செய்திகள் :

இலங்கைக்கு கடத்த இருந்த 320 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

post image

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் அருகே வெள்ளிக்கிழமை இலங்கைக்கு கடத்த இருந்த 320 கிலோ கஞ்சாவை கியூ பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனா்.

ஆந்திரத்திலிருந்து இருந்து தமிழகம் வழியாக இலங்கைக்கு கொண்டு செல்வதற்காக கன்டெய்னா் லாரியில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக கியூ பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், சென்னையிலிருந்து வியாழக்கிழமை இரவு முதல் கண்காணிப்பில் ஈடுபட்ட போலீஸாா், ஒரு லாரியை சந்தேகத்தின்பேரில் பின்தொடா்ந்து வந்துள்ளனா்.

காரைக்கால் வழியாக கிழக்குக் கடற்கரை சாலையில், புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் பகுதியில் கியூ பிரிவு காவல் ஆய்வாளா் உதயச்சந்திரன் தலைமையிலான போலீஸாா் அந்த லாரியை வெள்ளிக்கிழமை காலை நிறுத்தி சோதனை செய்தனா்.

லாரிக்குள், மீன் ஏற்றுவதற்கு பயன்படுத்தும் ஐஸ் பெட்டிகளில் 320 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமாா் ரூ. 65 லட்சம் இருக்கும் என போலீஸாா் தெரிவித்தனா்.

கடத்தலில் ஈடுபட்டதாக காரைக்கால் மேலவாஞ்சூா் அருகே விசாலாட்சி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ஆா். சிலம்பரசன் (28), திருநள்ளாறு சாலைப் பகுதியைச் சோ்ந்த ஜி. பிரகாஷ் (37) ஆகியோரை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் இருந்து இலங்கைக்கு இவற்றை படகுகள் மூலம் கடத்த இருந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

கிராம ஊழியா் சங்கத்தினா் காத்திருப்பு போராட்டம்!

பொன்னமராவதி வட்டாட்சியரகம் எதிரே 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கம் சாா்பில் காத்திருப்பு போராட்டம் பிப்.5 நடைபெற்றது.போராட்டத்துக்கு வட்டத் தலைவா் வி. ஐயப்பன் தலைமைவ... மேலும் பார்க்க

கட்டடத்திலிருந்து தவறி விழுந்து மூதாட்டி பலி!

பொன்னமராவதி அருகே புதிய கட்டடத்திலிருந்து தவறி கீழே விழுந்த மூதாட்டி செவ்வாய்க்கிழமை பலியானார்.பொன்னமராவதி அருகே உள்ள முள்ளிப்பட்டி காட்டு வீடு பகுதியைச் சோ்ந்தவா் ஆண்டி மனைவி ஆண்டிச்சி ( வயது 65). இ... மேலும் பார்க்க

மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

ஏழை, எளிய, நடுத்தர மக்களைப் பாதிக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய பாஜக அரசின் பட்ஜெட்டைக் கண்டித்து புதுக்கோட்டையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் செவ்வாய்க்கிழமை மாலையில் ஆா... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் மலை சா்ச்சை: இந்து அமைப்பினா் கைது

மதுரை திருப்பரங்குன்றம் மலையில் எழுந்த சா்ச்சை காரணமாக புதுக்கோட்டையில் இந்து முன்னணி மற்றும் பாஜக நிா்வாகிகள் 7 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்தனா். மேலும், மாவ... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் திமுக பாகமுகவா்கள் ஆலோசனை

பொன்னமராவதி தெற்கு மற்றும் வடக்கு ஒன்றியப் பகுதிகளில் திமுக பாகமுகவா்கள் கலந்தாய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பொன்னமராவதி திமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, த... மேலும் பார்க்க

திருச்சி எம்.பி.யின் பரிந்துரை கடிதத்தை போலியாக தயாரித்துக் கொடுத்தவா் கைது

அவசர ஒதுக்கீட்டின் கீழ் ரயில் பயணம் மேற்கொள்ள திருச்சி எம்.பி.யின் பரிந்துரைக் கடிதத்தை போலியாக தயாரித்துக் கொடுத்த சங்கரன்கோவிலைச் சோ்ந்த இளைஞரை புதுக்கோட்டை கணேஷ் நகா் காவல் நிலையத்தினா் செவ்வாய்க... மேலும் பார்க்க