செய்திகள் :

சேலம்: வனத்துறை குடியிருப்பின் பூட்டை உடைத்து 90 துப்பாக்கித் தோட்டாக்கள் திருட்டு; 4 பேர் கைது

post image

சேலம் மாவட்டம் மேட்டூர் நீதிமன்றம் அருகே வனத்துறைக்குச் சொந்தமான குடியிருப்பு உள்ளது. இதில் வனச்சரகர் மற்றும் வனத்துறை ஊழியர்கள் குடியிருக்கின்றனர. மேலும், அங்கு வனத்துறைக்குச் சொந்தமான ஆவணங்கள், துப்பாக்கித் தோட்டாக்கள், இரும்பு பொருட்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டு இருந்தன.

இந்த நிலையில் அந்தக் குடியிருப்பு கதவுகளை உடைத்து உள்ளே வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி தோட்டாக்கள், இரும்பு பொருட்கள், ஆவணங்கள் உள்ளிட்டவை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த மேட்டூர் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வந்தனர். தொடர்ந்து, திருட்டு சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

துப்பாக்கி
துப்பாக்கி

விசாரணையில், வனத்துறை குடியிருப்புகளில் நுழைந்து 90 துப்பாக்கி தோட்டாக்கள், இரும்பு பொருட்களைத் திருடியது 17 வயது சிறுவர்கள் 2 பேர் உள்பட கோகுல்ராஜ் (23), பிரவீன் (25) ஆகிய 4 பேரும் எனத் தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த 4 பேரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அதில், மதுபோதையில் வனத்துறை குடியிருப்பு வளாகத்தில் நுழைந்து வீட்டிற்குள் வைத்திருந்த 87 துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் 3 காலி துப்பாக்கி தோட்டாக்கள், இரும்பு பொருட்களைத் திருடியதும் தெரியவந்தது. மேலும், இரும்பு பொருட்களை பழைய இரும்பு கடைகளில் விற்றுள்ளனர்.

துப்பாக்கி தோட்டாக்களை எதற்காகத் திருடினார்கள் என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, 90 துப்பாக்கி தோட்டாக்களையும் பறிமுதல் செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். பின்னர், 4 பேரையும் கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

திருப்பூரில் சொத்து தகராறு? ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த பெண் பலியான சோகம்; நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை ராமசாமி நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன் (43). ஓவிய ஆசிரியர். இவரது மனைவி திருப்பூர் பெருமாநல்லூரைச் சேர்ந்த கெளசல்யா (40). இத்தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.தம்பத... மேலும் பார்க்க

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சம்பவ நாளில் பணியிலிருந்த 12 போலீஸார் CBI விசாரணைக்கு ஆஜர்

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக, உச்ச நீதிமன்ற உத்தரவின் கீழ் கடந்த அக்டோபர் 16-ம் தேதி முதல் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கரூர் சுற்றுலா மாளிகையில் தற்காலிக முகாமை அமைத்து, சி.பி.... மேலும் பார்க்க

Himachal: 8 வயது தலித் சிறுவன் மீது ஓராண்டாக தாக்குதல் - தலைமை ஆசிரியர் உட்பட 3 பேர் மீது வழக்கு

வட இந்திய மாநிலமான ஹிமாச்சல பிரதேசத்தின் தலைநகர் சிம்லாவில் உள்ள அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட மூன்று ஆசிரியர்கள் 8 வயது தலித் சிறுவனை தாக்கியதாகவும், கால்சட்டையில் தேளை விட்டு கொடுமைபடுத்த... மேலும் பார்க்க

கேரளா: புகைபிடித்ததை தட்டிக்கேட்ட இளம்பெண்; ஓடும் ரயிலில் இருந்து மிதித்து தள்ளிவிடப்பட்ட கொடூரம்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பாலோடு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீகுட்டி(19), கல்லூரி மாணவி. இவரின் தாய் பிரியதர்ஷினி பெங்களூரில் ஒரு ஸ்கூலில் நீச்சல் பயிற்சியாளராக உள்ளார். ஸ்ரீகுட்டியின் சகோதரர் ஸ்ரீகுமார... மேலும் பார்க்க

`உனக்காகத்தான் மனைவியை கொன்றேன்'- காதலிக்குத் தகவல் சொன்ன கணவன்

பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவர்களாகப் பணிபுரிந்து வந்தவர்கள் மகேந்திர ரெட்டி மற்றும் கிருத்திகா ரெட்டி. கணவன் மனைவியான இருவரும் கடந்த ஆண்டுதான் திருமணம் செய்து கொண்டனர். கடந்... மேலும் பார்க்க

புதுச்சேரி: `என் பொண்டாட்டியை கல்யாணம் பண்ணிக்க நினைச்சான்!’ - சோகத்தில் முடிந்த முறையற்ற காதல்

புதுச்சேரி வம்பாகீரப்பளையம் `பாண்டி மெரீனா’ செல்லும் சாலையில், நேற்று முன் தினம் இளைஞர் ஒருவர் படுகாயங்களுடன் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அதுகுறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் அந... மேலும் பார்க்க