செய்திகள் :

இருமல் மருந்துக்கு புதிய கட்டுப்பாடு: மத்திய அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

post image

இருமல் மருந்து குடித்து குழந்தைகள் உயிரிழந்த சம்பவங்களைத் தொடர்ந்து, இருமல் மருந்துகளின் விற்பனையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்தகங்களில் நேரடியாக விற்கப்படும் இருமல் மருந்துகளின் விற்பனைக்குத் தடை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

தற்போது, இருமல் மருந்துகள் 'ஷெடியூல் கே' ( Schedule K) என்ற பிரிவின் கீழ் வருகின்றன. இந்தப் பிரிவின்படி, இருமல் மருந்துகளை விற்பனை செய்ய முழுமையான மருந்து விற்பனை உரிமம் (full drug-sale licence) தேவையில்லை. இதன் காரணமாகவே, கிராமப்புறங்களில் உள்ள சிறிய கடைகளில்கூட இருமல் மருந்துகள் எளிதாக விற்பனை செய்யப்படுகின்றன.

இருமல் மருந்து

சமீபத்தில், மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில், இருமல் மருந்தைக் குடித்து குழந்தைகள் உயிரிழந்தது நாட்டையே உலுக்கியது.

இந்த சோக சம்பவத்தைத் தொடர்ந்து தான் இருமல் மருந்து விற்பனையில் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டுவர மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.​

இந்தத் திட்டம் செயல்முறைக்கு வந்தால், மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இருந்தால் மட்டுமே இருமல் மருந்துகளை வாங்க முடியும் என்று கூறப்படுகிறது.

அனைத்து மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் உலகளாவிய உற்பத்தி நடைமுறைகளை (GMP) கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் இல்லையெனில் சம்மந்தப்பட்ட ஆலைகள் மூடப்படும் என்று மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு கடுமையாக எச்சரித்துள்ளது.

Doctor Vikatan: தாம்பத்ய வாழ்க்கையை பாதிக்குமா BP மாத்திரைகள்?

Doctor Vikatan: என் வயது 39. இன்னும் திருமணமாகவில்லை. கடந்த 6 மாதங்களாக ரத்த அழுத்தத்துக்கு மாத்திரைகள் எடுத்துக்கொண்டிருக்கிறேன். ரத்த அழுத்த மாத்திரைகள் (பிபி மாத்திரைகள்) எடுத்துக்கொள்வது ஒருவரது த... மேலும் பார்க்க

தோப்புக்கரணம் மரணம் வரை கொண்டு செல்லுமா? - மும்பை மாணவி மரணம் குறித்து மருத்துவர் விளக்கம்

மும்பையைச் சேர்ந்த 12 வயது மாணவி, பள்ளிக்கு 10 நிமிடம் தாமதமாக சென்றதால், தன்னுடைய உயிரையே இழந்திருக்கிறார். தாமதமாக வந்ததற்கு தண்டனையாக, வகுப்பு ஆசிரியை, அம்மாணவியை 100 முறை சிட் அப் செய்யும்படி தண்ட... மேலும் பார்க்க

Marburg Virus: எத்தியோப்பியாவில் பரவும் மார்பர்க் வைரஸ்; உலக சுகாதார அமைப்பு விளக்கம்

தெற்கு எத்தியோப்பியாவில் 'மார்பர்க்' என்ற கொடிய வைரஸ் பரவி வருவதை உலக சுகாதார அமைப்பு உறுதி செய்துள்ளது. இது உலக நாடுகள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.எபோலா வைரஸின் குடும்பத்தைச் சேர்ந்... மேலும் பார்க்க

Doctor Vikatan: வாக்கிங் 10,000 அடிகள் நடந்தால்தான் பலன் கிடைக்குமா?

Doctor Vikatan: நான் தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் வாக்கிங் செல்கிறேன். கிலோமீட்டர் கணக்கு வைத்துக்கொள்வதில்லை. ஆனால், என் நண்பர்கள் பலரும், தினமும் 10 ஆயிரம் ஸ்டெப்ஸ், 12 ஆயிரம் ஸ்டெப்ஸ் நடப்பதாகச் ... மேலும் பார்க்க

நம்ம குடலுக்குள்ள ஒரு தோட்டமே இருக்கு தெரியுமா? விளக்கும் மருத்துவர்!

உணவுக்குழாய்க்கு வருகிறது!இரைப்பையில் இருக்க வேண்டியவை'' 'டாக்டர், நெஞ்சு எரிச்சலா இருக்கு, புளிச்ச ஏப்பம் வருது, சாப்பிட்டா மாட்டேங்குது, எதுக்களிக்குது' என்று வருபவர்கள் எண்ணிக்கைதான் இன்று அதிகம். ... மேலும் பார்க்க

Doctor Vikatan: தலைவலியே இல்லாவிட்டாலும் தினமும் தைலம் தடவும் வழக்கம், பிரச்னை வருமா?

Doctor Vikatan: என் வயது 53. எனக்கு தினமும் தலைவலி தைலம் தடவிக்கொள்ளும் வழக்கம் இருக்கிறது. வலி இருக்கிறதோ, இல்லையோ, அதைத் தடவிக்கொண்டுதூங்கினால்தான்திருப்தியாக உணர்வேன். இந்தப் பழக்கத்தினால்ஏதேனும் ப... மேலும் பார்க்க