செய்திகள் :

கோவில்பட்டி: குடும்பத் தகராறு; டாஸ்மாக் மதுபானக் கூடத்தில் 2 பேர் கொலை செய்யப்பட்ட கொடூரம்!

post image

தூத்துக்குடி மாவட்டம்,  கோவில்பட்டி அருகேயுள்ள  காப்புலிங்கம்பட்டியைச் சேர்ந்தவர் முருகன். அதே ஊரைச் சேர்ந்த இவரது உறவினர் மந்திரம். இவர்கள் 2 பேரும்  தளவாய்புரம் பகுதியிலுள்ள மதுபானக் கூடத்தில் மது அருந்திக் கொண்டிருந்தபோது, இவர்களது உறவினரான அதே ஊரைச் சேர்ந்த கோமு என்பவர், “என்னுடைய மனைவி தங்கத்தாய் பிரிந்து சென்றதற்கு நீங்கள்தான் காரணம்” எனக்கூறி இருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.  

கொலையாளி கோமு- கொலை செய்யப்பட்ட மந்திரம் & முருகன்

அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றவே மறைத்து வைத்திருந்த அரிவாளால் முருகன் மற்றும் மந்திரத்தை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். மதுபானக்கூடத்தில் இருந்தவர்கள், பலத்த காயம் அடைந்த இருரையும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.  அங்கு பரிசோதனை செய்த மருத்துவர், முருகன் இறந்து விட்டதாக கூறினார். மந்திரம்  முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர், தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.  

அங்கு சிகிச்சை பெற்று வந்த மந்திரம், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கயத்தாறு காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்ததுடன் கொலை செய்த கோமுவை  தேடி வருகின்றனர்.  போலீஸாரிடம் பேசினோம், “முருகனின் அக்கா தங்கத்தாய். தங்கத்தாயைத்தான் கொலையாளியான கோமு திருமணம் செய்துள்ளார். முருகனின் தங்கை மாரியம்மாளை திருமணம் செய்தவர்தான் மந்திரம். மூவருமே நெருங்கிய உறவினர்கள்தான்.

கயத்தார் காவல் நிலையம்

போலீஸாரால் தேடப்பட்டு வரும் கோமு,  ஏற்கெனவே ஒரு கொலை வழக்கில் 14 ஆண்டுகள் சிறை தண்டனை  அனுபவித்தவர். சிறையை விட்டு வெளியே வந்தபிறகு விவசாயம் செய்து  வந்துள்ளார். அடிக்கடி மது அருந்திவிட்டு தனது மனைவி மற்றும் மகன் மாடசாமியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.  கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மகனை கத்தியால் குத்த முயன்றுள்ளார். அத்துடன் அவரது மனைவியும் தாக்கியுள்ளார். இதனால், அவரது மனைவி மற்றும் மகன் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். அவரது மனைவி தங்கத்தாய் ஊரைவிட்டு வெளியேறி வெளியூரில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

தன்னுடைய மனைவி கோபித்துக் கொண்டு வெளியூர் சென்றதற்கு முருகன் மற்றும் மந்திரம் ஆகிய இருவரும்தான் காரணம் என்று கூறி  அடிக்கடி கோமு, தகராறு செய்து வந்துள்ளார். அது மட்டுமின்றி தன்னுடைய மனைவி இருக்கும் இடத்தை கூறும்படி இருவரிடமும் கேட்டு வந்துள்ளார். இதற்கிடையில் முருகன், மந்திரம் ஆகிய இருவரும் மதுபானக்கூடத்தில் மது அருந்திக் கொண்டிருப்பதைப் பார்த்த்துள்ளார் கோமு.

கயத்தார் காவல் நிலையம்

அப்போது, ”என்னுடன் என் மனைவியை வாழ விடாமல் கெடுத்து விட்டு நீங்கள் மட்டும் சரக்கடித்து சந்தோசமாக இருக்கலாமா?”  என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளார். இந்த நிலையில் கோமு, முருகன் மற்றும் மந்திரத்தை அரிவாளால் சரமாரியாக வெட்டும் பதபதைக்கும் சி.சி.டி.வி. காட்சிகள், சமூக வலைதளங்களில்  வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருமணம் மீறிய உறவு; பெண்ணைக் கொன்றுவிட்டு போலீஸில் சரணடைந்த நபர் - ராமேஸ்வரத்தில் அதிர்ச்சி!

ராமேஸ்வரம் ராமர்பாதம் செல்லும் வழியில் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை உள்ளது. இங்கு காவலாளியாக பணியாற்றி ஓய்வு பெற்ற கார்மேகம் என்பவர் தற்போது தற்காலிக காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கடந்த ... மேலும் பார்க்க

கரூர்: வங்கி மேலாளரை மிரட்டி பணம் பறிப்பு; திமுக பிரமுகரைக் கைதுசெய்த போலீஸார்!

திருச்சி, அகிலாண்டபுரம் தாயுமானவர் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகன் சிவா (வயது: 33). இவர், குளித்தலை காவல் நிலையம் அருகில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியின் கிளையில் மேலாளராக வேலை பார்த்து வருக... மேலும் பார்க்க

மும்பை: சூட்கேஸில் இருந்த 22 வயது பெண்ணின் சடலம்; 50 வயது லிவ்-இன் பார்ட்னர் சிக்கியது எப்படி?

மும்பை அருகில் உள்ள ஷில் தைகர் கழிமுகப்பகுதியில் பாலத்திற்குக் கீழே டிராலி பேக் ஒன்று கேட்பாரற்று கிடந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் விரைந்து வந்து அந்தப் பேக்கைப்... மேலும் பார்க்க

சென்னை: `உங்க தம்பி தூக்கு போட்டு தற்கொலை செய்துட்டாரு’ - கணவரைக் கொன்று நாடகமாடிய மனைவி சிக்கினார்

சென்னை, கொடுங்கையூர், வெங்கடேஸ்வரா நகர் 2-வது தெருவில் குடியிருந்தவர் மணிகண்டன் (34). இவர், சொந்தமாக கார் வைத்து சில நிறுவனங்களுக்கு ஓட்டி வந்தார். இவரின் மனைவி சரண்யா. இந்தத் தம்பதியினருக்கு ஒரு மகனு... மேலும் பார்க்க

வேலூர்: பெண் சிசுவை கால்வாயில் வீசிய தந்தை, பாட்டி கைது; நல்லடக்கம் செய்த போலீஸ் - நடந்தது என்ன?

வேலூர் அரசு `பென்ட்லேண்ட்’ பல்துறை உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அருகிலுள்ள கழிவுநீர் கால்வாயில், நேற்று முன்தினம், பச்சிளம் பெண் சிசுவின் சடலம் மிதந்து கொண்டிருந்ததைப் பார்த்து பொது மக்கள் அதிர்ச்சியட... மேலும் பார்க்க

`ரூ.50 லட்சத்துக்கு ஆடம்பர பைக் கேட்டு ரகளை' - மகனை கம்பியால் அடித்துக்கொன்ற தந்தை

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த வஞ்சியூரைச் சேர்ந்தவர் வினயானந்த் (52). இவரது மகன் ஹிருத்திக்(28). ஹிருத்திக் ஆடம்பர பைக் வேண்டும் பெற்றோரிடம் தகராறு செய்துவந்தார். தொல்லை தாங்கமுடியாமல் லோன் எடு... மேலும் பார்க்க