கோவை: வயிற்றில் கருவுடன் உயிரிழந்த பெண் யானை; ரயில் மோதியதில் மற்றொரு யானைக்கும்...
”தம்பி விஜய், கடைசி வரையில் ஆடிக்கொண்டுதான் இருக்கணும்!”- நயினார் நாகேந்திரன்
தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பட்ஜெட்டை படித்து பார்க்காமல் பட்ஜெட் உள்ளே என்ன உள்ளது என்பதை ஆராய்ந்து பார்க்காமல் அவர்கள் ஒண்ணுமே இல்லை ஒண்ணுமே இல்லை என்று சொல்லி வருகிறார்கள். வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஒன்றுமே இல்லாமல்தான் இருப்பார்கள், ஒண்ணுமே இல்லாமல் போய்விடுவார்கள். இந்த பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெறுவதற்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுகூடத் தெரியாமல் நம்முடைய முதலமைச்சர் ஒண்ணுமே தரவில்லை ஒண்ணுமே தரவில்லை என்று கூறினால் பத்திரிக்கையாளர்கள்தான் அவரை கேட்க வேண்டும். ஐந்து ஆண்டுகால ஆட்சியில் எத்தனை மருத்துவ கல்லூரிகள் கொண்டு வரப்பட்டது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் எத்தனை ரயில்களை கொண்டு வரப்பட்டது? இன்றைக்கு சென்னையில் இருந்து அதிவேக விரைவு ரயில் பெங்களூருக்கும் ஹைதராபாத்திற்கும் கூறியுள்ளனர் இதை உங்களைக் கேட்டால் கூறினார்கள்... நீங்கள் கேட்காமலே கொடுத்து இருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக பட்ஜெட்டை படித்துப் பார்த்துவிட்டு சொல்ல வேண்டும்.
தம்பி விஜய்க்கு ஒன்றுமே தெரியாது என்று நினைக்கிறேன். அக்கட்சியின் மூன்றாவது ஆண்டு துவக்க விழாவில் நடனம் ஆடிக் கொண்டிருக்கிறார். ஒரு கட்சித் தலைவர் தமிழகத்தின் கலாச்சாரம் தெரியாமல் மேடையில் நடனமாடிக் கொண்டிருக்கிறார். இப்படி நடமாடிக் கொண்டிருந்தால் கடைசி வரையில் நடனமாடிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.
இந்த ஐந்தாண்டு காலம் ஸ்டாலின்தான முதல்வர். சட்டம் ஒழுங்கை தமிழக முதல்வர்தான் கையில் வைத்துள்ளார்.

ஆனால், கஞ்சா விற்பனை கிராமந்தோறும் நடந்து கொண்டிருக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது. பெண்களுக்கு எதிரான 50 சதவீதம் பெண்கள் பாலியல் குற்றங்கள் நடக்கின்றன. சாத்தான்குளத்தில் நடந்த லாக்கப் மரணத்திற்கு எல்லா கட்சிகளும் ஐயோ என்று குதித்தார்கள். இன்றைக்கு கடந்த 5 ஆண்டுகளில் 32 மரணங்கள் நடைபெற்றுள்ளன. இதற்கு முதலமைச்சர் என்ன பதில் சொல்லப் போகிறார்” என்றார்.














