செய்திகள் :

கரூர் சம்பவம்: அனைத்து வீடியோ ஆதாரங்களை சமர்ப்பித்த தவெக; 2 -ம் நாளாக சிபிஐ விசாரணை

post image

ஆஜரான 12 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள்

கடந்த செப்டம்பர் 27-ம் தேதி த.வெ.க கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வையில், சி.பி.ஐ. ஏ.எஸ்.பி. முகேஷ்குமார் தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த அக்டோபர் 16-ம் தேதி முதல் கரூரில் உள்ள தாந்தோன்றி மலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் அருகே உள்ள சுற்றுலா மாளிகையில் தங்கி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கும் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து இதுவரை 12 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் விசாரணைக்காக ஆஜராகியுள்ளனர்.

சுற்றுலா மாளிகையில் தங்கி விசாரணை
சுற்றுலா மாளிகையில் தங்கி விசாரணை

இது தவிர, வேலுசாமிபுரம் பகுதியில் உள்ள வியாபாரிகள், பொதுமக்கள், பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் ஆகியோரும் ஆஜராகி, செப்டம்பர் 27-ம் தேதி கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது நடந்த சம்பவங்களை சி.பி.ஐ. விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, கடந்த 3-ம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள பனையூரில் சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மன் வழங்கி சென்றதாகவும், விசாரணைக்கு வீடியோ ஆதாரங்களை அடுத்த மூன்று நாட்களில் சமர்ப்பிக்க உள்ளதாகவும் தமிழக வெற்றி கழகத்தின் மாநில இணைச் செயலாளர் நிர்மல் குமார் செய்தியாளர்களைச் சந்திப்பில் கூறியிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக, நவம்பர் 8-ம் தேதி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள சுற்றுலா மாளிகையில் தங்கி உள்ள சி.பி.ஐ. அதிகாரிகளிடம், தமிழக வெற்றி கழகத்தின் வழக்கறிஞர் பிரிவு திருச்சி மண்டல இணைச் செயலாளர் வழக்கறிஞர் அரசு மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் பனையூர் அலுவலக நிர்வாகி குருசரண் உள்ளிட்ட மூவர், கரூர் வேலுசாமிபுரத்தில் பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒளிப்பதிவுகள், ட்ரோன் கேமரா மூலம் பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒளிப்பதிவுகள், விஜயின் வாகனத்தில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி. கேமராவில் பதிவான ஒளிப்பதிவு காட்சிகள் அடங்கிய ஆவணங்களை சமர்ப்பித்தனர்.

கரூர் சோக சம்பவத்தின் போது மருத்துவமனை
கரூர் சோக சம்பவத்தின் போது மருத்துவமனை

இந்நிலையில், அன்றைய விசாரணையில் மதியம் 12.30 மணிக்கு சென்ற த.வெ.க தரப்பு, மதியம் 2 மணிவரை ஆவணங்களை வழங்கி விட்டு சென்றனர்.

இந்நிலையில், நவம்பர் 9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் தமிழக வெற்றி கழகத்தின் வழக்கறிஞர் பிரிவு திருச்சி மண்டல இணைச் செயலாளர் வழக்கறிஞர் அரசு, த.வெ.க பனையூர் அலுவலக நிர்வாகி குருசரண் உள்ளிட்ட மூவர் கூடுதல் ஆவணங்களை வழங்கினர்.

இதன்பின்னர், உணவு இடைவேளை முடிந்து மாலை 3.30 மணிக்கு சி.பி.ஐ. அதிகாரிகளைச் சந்திக்க சென்ற மூவரும், இரவு 8.45 மணிக்கே வெளியே வந்தனர்.

கரூர் வேலுசாமிபுரம் பகுதியில் நடைபெற்ற கூட்ட நெரிசல் சம்பவம், திட்டமிட்ட சதி என த.வெ.க. கட்சி ஆரம்பம் முதலே குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறது.

தமிழக அரசு அமைத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணைக் குழுவும், சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரணையும் த.வெ.க. தரப்புக்கு நம்பிக்கை இல்லை என, டெல்லி உச்சநீதிமன்றம் வரை சென்று சி.பி.ஐ. விசாரணை கோரியது குறிப்பிடத்தக்கது.

எந்தக் கட்டத்தில் ஒரு கூட்டத்தை விட்டு வெளியேற வேண்டும்? உயிர் காக்கும் எச்சரிக்கைகள்!
கரூர் சோகம்

இந்நிலையில், நேற்று நடைபெற்ற விசாரணையில் த.வெ.க. தரப்பு, ஒளிப்பதிவு செய்த அனைத்து வீடியோக்களையும் ஆதாரங்களுடன் சமர்ப்பித்து, சதி நடைபெற்றதற்கான முகாந்திரங்கள் இருப்பதாகவும், இதில் செந்தில் பாலாஜி பங்கு இருப்பதாகவும் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் விளக்கியதாகத் தெரிகிறது.

இன்னும் சில நாள்களில் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி, சி.பி.ஐ. விசாரணையை மேற்பார்வையிட வர உள்ளதால், அப்போது சி.பி.ஐ. அதிகாரிகள் முதல் கட்ட விசாரணையில் சேகரித்த ஆதாரங்களை சமர்ப்பிக்க உள்ளதாகத் தெரிகிறது.

டெல்லி: `பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் மூலம் ஆயுதங்கள் சப்ளை; தாக்குதல் நடத்த சதி' - தீவிரவாதிகள் கைது

டெல்லி அருகே ஜம்மு காஷ்மீர் போலீஸார் ரெய்டு நடத்தி 350 கிலோ வெடிமருந்துகளையும், வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்யும் 20 ரிமோட்களையும் பறிமுதல் செய்தனர். இதேபோன்று ஹரியானாவில் உள்ள பரிதாபாத்தில் இதே போலீஸா... மேலும் பார்க்க

திருச்சி: ``முதல்வர் தங்கியிருந்த இடத்திலிருந்து 2 கி.மீ தூரத்தில் நடந்த படுகொலை'' - அண்ணாமலை

திருச்சி பீமநகர், செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவை சேர்ந்தவர் தாமரைச் செல்வன் (25). கண்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார் மோட்டார் நிறுவனத்தில் வேலை பார்த்த தாமரைச் செல்வன், இன்று காலை இருசக்கர வா... மேலும் பார்க்க

திருச்சி: அரிவாளோடு துரத்திய கும்பல்; தப்பிக்க காவலர் குடியிருப்பில் புகுந்த இளைஞர் வெட்டி படுகொலை

திருச்சி மாநகரம், பீமநகர் கீழத்தெருவை சேர்ந்தவர் தாமரைச்செல்வன்(25). இவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இன்று காலை பீமநகர் அருகே உள்ள மார்சிங்பேடை பகுதியில் இருசக்கர வாகனத்... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை: பாதிக்கப்பட்ட பெண்ணை சமாதானம் பேச அழைத்து மீண்டும் வன்கொடுமை செய்த வழக்கறிஞர்

வேலியே பயிரை மேய்ந்த கதையாக, சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறி அழைத்து சென்று, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்ணை வழக்கறிஞர் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் ஆக்ரா அரு... மேலும் பார்க்க

காவலர் எழுத்துத் தேர்வு; செல்போன் மூலம் காப்பியடித்தவர் கைது

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நேற்று காலையில் நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. தென்காசி மாவட்டத்திலும் மொத்தம் 8 ... மேலும் பார்க்க

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர், தலைமையாசிரியர் மீது போக்சோ வழக்கு பதிவு

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் ஆசிரியர் மீதும், அவர்மீது நடவடிக்கை எடுக்காத தலைமையாசிரியர் மீதும் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியு... மேலும் பார்க்க