செய்திகள் :

சேலம்: சாலை அமைக்கும் பணியில் தகராறு; மூதாட்டியைத் தாக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ; வீடியோ வைரல்

post image

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த மேச்சேரி ஒன்றியத்தில் உள்ள காமனேரி பகுதியில் சாலை பணி நடக்கிறது. அங்கு வசிக்கும் மூதாட்டி சரோஜா வீட்டை ஒட்டி சாலை அமைக்க முயன்றுள்ளனர். அப்போது வீட்டை ஒட்டி போடாமல், அந்தப் பக்கமுள்ள அரசு நிலத்தில் சேர்த்து போடவும் என்று சரோஜா கூறியுள்ளார்.

இதை அறிந்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ அர்ஜுனன், மூதாட்டி சரோஜாவை கிராம மக்கள் முன்னிலையில் சரமாரியாக அடித்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில், பாதிக்கப்பட்ட சரோஜா ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மூதாட்டியைத் தாக்கிய முன்னாள் எம்எல்ஏ
மூதாட்டியைத் தாக்கிய முன்னாள் எம்எல்ஏ

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி சேலம் மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அர்ஜுனன், கொரோனா காலத்தில், ஓமலூர் டோல்கேட் அருகே போலீசாரை தாக்கிய வழக்கும் அவர் மீது உள்ளதாகக் கூறப்படுகிறது.

இவர் அதிமுகவில் எம்.எல்.ஏ, திமுகவில் எம்.பி, தேமுதிகவில் மாவட்ட செயலாளர் என இருந்தவர். தற்போது அரசியலில் இருந்து விலகி, விவசாயம் செய்து வருகிறார். மூதாட்டியைத் தாக்கியது மட்டுமின்றி, தொடர்ந்து ஊர் மக்களை மிரட்டி வரும் அர்ஜுனனைக் கைது செய்ய வேண்டும் என்று சரோஜா, மேச்சேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

``என்னை விட அழகா இருக்க கூடாது'' - 4 பேரை கொலை செய்த பெண்; திருமண வீட்டில் சோகம்

தன்னை விட யாரும் அழகாக இருக்கக்கூடாது என்று பெண்கள் நினைப்பது உண்டு. ஆனால் அந்த நினைப்பு காரணமாக ஹரியானாவில் பெண் ஒருவர் 4 சிறார்களை கொலை செய்துள்ளார். ஹரியானா மாநிலம் பானிபட் அருகில் உள்ள நெளல்தா பகு... மேலும் பார்க்க

சென்னை: மது பாட்டிலால் குத்திக் கொல்லப்பட்ட பெண் - லிவிங் டுகெதரில் இருந்த நபர் கைதான பின்னணி!

சென்னை வியாசர்பாடி ஹசிங்போர்டு பகுதியில் குடியிருந்தவர் பிரியங்கா (33). இவர், 31.11.2025-ம் தேதி மணலி பகுதியில் ஆள்நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதியில் பீர்பாட்டிலால் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறி... மேலும் பார்க்க

ஈரோடு: மூச்சுக்குழாயில் சிக்கிய வாழைப்பழம்; 5 நிமிடத்தில் சிறுவனுக்கு நேர்ந்த சோகம்

ஈரோடு மாவட்டம், அன்னை சத்யா நகர் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம்-மகாலட்சுமி தம்பதியின் மகன் சாய்சரண் (5). நேற்று இரவு சிறுவன் சாய்சரணுக்கு அவரது பாட்டி வாழைப்பழத்தைச் சாப்பிடக் கொடுத்துள்ளார்.அதைச் சாப்பி... மேலும் பார்க்க

தென்காசி: அரசு வழக்கறிஞர் வெட்டிக் கொலை! - பட்டப் பகலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

தென்காசியின் மையப்பகுதியில் உள்ள நடுபல்க் அருகே அரசு வழக்கறிஞரின் அலுவலகம் உள்ளது. ஆட்கள் நடமாட்டம் மிகுந்த அந்தப் பகுதிக்கு வந்த மர்ம நபர்கள், அவரது அலுவலகத்துக்குள் புகுந்து அவரை அரிவாளால் வெட்டிக் ... மேலும் பார்க்க

UAE: `கிரிப்டோ மோசடி' பாலைவனத்தில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட ரஷ்ய தம்பதி - நடந்தது என்ன?

ஐக்கிய அரபு அமீரகத்தின் தன்னந்தனியான பாலைவன பகுதியில் ரஷ்ய கிரிப்டோகரன்சி தொழில்முனைவோர் மற்றும் அவரது மனைவியின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.38 வயதான ரோ... மேலும் பார்க்க

பப்ஜி கேமுக்கு அடிமையான கணவன்; வேலை தேடச் சொன்ன மனைவியை கொன்றுவிட்டு தலைமறைவு; ம.பி அதிர்ச்சி¡

மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில், வேலைக்கு செல்லாமல் பப்ஜி (PUBG) விளையாட்டுக்கு அடிமையான கணவனை வேலை தேடுமாறு கூறிய மனைவியைக் கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது... மேலும் பார்க்க