கிண்டி: ரயில்வே நிலைய மேம்பாலம் அருகே நிலவும் சுகாதார சீர்கேடு; முகம் சுளிக்கும்...
வாழ்க்கையை மாற்றிய மகள், மனைவியின் பிறந்தநாள் - அபுதாபியில் மலையாளிக்கு அடித்த ரூ.68 கோடி லாட்டரி!
வாழ்க்கையை மாற்றுவது எது? முடிவில்லாத உழைப்பா அல்லது ஒரே ஒரு தருணத்தில் கதவைத் தட்டும் அதிர்ஷ்டமா? இந்த கேள்விக்கு அபுதாபியில் வசிக்கும் சுனில் குமார் சதாசிவன் என்ற இந்தியரின் வாழ்க்கை இப்போது ஒரு பதிலாக மாறியிருக்கிறது.
தனது மனைவி மற்றும் மகளின் பிறந்தநாட்களை லாட்டரி எண்களாகத் தேர்ந்தெடுத்த ஒரே ஒரு முடிவில், அவரது வாழ்க்கை ஒரே இரவில் தலைகீழாக மாறியுள்ளது. தி யூஏஇ லாட்டரியின் 'லக்கி டே டிரா'வில் 30 மில்லியன் திர்ஹம்கள், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 68 கோடி ரூபாயை வென்றுள்ளார் இந்த 52 வயது கேரளக்காரர்.
.jpg)
அபுதாபியில் பராமரிப்பு தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றும் சுனில் குமார், தனது நண்பருடன் சேர்ந்து லாட்டரி சீட்டுகளை வாங்குவதை சமீபத்தில்தான் தொடங்கியுள்ளார். கடந்த வாரம் வாங்கிய முதல் டிக்கெட்டில் வெறும் 100 திர்ஹம்கள் மட்டுமே பரிசாகக் கிடைத்தது. அந்த சிறிய வெற்றி தந்த ஊக்கத்தில், இந்த புதன்கிழமை மீண்டும் ஒரு டிக்கெட்டை வாங்கியுள்ளனர்.
ஆனால் இந்த முறை, ஏதோவொரு எண்ணைத் தேர்ந்தெடுக்காமல், தன் வாழ்வின் அர்த்தமாக இருக்கும் மூன்று தேதிகளைத் தேர்ந்தெடுத்தார்.
"என் வாழ்க்கையில் மிக முக்கியமான தேதிகளை ஏன் பயன்படுத்தக் கூடாது என்று தோன்றியது. முதலில் என் மகளின் பிறந்தநாள், பிறகு என்னுடையது, அதன்பின் என் மனைவியின் பிறந்தநாள் என அந்த எண்களைத் தேர்வு செய்தேன்," என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் சுனில்.
அந்த முடிவுதான் அவரது தலைவிதியை மாற்றி எழுதியிருக்கிறது. வேலை முடிந்து தனது அறைக்குத் திரும்பி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, இரவு சுமார் 9:45 மணியளவில் தனது மொபைல் ஃபோனை எடுத்து லாட்டரி முடிவுகளைப் பார்த்துள்ளார். ஏதேனும் சிறிய பரிசு கிடைத்திருக்கும் என்ற எண்ணத்தில் பார்த்தவருக்கு, திரையில் தெரிந்த எண்களைக் கண்டதும் அதிர்ச்சியில் உறைந்து போனார். "வெற்றி பெற்ற எண்களைப் பார்த்தபோது என்னால் நம்பவே முடியவில்லை. முழுமையான அதிர்ச்சியில் இருந்தேன்," என்று அந்த தருணத்தை விவரிக்கிறார். தன் கண்களையே நம்ப முடியாமல், உடனடியாக நண்பரிடம் ஓடிச் சென்று டிக்கெட்டைக் காட்டியுள்ளார். அது நிஜம்தான் என்று உறுதியானதும், அவர் முதலில் அழைத்தது தன் மனைவியைத்தான்.
இந்த பிரம்மாண்டமான பரிசுக்குப் பின்னால், ஒரு தந்தையின் நீண்டகால கனவும், கண்ணீரும் கலந்த கதை இருக்கிறது. சுனில் குமாருக்கு, திருமணமாகி 12 ஆண்டுகள் கழித்து, பல விலையுயர்ந்த சிகிச்சைகளுக்குப் பிறகுதான் அவரது மகள் பிறந்திருக்கிறார். அந்தப் போராட்டம் அவர்களை நிதி ரீதியாக மிகவும் பாதித்தது. "என் மகள் இதைப் பார்த்தால் ஒன்று தெரிந்துகொள்ள வேண்டும். அவளுக்காகவே நானும் என் மனைவியும் வாழ்ந்தோம், காத்திருந்தோம். அவளை நன்றாகப் படிக்க வைத்து ஒருநாள் மருத்துவராகப் பார்ப்பதுதான் என் வாழ்வின் மிகப்பெரிய கனவு," என்று உணர்ச்சி பொங்கக் குறிப்பிடுகிறார் சுனில் குமார். பரிசுப் பணத்தைக் கொண்டு முதலில் தனது மகளுக்கு ஒரு பரிசு வாங்கப் போவதாகக் கூறும் அவர், இந்த வெற்றி பணத்தை விட, தன் குடும்பத்திற்கு மகிழ்ச்சியான தருணங்களை உருவாக்கும் ஒரு வாய்ப்பு என்கிறார்.
Meet Sunil Kumar Sadasivan, The UAE Lottery’s newest AED 30,000,000 Grand Prize winner.
— The UAE Lottery (@theuaelottery) July 13, 2026
The 52-year-old maintenance technician from India chose numbers inspired by the birthdays of the three people closest to his heart: his daughter, his wife, and himself. ✨
“I want to… pic.twitter.com/o1PUSZbFcK
சிறுவயதிலிருந்தே உழைத்துக்கொண்டிருக்கும் சுனில் குமார், இனி சிறிது ஓய்வெடுக்கத் திட்டமிட்டுள்ளார். தனது குடும்பத்திற்காகக் கட்டிவரும் வீட்டின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்வது அவரது முதல் இலக்கு. ஆனால் அவரது திட்டங்கள் அத்துடன் முடியவில்லை. "வீடில்லாமல் கஷ்டப்படும் சிலர் எனக்குத் தெரியும். அவர்களுக்கும் வீடுகள் கட்டிக் கொடுக்க விரும்புகிறேன்," என்று அவர் கூறுவது, இந்த வெற்றி ஒரு தனிநபரின் வாழ்க்கையை மட்டுமல்ல, அவரைச் சுற்றியுள்ள பலரின் வாழ்க்கையையும் மாற்றப் போகிறது என்பதைக் காட்டுகிறது.
ஒவ்வொரு புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும் நடைபெறும் இந்த 'லக்கி டே டிரா', 30 மில்லியன் திர்ஹம்கள் முதல் பரிசு, 5 மில்லியன் திர்ஹம்கள் இரண்டாம் பரிசு மற்றும் தலா 50,000 திர்ஹம்கள் கொண்ட மூன்று உத்தரவாதப் பரிசுகளை வழங்குகிறது. பொது வர்த்தக விளையாட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் (GCGRA) முழுமையான கட்டுப்பாட்டில் இயங்குகிறது தி யூஏஇ லாட்டரி்.












.jpg)






