செய்திகள் :

சேலம்: அன்புமணி ஆதரவு பாமக எம்எல்ஏக்கள் தர்ணா போராட்டம்; எம்எல்ஏ அருள் உட்பட 40 பேர் மீது வழக்கு

post image

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள வடுகத்தாம்பட்டி பகுதியில் பாமக நிர்வாகி ஒருவருடைய தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நேற்றைய தினம் சென்றிருந்தனர்.

அப்போது அப்பகுதியில் வாகனம் நிறுத்துவது தொடர்பாக அன்புமணி ஆதரவாளர்களுக்கும், பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் ஆதரவாளர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

மேலும் பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் ஆதரவாளருடன் சென்றிருந்த ஐந்து கார்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இந்த நிலையில், ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் கொடுத்த புகாரின் பேரில் 20 பேர் மீது வழக்குப்பதிந்து ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து, அன்புமணி ஆதரவாளர்கள் தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் காவல்துறை எடுக்காததால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பா.ம.க எம்.எல்.ஏ.க்கள் சதாசிவம் மற்றும் மயிலம் சிவக்குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்சியினர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பா.ம.க-வினர் மோதல்
பா.ம.க-வினர் மோதல்

பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் ஆதரவாளர்களுடன் காரில் வேகமாக வந்தபோது, கார் மோதியதில் ஒருவர் காயமடைந்துள்ளார். மேலும் கார் நிறுத்துவது தொடர்பாகப் பேசியபோது தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் உட்பட அவரது ஆதரவாளர்கள் மீது கொடுக்கப்பட்ட புகார்களுக்கு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி அன்புமணி ஆதரவாளர்கள் காவல்துறை அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அன்புமணி ஆதரவாளர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். காவல்துறையினர் ஒரு தலைப்பட்சமாகச் செயல்படுவதாக அன்புமணி ஆதரவாளர்கள் குற்றச்சாட்டு முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் உட்பட 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கொலை முயற்சி உட்பட ஐந்து பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Bihar: 10-வது முறையாக முதல்வராகும் நிதீஷ் குமார்; புதிய அமைச்சரவை குறித்து வெளியான தகவல்!

பீகாரில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி எப்போதும் இல்லாத அளவுக்கு அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் 206 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சிகளின் மகாகட்பந்தன் ... மேலும் பார்க்க

வங்கதேச வன்முறை : `ஷேக் ஹசீனா குற்றவாளி; மரண தண்டனை விதிக்கிறோம்’ - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, அரசு வேலைகளில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு 30% இட ஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக 2024 ஜூலை மாதம் பல்கலைக்கழக மாணவர்கள... மேலும் பார்க்க

மும்பை: மாநகராட்சி தேர்தல்; `சுயமாக முடிவெடுக்கலாம்!’ - காங்கிரஸை கைகழுவ தயாராகும் உத்தவ்?

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் ஜனவரி மாதம் மாநகராட்சி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. ஏற்கனவே மாநகராட்சி வார்டுகள் குலுக்கல் முறையில் எது பெண்களுக்கானது என்பத... மேலும் பார்க்க

Mexico: அதிபர் மீது அதிருப்தி; மெக்சிகோவிலும் வெடித்த Gen Z போராட்டம் - ஏன், என்ன நடந்தது?

இந்தோனேசியா, வங்கதேசம், மடகாஸ்கர் மற்றும் நேபாளத்தில் ஆளும் அரசாங்கத்தின் பல்வேறு நிர்வாகக் கோளாறுகளை எதிர்த்து மிகப் பெரிய 'ஜென் Z' போராட்டங்கள் நடைபெற்றன. இந்தப் போராட்டங்கள் அனைத்தும் அந்தந்த நாடுக... மேலும் பார்க்க

Pa.Ranjith:``கம்யூனிஸ்ட்டுகள் ஏன் அம்பேத்கரை வாசிக்கவில்லை?" - பா.ரஞ்சித் முன்வைக்கும் குற்றச்சாட்டு

நீலம் பண்பாட்டு மையம் சார்பில், சென்னை தேனாம்பேட்டையில் அறிஞர் ராஜ் கௌதமன் நினைவு விருது வழங்கும் விழா நடைபெற்றது. 2025-ம் ஆண்டுக்கான அறிஞர் ராஜ் கெளதமன் நினைவு விருது ஆய்வாளர், எழுத்தாளர் வ.கீதா அவர்... மேலும் பார்க்க