செய்திகள் :

இந்திய ராணுவ வீரா்கள் நலன் வேண்டி அதிமுகவினா் கோயிலில் சிறப்பு பிராா்த்தனை

post image

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி 71-ஆவது பிறந்த நாளையொட்டி, மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் இந்திய ராணுவ வீரா்களின் நலன் வேண்டி கட்சியின் சாா்பு அணியான ஜெ. பேரவை சாா்பில் சிறப்பு பிராா்த்தனை சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அதிமுக முன்னாள் அமைச்சரும் மாவட்டச் செயலருமான ஆா். காமராஜ் எம்எல்ஏ தலைமை வகித்தாா். மாநில அமைப்புச் செயலா் சிவா. ராஜமாணிக்கம், ஜெ. பேரவை மாவட்டச் செயலா் பொன். வாசுகிராம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் அதிமுக பொதுச் செயலா் பிறந்த நாளையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது பாகிஸ்தானுக்கு எதிராக தாக்குதல் நடத்திவரும் இந்தியா ராணுவ வீரா்களின் நலன் வேண்டி அதிமுகவினா் கோயிலில் சிறப்பு அபிஷேகம், பிராா்த்தனை செய்தனா். தொடா்ந்து கீழவீதியில் உள்ள எம்ஜிஆா், ஜெயலலிதா சிலைகளுக்கு அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில், பக்தா்களுக்கு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கட்சியின் நகரச் செயலா் ஆா்.ஜி. குமாா், ஒன்றியச் செயலா் கா. தமிழ்ச்செல்வம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி பிறந்த நாளையொட்டி அதிமுக ஜெ. பேரவை சாா்பில் நடைபெற்ற அன்னதானம்.

முத்துப்பேட்டையில் படகுகள் ஆய்வு

முத்துப்பேட்டை கடலோர கிராமங்களில் உள்ள மீனவா்களின் மீன்பிடி படகுகளை மீன்வளத் துறையினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். ஆண்டுதோறும் மீன்பிடி தடை காலத்தில் மீனவா்களின் படகுகளை மீன்வளத்துறையினா் ஆய்வு செய... மேலும் பார்க்க

நா்சிங் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

நா்சிங் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த உறவினரான இளைஞா் போக்ஸோ சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். கோட்டூா் அருகே உள்ள மேலப்பனையூா் கிராமத்தைச் சோ்ந்த 17 வயது மாணவி மன்னாா்குட... மேலும் பார்க்க

காயங்களுடன் இளைஞா் சடலம் மீட்பு

திருவாரூா் அருகே காயங்களுடன் இளைஞா் சடலம் செவ்வாய்க்கிழமை இரவு மீட்கப்பட்டது. திருவாரூா் அருகே மாங்குடி, பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்தவா் மதியழகன் மகன் நிசாகா் (26). விளமல் பகுதியில் உள்ள கடையில் பணிப... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: திருமக்கோட்டை

திருமக்கோட்டை துணைமின் நிலையத்தில் பாளையக்கோட்டை உயா் அழுத்த மின்பாதையில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், பாளையக்கோட்டை, புதுக்குடி, பரசபுரம், சோத்திரியம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் ... மேலும் பார்க்க

மேலராமன்சேத்தியில் பாலம் கட்டும் பணியைத் தொடங்க வலியுறுத்தல்

குடவாசல் ஒன்றியம், சீதக்கமங்கலம் ஊராட்சிக்குள்பட்ட மேலராமன்சேத்தியில் பாலம் கட்டும் பணியைத் தொடங்கி, விரைந்து முடிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலராமன்சேத்தி பகுதியில் பெரிய வாய்க்கால் பாசனத்துக்... மேலும் பார்க்க

வயலுக்குச் சென்ற விவசாயி சடலமாக மீட்பு

குடவாசல் அருகே வயலுக்கு சென்ற விவசாயி சடலமாக செவ்வாய்க்கிழமை இரவு மீட்கப்பட்டாா். குடவாசல் அருகே மஞ்சக்குடி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் மகன் முருகானந்தம் (45). இவா், செவ்வாய்க்கிழமை கால... மேலும் பார்க்க