செய்திகள் :

உடல் நிலை குறித்து தவறான தகவல்; யூடியூப் வீடியோவை நீக்குமாறு ஐஸ்வர்யா ராய் மகள் கோர்ட்டில் வழக்கு!

post image

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யா பச்சன் குறித்து அடிக்கடி எதாவது தகவல் வந்து கொண்டே இருக்கிறது. ஐஸ்வர்யா ராய் எங்கு சென்றாலும் தனது மகளை கூடவே அழைத்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த 2023ம் ஆண்டு யூடியூப் மற்றும் இணையதளங்களில் நடிகை ஐஸ்வர்யா மற்றும் அபிஷேக் பச்சன் மகள் ஆராத்யா பச்சனின் உடல் நிலை குறித்து தவறான வீடியோ மற்றும் தகவல்கள் வெளியானது. அப்போதே அபிஷேக் பச்சன் மூலம் ஆராத்யா அந்த வீடியோ மற்றும் இணையதள செய்திகளை அகற்ற உத்தரவிடவேண்டும் என்று கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். தனது மனுவில், `நான் பள்ளிக்குச் செல்லும் ஆரோக்கியமான குழந்தையாக இருந்தாலும், விளம்பரத்திற்காக சில விஷமிகள் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக யூடியூபில் வீடியோக்களை பரப்பி வருகின்றனர். ஒரு வீடியோவில் நான் இறந்துவிட்டதாக குறிப்பிட்டு இருந்தனர்.

அவர்களின் கருத்துகளை உண்மை என்று தெரிவிக்க சில மார்பிங் செய்யப்பட்ட படங்களை வீடியோவில் பயன்படுத்தியுள்ளனர். இத்தகைய நடவடிக்கைகள் தனியுரிமை மற்றும் தகவல் தொழில்நுட்ப விதிகளை மீறுவதாகவும், படங்கள் மற்றும் வீடியோக்களை பயன்படுத்துவதன் மூலம் பதிப்புரிமை உட்பட பச்சன் குடும்பத்திற்கு உள்ள சொத்துரிமைகளை மீறுவதாக இருக்கிறது" என்றும் தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இம்மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், உடனடியாக யூடியூபில் உள்ள ஆராத்யா தொடர்பான வீடியோக்களை அகற்ற நடவடிக்கை எடுக்கும்படி கூகுள் நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. அதோடு ஆராத்யாவின் உடல்நிலை குறித்த தவறான தகவல் அடங்கிய வீடியோவை தொடர்ந்து யூடியூபில் பகிரவும் கோர்ட் இடைக்கால தடை விதித்தது.

அப்படி இருந்தும் யூடியூப்பில் சம்பந்தப்பட்ட வீடியோ நீக்கப்படவில்லை. இதையடுத்து ஆராத்யா பச்சன் மீண்டும் ஒரு மனுவை டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

அதில் தனது உடல் நிலை குறித்த வீடியோக்கள் மற்றும் தகவல்களை யூடியூப் மற்றும் இணையத்தளங்களில் இருந்து அகற்ற உத்தரவிடவேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். அதோடு இதற்கு முன்பு தான் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு மீதான உத்தரவில் இடம் பெற்று இருக்கும் தகவல்கள் தொடர்பான அறிக்கையை வழங்கவேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இம்மனு நீதிபதி மினி புஷ்கர்னா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில் வீடியோவை பதிவேற்றம் செய்தவர்கள் கோர்ட்டில் ஆஜராகவில்லை என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதி, அவர்கள் தங்கள் தரப்பு விளக்கத்தை கூற வாய்ப்பு இருக்கிறது என்று கூறி மனு மீதான விசாரணையை மார்ச் 17ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அதோடு கூகுள், பாலிவுட் டைம் மற்றும் இணையத்தளங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

புனே: அடுக்குமாடி வீட்டில் 300 பூனைகளை வளர்த்த சகோதரிகள்... ஆய்வுக்குச் சென்று அதிர்ந்த அதிகாரிகள்!

புனே ஹடப்சர் என்ற இடத்தில் இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டடத்தின் 9வது மாடியில் இருக்கும் 3 படுக்கை அறை கொண்ட பிளாட்டில் வசித்து வருபவர் ரிது பரத்வாஜ். இவர் தனது சகோதரி ரிங்கு பரத்வாஜ் என்பவ... மேலும் பார்க்க

Kumbh Mela: போக்குவரத்து நெரிசல்; கங்கையில் 275 கி.மீ படகில் பயணத்து கும்பமேளாவில் நீராடிய நண்பர்கள்

உத்தரப்பிரதேசத்தில் மிக பிரமாண்டமாக கும்பமேளா விழா நடைபெற்று வருகிறது. பிரயக்ராஜ் மற்றும் டெல்லி ஆகிய இரண்டு நகரங்களிலும் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 50 பேர் வரை உயிரிழந்துவிட்டனர். தொடர்ந்து லட்சக... மேலும் பார்க்க

Agra: ரூ.50,000 சன்மானம், டிரோன், 3 மாத தேடல்... தொலைந்த நாயைக் கண்டுபிடித்த தம்பதி; என்ன நடந்தது?

டெல்லி அருகில் உள்ள குருகிராமில் வசிப்பவர் தீபயன் கோஷ். இவரது மனைவி கஸ்தூரி. இவர்கள் ஆசையாக இரண்டு வளர்ப்பு நாய்களை வளர்த்து வந்தனர். எங்குச் சென்றாலும் வளர்ப்பு நாயையும் கூடவே அழைத்துச் செல்வர். தீபய... மேலும் பார்க்க

மகாத்மா காந்தி உருவப்படத்துடன் பீர் விற்பனை - சர்ச்சை புகைப்படத்தின் பின்னணி என்ன?!

ரஷ்ய மதுபான தயாரிப்பு நிறுவனம் ஒன்று தனது பீர் பாட்டிலில் மகாத்மா காந்தியின் புகைப்படத்தை இடம்பெற செய்ததற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த புகைப்படத்தின் பின்னணி என்ன என்று பத... மேலும் பார்க்க

Gujarat: தாய் இல்லாத தன் 6 குழந்தைகளைக் கூண்டில் வைத்துப் பாதுகாக்கும் தந்தை; என்ன காரணம் தெரியுமா?

தனது குழந்தைகளைச் சிங்கம் மற்றும் சிறுத்தை தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கத் தனித்துவமான முயற்சியைக் கையாண்டுள்ளார் ஒருவர். குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தைச் சேர்ந்த பரத் என்பவர் தாய் இல்லாத தன் குழந்தை... மேலும் பார்க்க

டெல்லி: அடுத்தடுத்து வந்த 100 பீட்ஸாக்கள்; எல்லாம் கேஷ் ஆன் டெலிவரி! - Ex லவ்வரை அதிர வைத்த பெண்

காதலில் பிரேக்அப் ஏற்பட்டுவிட்டால், சில சந்தர்ப்பங்களில் இரண்டு பேரில் ஒருவர் எதாவது வழியில் மற்றவர்களை பழிவாங்குவதுண்டு. டெல்லியில் அது போன்று பிரேக்அப் ஆன பெண் ஒருவர் தனது காதலனை நூதன முறையில் பழிவா... மேலும் பார்க்க