செய்திகள் :

`ரூ.50 லட்சத்துக்கு ஆடம்பர பைக் கேட்டு ரகளை' - மகனை கம்பியால் அடித்துக்கொன்ற தந்தை

post image

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த வஞ்சியூரைச் சேர்ந்தவர் வினயானந்த் (52). இவரது மகன் ஹிருத்திக்(28).

ஹிருத்திக் ஆடம்பர பைக் வேண்டும் பெற்றோரிடம் தகராறு செய்துவந்தார். தொல்லை தாங்கமுடியாமல் லோன் எடுத்து 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு பைக் வாங்கி கொடுத்தனர் பெற்றோர்.

இதற்கிடையே அக்டோபர் மாதம் 21-ம் தேதி தனது பிறந்த நாளுக்கு முன்பு 50 லட்சம் ரூபாய்க்கு இரண்டு ஆடம்பர பைக்குகள் வாங்கித்தரவேண்டும் என ஹிருத்திக் பெற்றோருக்கு தொல்லை கொடுத்துவந்தார்.

ஹிருத்திக்
ஆடம்பர பைக் கேட்டதால் தந்தையால் கொலை செய்யப்பட்ட ஹிருத்திக்

கடந்த அக்டோபர் மாதம் 9-ம் தேதி ஆடம்பர பைக் கேட்டு பெற்றோரிடம் வாக்குவாதம் செய்தார். ஒரு கட்டத்தில் அரிவாளால் தந்தையை தாக்கியுள்ளார். இதைத்தொடர்ந்து குழி தோண்ட பயன்படுத்தும் கம்பியால் தனது மகனின் தலையில் பலமாக அடித்தார் வினயானந்த்.

இதில் படுகாயம் அடைந்து மயங்கிய ஹிருத்திக்கை திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார் தந்தை வினயானந்த்.

பின்னர் மகனை தாக்கியதாககூறி காவல் நிலையத்தில் சரணடைந்தார் வினயானந்த். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார், ஆடம்பர பைக் கேட்டு ஹிருத்திக் அவ்வப்போது பெற்றோரை தாக்கிவந்ததைத் தொடர்ந்தே தந்தை கம்பியால் அடித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

ஹிருத்திக்
ஹிருத்திக்

இந்த நிலையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஐ.சி.யூ-வில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்துவந்த ஹிருத்திக் சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்தார். இதையடுத்து தந்தை மீதான வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.

ஆடம்பர பைக் கேட்டு அடம்பிடித்த மகனை தந்தையே அடித்து கொலைசெய்த சம்பவம் கேரளாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

மும்பை: சூட்கேஸில் இருந்த 22 வயது பெண்ணின் சடலம்; 50 வயது லிவ்-இன் பார்ட்னர் சிக்கியது எப்படி?

மும்பை அருகில் உள்ள ஷில் தைகர் கழிமுகப்பகுதியில் பாலத்திற்குக் கீழே டிராலி பேக் ஒன்று கேட்பாரற்று கிடந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் விரைந்து வந்து அந்தப் பேக்கைப்... மேலும் பார்க்க

சென்னை: `உங்க தம்பி தூக்கு போட்டு தற்கொலை செய்துட்டாரு’ - கணவரைக் கொன்று நாடகமாடிய மனைவி சிக்கினார்

சென்னை, கொடுங்கையூர், வெங்கடேஸ்வரா நகர் 2-வது தெருவில் குடியிருந்தவர் மணிகண்டன் (34). இவர், சொந்தமாக கார் வைத்து சில நிறுவனங்களுக்கு ஓட்டி வந்தார். இவரின் மனைவி சரண்யா. இந்தத் தம்பதியினருக்கு ஒரு மகனு... மேலும் பார்க்க

வேலூர்: பெண் சிசுவை கால்வாயில் வீசிய தந்தை, பாட்டி கைது; நல்லடக்கம் செய்த போலீஸ் - நடந்தது என்ன?

வேலூர் அரசு `பென்ட்லேண்ட்’ பல்துறை உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அருகிலுள்ள கழிவுநீர் கால்வாயில், நேற்று முன்தினம், பச்சிளம் பெண் சிசுவின் சடலம் மிதந்து கொண்டிருந்ததைப் பார்த்து பொது மக்கள் அதிர்ச்சியட... மேலும் பார்க்க

`தூங்க கூட நேரம் கிடைக்கவில்லை’ - தண்ணீர் தொட்டியில் வீசி குழந்தையைக் கொன்ற தாய்

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் ரெட்டித்தோப்பு துணை மின்நிலையம் அருகிலுள்ள குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் அக்பர் பாஷா (27). ஷு கம்பெனி தொழிலாளி. இவரின் மனைவி அஸ்லியா தஸ்மின் (23). இவர்களுக்கு 5 வ... மேலும் பார்க்க

நெல்லை: 'வீட்டில ஒரு ரூபாய் இல்லை; இதுல இத்தன கேமரா!’ - கடுப்பான திருடன் எழுதி வைத்த கடிதம்!

நெல்லை புறநகர் பகுதியான பேட்டை, ஐஓபி காலனியைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் பால். 57 வயதான இவர் அந்தப் பகுதியில் கிறிஸ்துவ ஊழியம் செய்து வருகிறார். அவரது மகள் மதுரையில் உள்ள தனியார் வங்கியொன்றில் பணியாற்றி வருகி... மேலும் பார்க்க

கரூர் சம்பவம் : இரண்டாம் நாளாக சி.பி.ஐ முன்பு ஆஜரான த.வெ.க நிர்வாகிகள்! நடந்தது என்ன?

த.வெ.க கட்சி இந்தாண்டு செப்டம்பர் 27-ம் தேதி நடத்திய பிரசார கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, டெல்லி உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சிறப்பு புலனாய்வு குழு விச... மேலும் பார்க்க