செய்திகள் :

கோவையில் 80 அடி உயரத்தில் பழுதான ரோலர் கோஸ்டர்! - 3 மணிநேர போராட்டத்துக்கு பிறகு மீட்பு

post image

கோவை கொடிசியா மைதானத்தில், தனியார் நிறுவனம் சார்பில் கடந்த டிசம்பர் 26-ம் தேதி முதல் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அங்கு செயற்கை நீருற்று  மற்றும் பல்வேறு விதமான ராட்டினங்கள் வைக்கப்பட்டுள்ளன.

கோவை

பொருட்காட்சிக்கு தினசரி ஏராளமான மக்கள் சென்று வருகிறார்கள். நேற்று இரவு 10 மணி அளவில் ரோலர் கோஸ்டர் ராட்டினத்தில் 20-க்கும் மேற்பட்ட மக்கள் சென்றுள்ளனர்.

சுமார் 80 அடி உயரத்தில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென ராட்டினம் பழுதாகி நின்றுள்ளது. பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 20 பேர் பயத்தில் கதறி துடித்தனர். எவ்வளவு முயற்சித்தும் பழுது சரியாகவில்லை என்பதால் தீயணைப்பு  துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

கோவை பொருட்காட்சி

அதிநவீன இயந்திரங்கள், வாகனங்களில் வந்த தீயணைப்புத்துறையினர் அவர்களை மீட்கும் பணியில் இறங்கினார்கள். இதனால் அங்கு உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டது.

இரவுநேரம் என்பதால் மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டது. தீயணைப்புத்துறையினரின் தீவிர முயற்சியால் மக்கள் நீண்ட நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்டனர். ராட்டினத்தில் பயணம் செய்த 20 பேரும் சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டனர். கீழே வந்த பிறகு தான் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதுதொடர்பாக மக்கள் பொருட்காட்சி ஏற்பாட்டாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

'மதுபோதையில் டிராக்டரை ஓட்டிய நபர்; ஆட்டுமந்தையில் மோதி 81 ஆடுகள் பலி' - திருச்சியில் அதிர்ச்சி

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள தச்சங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் பி.இ பட்டதாரியான நித்திஸ். இவர், கடந்த 4 வருடமாக செம்மறி ஆடு வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந... மேலும் பார்க்க

மும்பை: லிஃப்ட்டில் பலூன்களுடன் ஏறிய நபர்; நொடிப் பொழுதில் நடந்த அசம்பாவிதம்; இருவர் காயம்!

மும்பை, கோரேகாவ் பகுதியில் உள்ள அமோல் டவர் என்ற குடியிருப்பு கட்டடத்தில் இருக்கும் லிஃப்டில் பலூன் வெடித்து தீப்பிடித்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ராஜ்குமார் என்பவர் சாக்குமூட்டையில் ஹீலியம் ... மேலும் பார்க்க

இரு விமானங்களின் இறக்கைகள் உரசிக்கொண்டு விபத்து - மும்பை விமான நிலையத்தில் திக் திக்.!

மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று மாலை மும்பையில் இருந்து கோயம்புத்தூர் செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட தயாராக நின்று கொண்டிருந்தது. அந்நேரம் ஐதராப... மேலும் பார்க்க

Ajit Pawar: 'நிறைவேறாத முதல்வர் கனவு; ஆட்சியைப் பிடித்த வாக்குறுதி' - யார் இந்த அஜித் பவார்?

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் இன்று அதிகாலை தனி விமானத்தில் தனது பாதுகாவலர்களுடன் தனது சொந்த ஊரான பாராமதிக்குச் சென்று கொண்டிருந்தார்.விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் பாராமதியில் விம... மேலும் பார்க்க

Ajit Pawar: துணை முதல்வர் பயணித்த விமானம் விபத்து! - சொந்த ஊரில் அஜித் பவார் உயிரிழந்த சோகம்

மகாராஷ்டிராவின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) தலைவரும், மகாராஷ்டிர துணை முதல்வருமான அஜித் பவார் இன்று (புதன்கிழமை) காலை மும்பையிலிருந்து பாராமதிக்கு புறப்பட்டுச் சென்றார். காலை சுமார் 8:45 மணியளவ... மேலும் பார்க்க

நாமக்கல்: அடுத்தடுத்து மோதிக்கொண்ட வாகனங்கள்; நிகழ்விடத்தில் மூவர் பலியான சோகம்

நாமக்கல்லில் இருந்து சமையல் எண்ணெய் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று திருச்சி நோக்கி செவ்வாய்க்கிழமை சென்றுகொண்டிருந்தது.நாமக்கல்-திருச்சி பிரதான சாலையில் ரமேஷ் தியேட்டர் அருகே உள்ள ரயில்வே மேம்பாலத்த... மேலும் பார்க்க