செய்திகள் :

சென்னை: நர்ஸ் குளிப்பதை வீடியோ எடுத்த ரூம்பாய்; லாட்ஜில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! - கைதுசெய்த போலீஸ்

post image

கேரள மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவர், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்ஸாகப் பணிபுரிந்து வருகிறார். இவர் தோழியுடன் சேர்ந்து சொந்த ஊருக்குச் சென்று விட்டு கடந்த 04.01.2026-ம் தேதி சென்னை வந்தார். பின்னர் இருவரும் சென்னை சென்ட்ரல் பகுதியில் லாட்ஜில் தங்கியிருந்தனர். பின்னர் நர்ஸ், பாத்ரூமில் குளிக்கச் சென்றபோது, ஜன்னல் வழியாக மர்ம நபர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அதைக் கவனித்த நர்ஸின் தோழி சத்தம் போட்டுள்ளார்.

தனஞ்செய் பதி

அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நர்ஸ், பாத்ரூமை விட்டு அவசர அவசரமாக வெளியில் வந்திருக்கிறார். இதையடுத்து இருவரும் சேர்ந்து வீடியோ எடுத்துக் கொண்டிருந்த மர்ம நபரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவரின் செல்போனை வாங்கிப் பார்த்தபோது அதில் நர்ஸ் குளிக்கும் வீடியோ அழிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்னொரு பெண் ஒருவர் குளிக்கும் வீடியோ இருந்தது. அதைத் தொடர்ந்து லாட்ஜ் நிர்வாகத்துக்கு நர்ஸ் தகவல் தெரிவித்தார். அவர்கள் வந்து விசாரித்தபோது வீடியோ எடுத்தது ரூம் பாய் தனஞ்செய் பதி, (19) என்று தெரியவந்தது. இதையடுத்து நர்ஸ், வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார், பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் (TNPHW Act) மற்றும் IT Act ஆகிய பிரிவுகளின் கீழ் தனஞ்செய் பதி மீது வழக்கு பதிவுசெய்தனர். அவரின் செல்போனையும் சைபர் க்ரைம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் தனஞ்செய் பதி, ஒடிசாவைச் சேர்ந்தவர். இவர், லாட்ஜில் தங்கியிருக்கும் பெண்கள் குளிக்கச் செல்லும் போது வீடியோ எடுத்து பார்ப்பதை வழக்கமாக வைத்திருப்பது தெரியவந்தது. விசாரணைக்குப் பிறகு தனஞ்செய் பதியை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சேலம்: பட்டா பெயர் மாற்றத்திக்கு லஞ்சம்; ஓய்வுபெற இருந்த வருவாய் ஆய்வாளர் கைது; நடந்தது என்ன?

சேலம் மாவட்டம், ஆத்தூர் மந்தவெளி பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது தாய் பச்சியம்மாள் பெயரில் உள்ள பட்டாவை தனது பெயருக்கு மாற்றம் செய்ய ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார். அந்த மனு... மேலும் பார்க்க

`திறமையை சோதிக்க வேண்டுமென அழைத்தார்' - 17 வயது வீராங்கனையை வன்கொடுமை செய்த பயிற்சியாளர்

டெல்லியில் நடந்த துப்பாக்கிச் சுடும் போட்டியில், 17 வயது வீராங்கனை கலந்து கொண்ட நிலையில், அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருக்கிறார். அந்த வீராங்கனைக்கு காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடுவதில் த... மேலும் பார்க்க

தூத்துக்குடி:`இன்ஸ்டாவில் சக நண்பர்களுடன் பேசக்கூடாது' - சமாதானம் பேச அழைத்து காதலியை கொன்ற காதலன்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகிலுள்ள தளவாய்புரத்தைச் சேர்ந்தவர் உமா. இவர், தென்காசி மாவட்டம், பாறைப்பட்டியில் உள்ள தனியார் காவலர் பயிற்சிப்பள்ளியில் படித்து வந்தார். இதே பள்ளியில் திருவேங்கடம் அ... மேலும் பார்க்க

நெல்லை: திருமணம் மீறிய உறவு - கார் வாங்குவது போல் வரவழைத்து வியாபரி கொலை செய்யபட்ட கொடூரம்!

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகிலுள்ள முதலூரைச் சேர்ந்தவர் மார்ட்டின் ஸ்டான்லி. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்த இவர், கடந்த ... மேலும் பார்க்க

மும்பை தேர்தலில் மிரட்டல், படுகொலை: சேனா வேட்பாளருக்கு கத்திக்குத்து, எதிர்க்கட்சி நிர்வாகி படுகொலை!

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் மாநகராட்சிகளுக்கு வரும் 15ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் பா.ஜ.க கூட்டணி, சிவசேனா(உத்தவ்) கூட்டணி, காங்கிரஸ் என மும்முனைப்போட்டி நிலவுகிறது. இத்தேர்தலில் ... மேலும் பார்க்க

நெல்லை: `வாடகைக்கு டேபிள், சேர் தராததால் கொன்றோம்'- போலீஸையே அதிரவைத்த குற்றவாளிகளின் வாக்குமூலம்!

நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் அருகேயுள்ள மேலப்புதுக்குடியைச் சேர்ந்தவர் ராம்குமார். மாவு மில் உரிமையாளரான இவர், டேபிள், சேர் வாடகைக்கு விடும் தொழிலும் நடத்தி வந்தார். இவரது மாவுமில்லுக்கு அருகில் செல்வ... மேலும் பார்க்க