செய்திகள் :

அஸ்ஸாம்: விமானப்படை விமானம் விழுந்து 5 வீரர்கள் பலி; முதல்வர் ஹிமந்தா சொல்வது என்ன?

post image

அஸ்ஸாமில் மாநிலம் ஜோர்ஹட் விமானப்படைத்தளத்தில் இன்று விமானப்படை விமானம் AN-32 தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானது.

விபத்தில் விமானத்தில் இருந்த விமானப்படை வீரர்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விமானம் இரண்டாக உடைந்து தீப்பிடித்தது.

சம்பவ இடத்தில் இருந்து கரும்புகை வெளியானது. விபத்தில் பைலட் இறந்துவிட்ட நிலையில் இணை பைலட் காயத்துடன் உயிர் தப்பினார். தீயணைப்புத்துறையினர் விரைந்து செயல்பட்டு மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

இது குறித்து அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா சர்மா அளித்த பேட்டியில், ''ஜோர்ஹட் விமான நிலையத்தில் ஒரு விமானப்படை சரக்கு விமானம் தொழில்நுட்ப பிரச்னைகளால் விபத்தில் சிக்கியது.

இது குறித்து விசாரித்து வரும் துணை ஆணையரின் கூடுதல் விவரங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்," என்று தெரிவித்தார்.

விபத்து குறித்து கோர்ட் விசாரணைக்கு விமானப்படை உத்தரவிட்டுள்ளது.

இறந்தவர்கள்
இறந்தவர்கள்

அதோடு விபத்தில் 5 பேர் உயிரிழந்து இருப்பதை விமானப்படை உறுதிபடுத்தி இருக்கிறது. இந்த விபத்தில் உயிரிழந்த பணியாளர்கள் பிரசாந்த் சிங், சுபம் குமார், ஜிதேந்திர சர்மா, அக்னிவீர் குமாவத் மற்றும் டேனிஷ் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஏஎன்-32 விமானம் அஸ்ஸாமின் ஜோர்ஹட்டில் இன்று காலை வழக்கமான பயணத்தின்போது விபத்துக்குள்ளானது என்று விமானப்படை தெரிவித்துள்ளது.

விபத்துக்குள்ளான விமானம் AN-32 தீவிர சூழல்களில் மிகவும் உயரமான மலைப்பகுதியில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான விமானம் 7.5 டன் சரக்குகள், 50 பயணிகள் அல்லது 42 விமானப்படை வீரர்கள் வரை பயணம் செய்ய முடியும். மேலும் இது தொலைதூரப் பகுதிகளில் பொருட்களை எடுத்துச்செல்ல பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

மன்னார்குடி: `அப்பா வந்திருக்கேன் எழுந்திரி ராசா'- கார் மோதி 3 பள்ளி குழந்தைகள் பலி; கதறும் பெற்றோர்

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள காரக்கோட்டை அரசுப் பள்ளியில் லோகேஷ், ரச்சித் ஆகிய இருவர் சிறுவர்கள் ஆறாம் வகுப்பும், ராஜமுரளி என்ற சிறுவன் ஏழாம் வகுப்பும் படித்து வந்தனர். இன்று மாலை வழக்க... மேலும் பார்க்க

குன்னூர்: மலைப்பாதையில் கவிழ்ந்த ஆந்திர சுற்றுலா வாகனம்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் படுகாயம்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த குடும்ப உறவினர்கள் 22 பேர் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வேன் மூலம் சுற்றுலா சென்றுள்ளனர். குடும்பமாக ஊட்டி, குன்னூரைச் சுற்றிப் பார்த்துவிட்டு நேற்றிரவு குன்னூ... மேலும் பார்க்க

கரூர்: லாரி மீது கார் மோதி விபத்து; 8 மாத கர்ப்பிணிப் பெண் உட்பட 3 பேர் பலியான சோகம்

உசிலம்பட்டியைச் சேர்ந்த அரவிந்த், பெங்களூரில் முறுக்கு தயாரித்து விற்பனை செய்யும் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், அவர் தனது சொந்த ஊரான உசிலம்பட்டி நோக்கி காரில் குடும்பத்துடன் திரும்பி... மேலும் பார்க்க

டூவீலரில் பயணித்தவர்கள் மீது மோதிய கார்; மூவர் உயிரைப் பறித்த கோர விபத்து - ஏர்வாடி அருகே சோகம்!

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி பகுதியைச் சேர்ந்தவர் லாடசாமி. இவருடைய மகள் பஞ்சவர்ணம் மற்றும் மருமகன் புல்லாணி. இவர்கள் மூவரும் இருசக்கர வாகனத்தில் கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக நேற்றைய தினம் ஏர்... மேலும் பார்க்க

சுட்டெரிக்கும் வெயில்... தீர்ந்த குடிநீர்: சஹாரா பாலைவனத்தில் 49 உயிர்களைக் குடித்த லாரி ரிப்பேர்!

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் சஹாரா பாலைவனப் பகுதியில், பயணம் செய்த லாரி பழுதடைந்ததால் குடிக்கத் தண்ணீரின்றி தாகத்தால் தவித்து 49 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.மாலி ... மேலும் பார்க்க

டெல்லி ஹோட்டல் தீ விபத்து: 'மின்சாரத்தைத் துண்டித்ததால்...' - பல உயிர்களைக் குடித்த அலட்சியம்

டெல்லியில் உள்ள மால்வியா நகரில் இருக்கும் ப்ளோரிஷ் இன் ஹோட்டலில் புதன்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டு ஒன்பது இந்தியர்கள், 12 வெளிநாட்டினர் உட்பட 21 பேர் உயிரிழந்தனர். இது குறித்து போலீஸாரும், தீயணைப்பு... மேலும் பார்க்க