செய்திகள் :

``இது இட்லி அல்ல, 'இட்-ஸ்லைஸ்'!" - வைரல் இட்லியைத் தன் பாணியில் கலாய்த்த சசி தரூர்!

post image

வட்ட வடிவ இட்லியைத் தட்டில் வைத்து, தொட்டுக் கொள்ளக் காரசாரமான சாம்பாரும் தேங்காய்ச் சட்னியும் பரிமாறப்படும் பாரம்பரியமான காலை உணவை நாம் அனைவரும் அறிவோம்.

ஆனால், உலகளவில் பிரபலமான பிட்சா உணவின் பாணியில் நம் ஊர் இட்லியை முற்றிலும் மாற்றி அமைத்தால் எப்படி இருக்கும்? அப்படியொரு விசித்திரமான ‘பிட்சா இட்லி’, உணவு பிரியர்களிடையே விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

எக்ஸ் தளத்தில் ஒருவர் இட்லியை பீட்சா போன்று வெட்டி என்னுடைய வெட்டும் திறன் எப்படி எனக் கேட்டிருந்தார்.

இந்த விநோதமான உணவு பரிசோதனையைப் பார்த்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர், தனது (x) எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள நக்கலான பதிவு இப்போது சமூக வலைத்தளங்களில் பலரையும் சிரிக்க வைத்துள்ளது.

வைரலாகி வரும் அந்த படத்தில், ஒரு பெரிய தட்டு வடிவ இட்லி, பிட்சா துண்டுகளைப் போல முக்கோண வடிவில் நேர்த்தியாக வெட்டப்பட்டு அடுக்கப்பட்டுள்ளது.

சசி தரூர்
சசி தரூர்

சசி தரூர் இந்த பதிவை மறுபதிவு செய்து, ஆங்கில வார்த்தைகளுடன் விளையாடித் தனது பாணியில் ஒரு கமெண்ட்டை தட்டியுள்ளார். "இது இட்லி (Idli), 'இட்-ஸ்லைஸ்' (Id-slice) அல்ல" என்று அவர் பதிவிட்டுள்ள இந்த நக்கல் வரிகள் இணையவாசிகளைப் பெரிதும் கவர்ந்துள்ளன.

மேலும், `ஒரு மென்பொருள் வல்லுநரை கிட்சன் பக்கம் வந்தால் இது தான் நடக்கும். இட்லியை இப்படி யாரும் சாப்பிட மாட்டார்கள். ஒருவேளை இத்தாலியராக இருந்தால் பீட்சா என நினைத்து இப்படி சாப்பிடலாம் (ஆனாலும் பீட்சாவுக்கு சாம்பாரை பயன்படுத்தாதீர்)' " என்றார்.

சிலர் இந்த புதிய முயற்சியைப் பாராட்டி வந்தாலும், சசி தரூரின் இந்த பதிவிற்குப் பிறகு பெரும்பாலான இணையவாசிகள் அவருக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். "உணவுகளில் புதுமை செய்யலாம், ஆனால் நம் ஊர் பாரம்பரிய இட்லியின் வடிவத்தோடு விளையாடக் கூடாது" என்று தரூரின் கருத்தை வழிமொழிந்து நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

விஜய் : எம்.ஜி.ஆர் பாணியில் `வாள்' காணிக்கை - கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் தரிசனம்!

டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் முடித்த கையோடு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று லேண்ட் ஆனது மங்களூரில். அங்கே புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தார். கூடவே, மூகாம்பி... மேலும் பார்க்க

`ஆண் சடலங்களின் அந்தரங்க உறுப்பை ஒப்பிட்டு பேசுவோம்' - காமெடி ஷோவில் பெண் டாக்டர் சர்ச்சை கருத்து

மும்பையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கே.இ.எம்.மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் படித்தவர் டாக்டர் சாஜல் பவார். இவர் மருத்துவமனையின் பிரேத பரிசோதனை தொடர்பான பயிற்சியின் போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை... மேலும் பார்க்க

திறந்துக் கிடந்த வீட்டின் கேட்; சாலைக்குத் தவழ்ந்து வந்த குழந்தை; சாமர்த்தியமாகச் செயல்பட்ட டிரைவர்!

கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் கொண்டோட்டியிலிருந்து வலியபறம்பு செல்லும் 'சபா மர்வா' என்ற தனியார் பேருந்து பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தது. பேருந்து கிணறுபடி என்ற பகுதியில் வளைவான சாலையில் பேருந்து சென... மேலும் பார்க்க

இடி தாக்கி இறந்த காளை; ஏர்கலப்பையில் மனைவியைப் பூட்டி உழவடித்த விவசாயி - முதல்வரை உலுக்கிய சம்பவம்!

இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில்தான் அதிக அளவு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நடக்கின்றன. சமீபத்தில் மகாராஷ்டிரா அரசு விவசாயிகளின் வங்கிக்கடனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இரண்டு லட்சம் ர... மேலும் பார்க்க

ஐ.நா மேடையில் ஒலிக்கவிருக்கும் தமிழக இளைஞரின் குரல்! - யார் இந்த அபிஷேக் அசீர்?

ஜூலை 13-ம் தேதி, சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வில் பங்கேற்றுப் பேசவிருக்கிறார் 24 வயதேயான அபிசேக் அசீர். திருநெல்வேலி பாளை பகுதியைச் சேர்ந்தவர் அபிஷேக் அசீர... மேலும் பார்க்க

மும்பை: `28,000 குடிசைவாசிகளுக்கு அடுக்குமாடி வீடுகள்' - அதானியைத் தொடர்ந்து களமிறங்கும் அம்பானி

மும்பையில் அதானி நிறுவனம் பெரிய அளவில் குடியிருப்பு கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக கருதப்படும் தாராவி குடிசை மேம்பாட்டுப் பணிகளை அதானி நிறுவனம்தான் மேற்கொண்டு... மேலும் பார்க்க