செய்திகள் :

குன்றத்தூர்: பூட்டிய வீட்டுக்குள் கணவன் தற்கொலை; மனைவி மர்ம மரணம் - திருமணமான 9-வது நாளில் சோகம்

post image

சென்னை பெருங்குடி பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (25). இவர் அம்பத்தூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அதே நிறுவனத்தில் சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த யுவஸ்ரீ (24) என்பவர் பணியாற்றி வந்தார். இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். கடந்த 9 - நாள்களுக்கு முன்பு விஜய்யும் யுவஸ்ரீயும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம்கட்டளை பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்தனர். சம்பவத்தன்று யுவஸ்ரீக்கு அவரின் சகோதரி போன் செய்தார். ஆனால் யுவஸ்ரீ போனை எடுக்கவில்லை. அதனால் மூன்றாம் கட்டளைக்கு வந்த யுவஸ்ரீயின் சகோதரி, வீட்டின் கதவை நீண்ட நேரமாக தட்டியும் யாரும் திறக்கவில்லை. அதனால் சந்தேகமடைந்த யுவஸ்ரீயின் சகோதரி, வீட்டின் ஓனருக்கு தகவல் தெரிவித்தார்.

விஜய்

இதையடுத்து வீட்டின் ஓனர், குன்றத்தூர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பெட்டில் யுவஸ்ரீ உயிரிழந்து கிடந்தார். விஜய், தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். இதையடுத்து இருவரின் சடலங்களையும் மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமான 9-வது நாளில் விஜய்யும் யுவஸ்ரீயும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக குன்றத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலு தலைமையிலான போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

இதுகுறித்து குன்றத்தூர் போலீஸார் கூறுகையில், ``சடலமாக கிடந்த யுவஸ்ரீயின் அருகில் தலையணை ஒன்று இருந்தது. ஆனால் அவரின் உடலில் காயங்கள் இல்லை. அதனால் யுவஸ்ரீ எப்படி இறந்தார் என்ற தகவல் பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டில்தான் தெரியவரும். அதே நேரத்தில் விஜய், தூக்குப் போட்டு தற்கொலை செய்திருக்கிறார். புதுமண தம்பதியான விஜய்க்கும் அவரின் மனைவி யுவஸ்ரீக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் இந்த விபரீத முடிவை எடுத்தார்களா என்று விசாரித்து வருகிறோம்" என்றனர்.

கேரளா: பாலியல் கொடுமைக்கு ஆளான நடிகையின் அடையாளத்தை வெளிப்படுத்தி வீடியோ; 3 பேரைக் கைதுசெய்த போலீஸ்

கேரள மாநிலத்தைச் சேர்ந்த நடிகை 2017-ம் ஆண்டு காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு கடந்த 8-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில் நடிகர் திலீப் விடுவிக்கப்பட்ட நிலையில், பல்சர் ... மேலும் பார்க்க

`இன்டர்னல் மார்க்கில் கைவைப்பேன்!' - மாணவிக்குப் பாலியல் தொல்லை; மருத்துவக் கல்லூரி அலுவலர் தலைமறைவு

தென்மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், சென்னை புறநகர் பகுதியில் உள்ள பல் மருத்துவக் கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்து முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில்தான் மாணவிக்கு கல்லூரி நிர்வாகத்த... மேலும் பார்க்க

சேலம்: அரசு பள்ளிக்குள் நள்ளிரவில் மாந்திரீக பூஜை? அதிர்ச்சியில் ஆசிரியர்கள் - போலீஸார் விசாரணை

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கமாண்டப்பட்டியில், ஓமலூர் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஓமலூர் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகி... மேலும் பார்க்க

சிவகாசி: குடும்பப் பிரச்னை; மனைவி, பிள்ளைகளை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்ல முயன்ற நபர்!

Lவிருதுநகர் மாவட்டம், சிவகாசி நகர காவல் நிலையம் அருகே உள்ள முஸ்லிம் ஓடை தெருவில் நேற்று நடந்த பயங்கர சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக ஒருவர் தன் மனைவி, இரு பிள்ளைகள் ... மேலும் பார்க்க

ஆன்லைன் முதலீடு: லிங்க் அனுப்பி, பொறியாளரிடம் ரூ.3.24 கோடி மோசடி - சைபர் கிரைம் போலீஸார் விசாரணை

வேலூர் மாவட்டம், காட்பாடியைச் சேர்ந்த 47 வயது நபர், அபுதாபியில் பொறியாளராக வேலைச் செய்கிறார். இவர், அண்மையில் விடுமுறை எடுத்துக்கொண்டு காட்பாடியிலுள்ள தனது வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது, அவரின் வா... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர்: அக்கா கணவர் கொலை; தம்பி, தாய், சகோதரியுடன் கைது - நடந்தது என்ன?

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் காதி போர்டு காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார். இவரின் மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு ஆகாஷ், ஹரிஷ் ஆகிய இரு மகன்களும், ஹரிணி என்ற மகளும் உள்ளனர். ராம்குமார் பழைய ... மேலும் பார்க்க