செய்திகள் :

இந்தூரில் அசுத்தமான தண்ணீரால் 7 பேர் பலி: `தேவையில்லாத கேள்வி வேண்டாம்'- சீறிய அமைச்சர்

post image

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள பாக்யரபுரா என்ற இடத்தில் அசுத்தமான தண்ணீரை குடித்ததால் 200க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 7 பேர் உயிரிழந்திருப்பதாக மாநில அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மற்றவர்கள் அங்குள்ள 27 மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநில அரசு நிர்வாகம் விரைந்து செயல்பட்டு தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது. முதல் கட்ட விசாரணையில் சாக்கடை நீர் குடிநீருடன் கலந்ததுதான் இந்த சம்பவத்திற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.

உயிரிழப்புகள் 14 இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் அதனை மறுத்துள்ள இந்தூர் மேயர் புஷ்யமித்ரா, 7 பேர் தான் இறந்துள்ளனர் என்று தெரிவித்தார். அதேசமயம் முதல்வர் மோகன் யாதவ், நான்குபேர் தான் இறந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கைலாஷ்

மேற்கொண்டு முதல்வரிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, ``பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை கிடைத்த பிறகு தான் இறப்பு குறித்த தகவல் தெரியும்" என்றார்.

இந்தியாவில் மிகவும் சுத்தமான நகரம் என்று 8வது முறையாக விருது பெற்றுள்ள இந்தூரில் அசுத்தமான தண்ணீரை குடித்து பொதுமக்கள் உயிரிழந்திருப்பது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு உண்மையிலேயே இந்தூர் சுத்தமான நகரமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாநில அரசு உயர்மட்ட விசாரணைக்குழு அமைத்துள்ளது. மேலும் குடிநீரில் சாக்கடை நீர் கலப்பதை தடுக்க தவறிய பொறியாளர்கள் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இப்பிரச்னை குறித்து பத்திரிகையாளர்களுக்கு அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா பேட்டியளித்த போது, ஒரு நிருபர் `சம்பவத்திற்கு ஏன் ஜூனியர் அதிகாரிகளை மட்டும் குறை சொல்கிறீர்கள், மேல் மட்டத் தலைவர்களை பற்றி இதில் விவாதிப்பதில்லை' என்று கேட்டார். உடனே அமைச்சர் கைலாஷ், ''அதை விட்டுவிடுங்கள், தேவையில்லாத கேள்விகளை கேட்க வேண்டாம்'' என்று எரிச்சலுடன் தெரிவித்தார். இது தவிர மேலும் சில வார்த்தைகள் பேசினார்.

அவரது பேச்சு வைலரானது. இதையடுத்து அமைச்சர் கைலாஷ் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்து எக்ஸ் தள பக்கத்தில் விளக்கம் அளித்து இருக்கிறார். தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இலவச சிகிச்சை கொடுக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சம்பவ பகுதியில் டேங்கர் மூலம் மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

Switzerland: புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது தீ விபத்து; 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

உலகமெங்கும் புத்தாண்டை வெகு விமரிசையாக கொண்டாடி வரவேற்று வருகின்றனர். அப்படி புத்தாண்டு கொண்டாட்டத்தின்போதும் சுவிட்சர்லாந்தில் பயங்கர தீ விபத்து ஒன்று ஏற்பட்டிருக்கிறது. இந்த தீ விபத்தில் 40-க்கும் ம... மேலும் பார்க்க

குமரி: 2 மணி நேர போராட்டம்; வலியால் மயங்கிய சிறுவன்; கரும்பு மிஷினில் சிக்கிய சிறுவனின் கை மீட்பு

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள ரீத்தாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வில்லியம் போஸ். இவர் அந்தப் பகுதியில் கரும்புச்சாறுக் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.வில்லியம் போஸின் பேரன் ஆரின் ஜெஃப்ரின் (13) ... மேலும் பார்க்க

மும்பை: பேருந்தை ரிவர்ஸ் எடுக்கும்போது நடந்த கொடூரம்; பாதசாரிகள் மீது மோதி 4 பேர் பலி

மும்பையில் பி.இ.எஸ்.டி. (பெஸ்ட்) நிர்வாகம் மின் விநியோகம் மற்றும் பயணிகள் பஸ் போக்குவரத்தை இயக்கி வருகிறது. நேற்று இரவு 10.05 மணியளவில் பெஸ்ட் பஸ் ஒன்று பயணிகள் மீது மோதியதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.... மேலும் பார்க்க

சிவகாசி: இடிந்து விழுந்த வீட்டின் கேட் சுவர்; விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகளுக்கு நேர்ந்த சோகம்

சிவகாசி அருகே கொங்கலாபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் நுழைவு வாயில் கேட் மற்றும் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில் இரண்டு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கொங்கல... மேலும் பார்க்க

சேலம்: லாரி மீது அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து; டிரைவர் பலி

சேலம் மாநகரப் பகுதியில் இருந்து ஓமலூருக்கு பாரம் ஏற்றிச் சென்ற லாரி திடீரென டீசல் இல்லாததால், மாமாங்கம் சாலையிலேயே நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் பொள்ளாச்சியில் இருந்து தர்மபுரி நோக்கி நெய் எடுத்துக்க... மேலும் பார்க்க

திட்டக்குடி விபத்து: 9 பேரை காவு வாங்கிய அரசுப் பேருந்து - இமைக்கும் நொடியில் அரங்கேறிய அசம்பாவிதம்!

மரண ஓலங்களால் அதிர்ந்த எழுத்தூர்திருச்சியில் இருந்து 24.12.2025 அன்று மாலை 5.30 மணிக்கு சென்னையை நோக்கிச் சென்ற அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்து (SETC), திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில்... மேலும் பார்க்க