விக்குள்ளாக்கும் புதிய ஆவணப்படம்!

அமெரிக்காவின் நீதித்துறை வரலாற்றில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய லேசி பீட்டர்சன் கொலை வழக்கில், இருபது ஆண்டுகளுக்குப் பிறகு புதிய புயல் வீசத் தொடங்கியுள்ளது. தனது கர்ப்பிணி மனைவியைக் கொன்றதாகக் குற்... மேலும் பார்க்க

`தீர்ப்பு சாதகமா வரணும்' - நீதிபதியின் இருக்கையில்`வெள்ளை கடுகு' தூவி பில்லிசூனியம் வைத்த பெண்

சிவில் வழக்கு ஒன்றில் சாதகமான தீர்ப்பு கிடைக்கவேண்டும் என்ற நம்பிக்கையுடன், கர்நாடகா மாநிலம் சிக்கபல்லாபூர் நீதிமன்றத்தில் நீதிபதியின் மேடை, மேஜை மற்றும் தலைமை அதிகாரி அமரும் நாற்காலிக்கு அருகில் வெள்... மேலும் பார்க்க

'வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி' - ஓய்வூதியத் தொகையை எடுக்க சென்ற 82 வயது முதியவர் அதிர்ச்சி!

வங்கிகளில் சில நேரம் சாப்ட்வேர் பிரச்னை காரணமாக சிலரது வங்கிக்கணக்கில் அதிக பணம் இருப்பதாக கணக்கு காட்டும். இது போன்று பல முறை நடந்திருக்கிறது. பீகாரில் 82 வயது முதியவர் வங்கிக்கணக்கில் ரூ.759 கோடி இர... மேலும் பார்க்க