செய்திகள் :

தமிழ்நாடு மின்துறையில் நுழையும் AI: சென்னை ஐஐடி-யுடன் கைகோக்கும் மின்வாரியம்! - பலன் என்ன?

post image

தமிழக மின்கட்டமைப்பை தரம் உயர்த்தி, நவீன தொழில்நுட்பங்கள் மூலம் தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்யும் நோக்கில், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் சென்னை ஐஐடி இடையே இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் செய்தியில், ``தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் வழிகாட்டுதலின்படி, சென்னை மின்வாரிய தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில், எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி. டி. ஆர். நிர்மல் குமார் முன்னிலையில் ஒப்பந்தம் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

மாநிலத்தின் மின் உற்பத்தி, மின் பரிமாற்றம் மற்றும் பகிர்மானத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும். குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு (AI), இயந்திரக் கற்றல், தரவு பகுப்பாய்வு போன்ற அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மின்வாரியத்தில் புகுத்தப்பட உள்ளன. இதன் மூலம், மின்கட்டமைப்பின் செயல்பாடுகளை நிகழ்நேரத்தில் துல்லியமாகக் கண்காணிக்க முடியும்.

ஐஐடி மெட்ராஸ் - தமிழ்நாடு மின்சாரத்துறை ஒப்பந்தம்!
ஐஐடி மெட்ராஸ் - தமிழ்நாடு மின்சாரத்துறை ஒப்பந்தம்!

முக்கிய அம்சங்கள் மற்றும் பயன்கள்:

  • பசுமை எரிசக்தி ஒருங்கிணைப்பு: புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பாதுகாப்பாக மின்கட்டமைப்பில் இணைத்தல் மற்றும் நவீன மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகளை (BESS) உருவாக்குதல்.

  • செலவினச் சிக்கனம்: அனல்மின் நிலையங்களின் செயல்திறனை மேம்படுத்துவதன் மூலமும், தொழில்நுட்ப ஆய்வுகள் மூலமும் மின்வாரியத்தின் செலவுகளைக் குறைத்தல்.

  • டிஜிட்டல் ட்வின் மற்றும் AR/VR: மின்கட்டமைப்பை டிஜிட்டல் முறையில் மாதிரியாக்கம் செய்து, நவீன மெய்நிகர் தொழில்நுட்பங்கள் மூலம் மின் விநியோகத்தை மேம்படுத்துதல்.

  • சிறப்புப் பயிற்சி: மின்வாரிய அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களுக்கு எதிர்கால மின்துறை சவால்களை எதிர்கொள்ள ஐஐடி மூலம் சிறப்புத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படும்.

மின்சார வாரியத்தின் கீழ் இயங்கும் துணை நிறுவனங்களான TNPDCL, TANTRANSCO, TNPGCL மற்றும் TNGECL ஆகிய நிறுவனங்கள் எதிர்கொள்ளும் தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டுச் சவால்களுக்கு, ஐஐடி சென்னை தனது உலகளாவிய அறிவியல் நிபுணத்துவம் மூலம் புதுமையான தீர்வுகளையும், கூட்டு ஆராய்ச்சிகளையும் வழங்கவுள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு மக்களுக்கு எவ்வித தடையுமின்றி சீரான மின்சாரம் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது." எனக் குறிப்பிட்டிருக்கிறது.

ஐஐடி காமகோடி

இது தொடர்பாக ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் காமகோடி அளித்த பேட்டியில், ``எனர்ஜி செக்டார் எனப்படும் மின்னாற்றல் துறை தற்போது மிக அதிவேகமாக வளர்ந்து வருகிறது. இந்த அதிநவீன தொழில்நுட்பங்களை தமிழக மின்சாரத் துறையில் புகுத்தி, கட்டமைப்பை மேம்படுத்துவதே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம்.

இந்த புதிய திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிக முக்கியப் பங்கு வகிக்கப் போகிறது. மின் விநியோகத்தில் கிடைக்கும் கோடிக்கணக்கான தரவுகளைப் பயன்படுத்தி, எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை முன்கூட்டியே கணிக்க முடியும். மேலும், புயல், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் மின் கட்டமைப்புகள் சேதமடையாமல் பாதுகாக்கவும், மின் கசிவு அல்லது மின் தடை ஏற்பட்டால் அதற்கான காரணத்தை உடனடியாகக் கண்டறிந்து சரி செய்யவும் ஏ.ஐ தொழில்நுட்பம் பெரிதும் உதவும்." என்றார்.

Nalam AI: தவெக அரசின் நலம் ஏஐ சாட்போட்; பயன்படுத்துவது எப்படி? - முழு விவரம்!

முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி பொதுமக்களுக்கு அரசின் மருத்துவ சேவைகள் எளிதில் சென்றடையும் வகையில் வடிவமைக்கப்பட்ட "நலம்AI" என்ற பெயரில் WhatsApp Chatbot சேவையை மருத்துவம், மருத்துவ கல்வி மற்றும் மக்கள்... மேலும் பார்க்க

ஒரு குடம் தண்ணீருக்காக 2 மணிநேரம்; கல்குவாரியால் வறண்ட ஊற்று! – கட்சிராயன்பட்டி மக்கள் வேதனை

கல்குவாரியால் வறண்ட ஊற்று கல்குவாரியால் வறண்ட ஊற்று கல்குவாரியால் வறண்ட ஊற்று கல்குவாரியால் வறண்ட ஊற்று கல்குவாரியால் வறண்ட ஊற்று கல்குவாரியால் வறண்ட ஊற்று கல்குவாரியால் வறண்ட ஊற்று கல்குவாரியால் வறண்... மேலும் பார்க்க

வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய போறீங்களா? - ITR Forms-ல் இந்த மாற்றங்கள் வந்துருக்கு!

இந்தியாவில் வருமான வரிக் கணக்குத் தாக்கல் சீசன் தொடங்கிவிட்டது. இந்த ஆண்டு புதிய வருமான வரிச் சட்டம் கொண்டு வந்துள்ளதால், சில மாற்றங்கள் வருமான வரிக் கணக்கு படிவங்களிலும் வந்துள்ளது. அந்த மாற்றங்கள்&g... மேலும் பார்க்க

`வெள்ளி, தங்க நிற ஜரிகை பார்டருடன் இலவச சேலை - வேட்டி: முதல்வருக்கு நன்றி" - நெசவாளர்கள் கூட்டமைப்பு

தமிழ்நாடு அரசு இலவச வேட்டி, சேலை உற்பத்தி செய்ய அரசாணை வெளியிட்டதற்கு நன்றி தெரிவித்து, தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (TWAF) சார்பாக முதலமைச்சர் விஜய்-க்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெள... மேலும் பார்க்க

`டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு; இனியும் ரூ.10 கூடுதலாகப் பெற்றால்..!' - அமைச்சர் விக்னேஷ்

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில் விலைக்கு மேல் ரூ.10 பெறப்படுவதாக கடந்த திமுக ஆட்சியிலிருந்து குற்றச்சாட்டு தொடர்கிறது. தவெக அரசு ஆட்சிப்பொறுப்பேற்றதும் இந்த நடைமுறை நிறுத்தப்படும் எனக் கூற... மேலும் பார்க்க

தமிழகத்தில் அதிகரிக்கும் வேலையின்மை... என்ன செய்யப்போகிறது அரசு?

கல்வி தொடங்கி சுகாதாரம் வரைக்கும் வளர்ச்சிப் பட்டியலில் முன்னணியில் இருக்கிறது, தமிழ்நாடு. இரண்டு இலக்க விகிதத்தில் வளர்ச்சியை எட்டும் மாநிலம் என்ற பெருமையும் தமிழ்நாட்டுக்கு இருக்கிறது. இத்தனை பெருமி... மேலும் பார்க்க