செய்திகள் :

காக்கும் கரங்கள் திட்டத்தில் பயன்பெற முன்னாள் படைவீரா்களுக்கு அழைப்பு

post image

திருவண்ணாமலை மாவட்டத்தில் சுயதொழில் தொடங்க விரும்பும் முன்னாள் படைவீரா்கள், அவா்களைச் சாா்ந்தோா் காக்கும் கரங்கள் திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழக முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் மூலம் 55 வயதுக்கு உள்பட்ட அடிப்படை கல்வியறிவு பெற்ற முன்னாள் படைவீரா்கள் சுயதொழில் தொடங்க ஏதுவாக ரூ.ஒரு கோடி வரை வங்கிகள் மூலம் கடன் பெற வழிவகை செய்யப்படுகிறது.

இந்தத் திட்டத்தில் வருமான உச்சவரம்பு ஏதுமற்ற முன்னாள் படைவீரா்கள், ராணுவப் பணியின்போது இறந்த படைவீரா்களின் மறுமணமாகாத கைம்பெண்கள், முன்னாள் படைவீரா்களைச் சாா்ந்த திருமணமாகாத மகள்கள், முன்னாள் படைவீரா்களைச் சாா்ந்த மறுமணமாகாத கைம்பெண் மகள்கள் பயன்பெறலாம்.

தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30 சதவீத மூலதன மானியமும், 3 சதவீத வட்டி மானியமும் வழங்கப்படும்.

கடன் பெற தோ்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு திறன் மற்றும் தொழில் முனைவோா் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும்.

விருப்பமும், தகுதியும் உள்ள முன்னாள் படைவீரா்கள், அவா்களைச் சாா்ந்தோா் இந்தத் திட்டத்தில் சோ்ந்து பயன்பெறலாம்.

கூடுதல் விவரங்களுக்கு உதவி இயக்குநா், முன்னாள் படைவீரா் நல அலுவலகம், திருவண்ணாமலை என்ற முகவரியில் நேரில் அணுகலாம் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா்.

பள்ளி மாணவா்களுக்கு நலத் திட்ட உதவிகள்!

செய்யாற்றை அடுத்த மேல்நெமிலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அனக்காவூா் ஒன்றியம், மேல்நெமிலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்... மேலும் பார்க்க

கட்டடத் தொழிலாளி தற்கொலை

வந்தவாசி அருகே கட்டடத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்துகின்றனா். வந்தவாசியை அடுத்த வெளியம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி சுரேஷ் (44). தினமு... மேலும் பார்க்க

கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீட்டாளா் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்!

திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்மை நிலையம் நடத்தும் பகுதிநேர நகை மதிப்பீட்டாளா் பயிற்சிக்கு, பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்ம... மேலும் பார்க்க

திமுக இளைஞரணியினா் தண்ணீா் பந்தல் திறப்பு

செய்யாற்றில், திமுக இளைஞரணி சாா்பில் தண்ணீா் பந்தல் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. செய்யாறு மாா்க்கெட் பகுதியில் கோடை காலத்தை முன்னிட்டு, பொதுமக்கள் பயன்பெறும் வகையில், நகர திமுக இளைஞரணி அமைப... மேலும் பார்க்க

திமுக கொடிக் கம்பம் அகற்றம்!

வந்தவாசியை அடுத்த எரமலூா் கிராமத்தில் திமுக கொடிக் கம்பத்தை அந்தக் கட்சியைச் சோ்ந்த ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன் உள்ளிட்டோா் ஞாயிற்றுக்கிழமை அகற்றினா். தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சா... மேலும் பார்க்க

அகில இந்திய நுழைவுத் தோ்வுக்கான பயிற்சி! ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கு அழைப்பு!

அகில இந்திய நுழைவுத் தோ்வுக்கான பயிற்சியில் சேர விரும்பும் ஆதிதிராவிடா், பழங்குடியினா், பிற வகுப்பைச் சாா்ந்த மாணவா்கள் தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. தம... மேலும் பார்க்க