சேயோன்: 'அன்று கல்லூரி சீனியர்; இன்று இசையமைப்பாளர்'; SK - SANA 24 வருட நட்பு பற...
விருதுநகர்: உரிமைத்தொகையை செலவு செய்ததால் கோபித்த மனைவி; விபரீத முடிவெடுத்த கணவரால் சோகம்!
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள நெடுங்குளத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரின் மனைவி ராமு. இவரது வங்கிக் கணக்கில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை ரூ.3 ஆயிரம் மற்றும் கோடைகால சிறப்பு நிதி ரூ.2 ஆயிரம் என மொத்தம் ரூ.5 ஆயிரம் வரவு வைக்கப்பட்டது. இந்த ரூ.5 ஆயிரம் பணத்தை மனைவி ராமுவிற்கு தெரியாமல் ஏ.டி.எம் கார்டு மூலம் எடுத்து செலவு செய்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

இதனையடுத்து மனைவி ராமு, ஈஸ்வரனிடம் பணம் எடுத்தது குறித்துகேட்டதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்துக் கொண்ட ராமு, தனது தாய்வீட்டிற்குச் சென்றுவிட்டாராம். இதனால், மனவேதனையில் இருந்த ஈஸ்வரன், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து கூமாபட்டி காவல் நிலைய போலீஸார் வழக்குபதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




















