செய்திகள் :

கேரளாவில் வீடு புகுந்து 50 சவரன் தங்கநகைகள் கொள்ளை; நெல்லை இளைஞர்கள் சிக்கியது எப்படி?!

post image

கேரள மாநிலம், பந்தளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டில் கடந்த 21-ம் தேதி மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் தங்கநகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். அவற்றின் மதிப்பு சுமார் ரூ.60 லட்சம் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக பந்தளம் காவல் நிலைய போலீஸார், வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்தனர்.

தங்கநகைகள் கொள்ளை

அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா  பதிவுகளை ஆய்வு செய்த போலீஸார், செல்போன் சிக்னல் மூலம் துப்பு துலக்கினர். இக்கொள்ளைச் சம்பவத்தில் நெல்லை மாவட்டம், திருக்குறுங்குடியைச் சேர்ந்த இசக்கிரமேஷ், காவல்கிணற்றைச் சேர்ந்த கணேஷ் ஆகியோர் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து பந்தளம் போலீஸார் இருவரையும் கண்காணித்து வந்தனர்.

 இந்த நிலையில், அவரவர் ஊர்களில் பதுங்கியிருந்த இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட தங்கநகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரும் கேரளாவிற்குச் செல்ல வேண்டிய அவசியம் என்ன? கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது எப்படி எனவும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தங்கநகைகள் கொள்ளை

இந்த கொள்ளைச் சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? எனவும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடக மாநிலம், உடுப்பியில் நடந்த கொள்ளைச் சம்பவத்திலும் இவர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. கேரளாவில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் நெல்லையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.  

`விஷத்தின் சுவை என்ன?' - சிறுமிகளின் விபரீத எண்ணத்தில் பறிபோன 4 உயிர்; நடந்தது என்ன?

பீகார் மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத்தில் உள்ள ஹஸ்புரா என்ற இடத்திற்கு அருகில் உள்ள மோடி பிகா என்ற இடத்தை சேர்ந்த 4 மைனர் பெண்கள் விஷம் குடித்து உயிரிழந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் 12 முதல் 15 வயதுட்ப... மேலும் பார்க்க

பிறந்தநாள் பார்ட்டிக்கு வந்த காதலி; நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற காதலன்

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் எம்.பி.ஏ.படித்து வந்த 24 வயது பெண் தனது தந்தையுடன் பிறப்பு சான்றிதழில் திருத்தம் செய்வதற்காக சென்றார். வேலை முடிந்தவுடன் தனது தந்தையிடம் தனது நண்பர் பியூஷ் தனோடியாவின் ... மேலும் பார்க்க

சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து? - இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு... வீட்டில் ரெய்டு!

சென்னை போலீஸ் கமிஷனரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள மத்திய குற்றப்பிரிவின் கீழ் விபச்சார தடுப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்தப் பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ராஜலட்சுமி. இவரின் வீடு சென்... மேலும் பார்க்க

வீடு தேடிச் சென்று பஜ்ரங் தள் பிரமுகரைக் குத்திக் கொன்ற மர்ம நபர்; புதுக்கோட்டையில் பரபரப்பு!

புதுக்கோட்டை, திருவப்பூர் குட்செட் சாலையைச் சேர்ந்தவர் மெய்யப்பன். இவர் மகன் மோகன்ராஜ் (வயது: 38). இவர், பஜ்ரங் தள் அமைபின் முன்னாள் மாவட்டத் தலைவராகவும், ராமேஸ்வரம் கோட்டப் பொறுப்பாளராகவும் இருந்தார்... மேலும் பார்க்க

MP: பில்லி சூனிய நம்பிக்கை; பக்கத்து வீட்டுக்காரர்களை வெட்டிப் பலி கொடுத்த நபர்; வெளியான பகீர் தகவல்

மத்தியப் பிரதேச மாநிலம் சிங்ராலி மாவட்டத்தில் மனைவிக்குக் கருச்சிதைவு ஏற்பட்டதற்குப் பக்கத்து வீட்டுக்காரர்கள் இரண்டு பேரை கடவுளுக்குப் பலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.அங்குள்ள அ... மேலும் பார்க்க

சென்னை: பெண் காவலர் மர்ம மரணம்; உள்ளாடையுடன் சடலம் மீட்பு; கணவரிடம் விசாரணை

சென்னை எழும்பூர் காவல் குடியிருப்பில் வசித்து வருபவர் காவலர் சிலம்பரசன். இவரின் மனைவி புவனேஸ்வரி. இவர், எழும்பூர் குற்றப்பிரிவில் காவலராகப் பணியாற்றி வந்தார்.சிலம்பரசனுக்கும் புவனேஸ்வரிக்கும் அடிக்கடி... மேலும் பார்க்க