செய்திகள் :

"அதிமுக-வுக்கு ஆதவ் அர்ஜுனா வர முயன்றார்; அதிமுகவை பற்றி பேச..!"- கே.பி முனுசாமி பதில்

post image

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, எம்.சி சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோரும், முன்னாள் எம்எல்ஏக்கள் சிலரும் த.வெ.கவில் இன்று இணைந்திருக்கின்றனர்.

இந்த இணைப்பு நிகழ்ச்சியில் பேசிய ஆதவ் அர்ஜுனா, " ஒட்டுமொத்த அதிமுகவும், அதன் தொண்டர்களும் த.வெ.கவில்தான் இருக்கிறார்கள். 2026ல் த.வெ.கவின் வெற்றி அதிமுக தொண்டர்களின் வாக்குகள் இல்லாமல் கிடைத்திருக்காது. அந்த மரியாதையும் அன்பும் எங்களுக்கு இருக்கிறது" என்று பேசியிருந்தார்.

ஆதவ் அர்ஜுனா
ஆதவ் அர்ஜுனா

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக கே.பி முனுசாமி ஆதவ் அர்ஜுனாவை விமர்சித்திருக்கிறார். " பதவி சுகம் அனுபவித்தவர்கள் த.வெ.கவில் இணைந்திருக்கின்றனர். அப்படி இணையும்போது ஆதவ் அர்ஜுனா அதிமுக குறித்து தான்தோன்றிதனமாக கருத்துக்களை பதிய வைத்திருக்கிறார்.

அவருக்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்து கொள்கிறேன். எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் ஓடுகிறார். திமுகவிற்கு சென்றார் அங்கு வாய்ப்பில்லை. அதேபோல விசிகவிற்கு சென்றார் அங்கும் வாய்ப்பில்லை. பிறகு அதிமுகவுக்கு ஆதவ் அர்ஜுனா வர முயன்றார். ஆனால் வாய்ப்பு கொடுக்கவில்லை.

இறுதியாக த.வெ.கவிற்கு சென்றார். தேர்தல் வந்தது, வாய்ப்பு கிடைத்தது அமைச்சரானார். அதோடு அவர் நின்றுவிட வேண்டும். மற்ற கட்சிகளுடைய வரலாற்றையோ, வளர்ச்சியையோ மதிப்பிடாமல் தான்தோன்றிதனமாக பேசுவதை கண்டிக்கிறேன்.

அதிமுகவை பற்றி பேச ஆதவ் அர்ஜுனாவுக்கு அருகதை இல்லை. இதோடு அவர் நிறுத்துக்கொள்ள வேண்டும் இல்லையென்றால் போராட்டத்தை முன்எடுப்பேன். பேப்பரில் தான் எடப்பாடி பொதுச்செயலாளர் என்கிறார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

நாவடக்கம் வேண்டும் ஆதவ் அர்ஜுனா அவர்களே! அவரை பற்றி பேச உங்களுக்கு எந்தத் தகுதியும் இல்லை. கட்சி மாறியவர்கள் எல்லாம் பதவி சுகத்தை அனுபவித்தவர்கள். தமக்கு அடையாளம் காண்பித்த இயக்கத்தை, சமூகத்தில் அந்தஸ்தை கொடுத்த இயக்கத்தை விட்டுச் சென்றவர்களை வரவேற்பதோடு ஆதவ் அர்ஜுனா நிறுத்திக்கொள்ள வேண்டும். உங்களுடைய லாட்டரி வேலை எல்லாம் இங்கு வைத்துகொள்ள வேண்டாம்" என்று கே.பி முனுசாமி ஆதவ் அர்ஜுனாவை சாடியிருக்கிறார்.

’நவீன தீண்டாமைக்கு முற்றுப்புள்ளி’ - பட்டியலின மக்களின் கிராமத்திற்கு இயக்கப்படும் அரசுப் பேருந்து!

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகேயுள்ள அண்ணா நகர் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட பட்டியலினக் குடும்பங்கள் உள்ளன. இவர்களில் பெரும்பாலானோர் படிப்பு மற்றும் வேலைகளுக்குச் செல்ல அரசுப் பேருந்தையே பயன்படு... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் தூண் விவகாரம்: ``அமைச்சரின் பேச்சைக் கண்டிக்கிறேன்" - தமிழிசை காட்டம்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தனி நீதிபதியின் உத்தரவின் அடிப்படையில் தீபம் ஏற்றாததால், பதியப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழ்நாடு அரசு தன் நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும் என உயர்... மேலும் பார்க்க

'தவெக-வின் கொள்கை குறித்து அதிகம் பேசினார்' - TVK-வில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன்

எம்.எஸ்.எம். ஆனந்தன், அ.தி.மு.க- வின் இரண்டாம் கட்ட தலைவர்களில் ஒருவராக விளங்கியவர். விவசாயம் மற்றும் வணிக குடும்பப் பின்னணியைக் கொண்ட இவர், 2011-ம் ஆண்டு முதன் முதலாக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க த... மேலும் பார்க்க

CPI அலுவலகத்திற்குச் சென்ற ப.சிதம்பரம்; இடதுசாரிகளைக் கூட்டணிக்குள் இழுக்க முயற்சியா?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்திற்குச் சென்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியனை காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் சந்தித்திருக்கிறார்.இடதுசாரிகளைக் கூட்டணியில் சேர்க்க ப.சிதம்பரம் மு... மேலும் பார்க்க

`பவர் முக்கியம் அமைச்சரே!’ ஜெயலலிதா குட்புக்கில் இருந்த எம்.சி.சம்பத், தவெகவில் தஞ்சமடைந்த பின்னணி!

தமிழகத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றிபெற்றதையடுத்து, அதன் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அதே போல இந்தத் தேர்தலில் 47 இடங்களில் வெற்றிபெற்ற அ.தி.... மேலும் பார்க்க

Vijay: 'முதல்வர் விஜய் செய்தியாளர்களைச் சந்திக்க மறுப்பது ஏன்?'- நிர்மல்குமார் சொல்லும் காரணம் என்ன?

மதுரை அழகர் கோவில் சாலை பகுதியிலுள்ள அரசு சுற்றுலா மாளிகையில் அமைச்சர் நிர்மல்குமார் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமை... மேலும் பார்க்க