செய்திகள் :

தருமபுரி: போராட்டத்தில் காவலரின் கையைக் கடித்த தவெக தொண்டர் கைது; பரபரப்பாக்கிய வீடியோ

post image

ருமபுரி மாவட்டம், பாலக்கோடு தக்காளி மண்டி அருகில் கடந்த வாரம் `மனமகிழ் மன்றம்’ என்ற பெயரில் தனியார் மதுபான பார் திறக்கப்பட்டது. இதற்கு அந்த பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அந்த பாரை உடனடியாக மூடக்கோரி த.வெ.க சார்பாக பாலக்கோடு - தருமபுரி சாலையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அப்போது, த.வெ.க நிர்வாகிகளும், தொண்டர்களும் அந்த பாருக்குள் புகுந்து முற்றுகையிட முயன்றனர். போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தியதால், த.வெ.க-வினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், போலீஸாருக்கும், த.வெ.க-வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தள்ளுமுள்ளுவின்போது, மகேந்திரமங்கலம் போலீஸ் ஏட்டு அருள் என்பவரின் கையை த.வெ.க தொண்டர் ஒருவர் வெறித்தனமாக `நறுக்’ என கடித்தார். நல்வாய்ப்பாக, ஏட்டு அருளுக்கு காயம் ஏற்படவில்லை.

காவலரின் கையை கடித்த த.வெ.க தொண்டர்

இதைத்தொடர்ந்து, த.வெ.க-வினர் பார் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, 16 பெண்கள் உட்பட 105 பேரை கைது செய்த போலீஸார், அருகிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து மாலையில் விடுவித்தனர்.

இதனிடையே, போராட்டத்தின்போது போலீஸ் ஏட்டுவின் கையை த.வெ.க தொண்டர் கடித்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் படு வைரலானதால், `அந்த தொண்டர் யார்?’ என கண்டுபிடிக்க போலீஸார் விசாரணையில் இறங்கினர்.

அதில், ஜெமினி எனத் தெரியவந்தது. அவரை தேடிப்பிடித்து கைது செய்த போலீஸார், போராட்டத்தின்போது தள்ளுமுள்ளுவில் ஈடுபட்ட த.வெ.க-வைச் சேர்ந்த மேலும் 5 தொண்டர்களையும் கைது செய்திருக்கின்றனர்.

ரூ.10200000000 `ஓராண்டு பட்ஜெட்டே போடலாம்; திமுக ஊழல் கறைவேட்டிகள் கம்பி எண்ணுவது உறுதி" - எடப்பாடி

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையைக் கவனித்து வரும் திமுக மூத்த அமைச்சர் கே.என். நேரு, தனது துறையில் ரூ. 1,020 கோடி வரையில் ஊழல் செய்திருப்பதாகவும், வழக்குப் பதிவு செய்யவும் தமிழக தலைம... மேலும் பார்க்க

"அன்புமணிக்கும், பாமக-வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என உறுதியாகிவிட்டது" - எம்.எல்.ஏ அருள்

சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பாமக சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது, "ஒரு சில பொறுப்பாளர்கள் கட்சியை திருட பொய... மேலும் பார்க்க

ஹைதராபாத்தில் வரவிருக்கும் 'டொனால்ட் ட்ரம்ப் சாலை' - ரேவந்த் ரெட்டி முடிவுக்கு பாஜக எதிர்ப்பு!

'தெலங்கானா ரைசிங் குளோபல் உச்சி மாநாட்டிற்கு' (Telangana Rising Global Summit) முன்னதாக, உலகளாவிய கவனத்தை ஈர்க்கும் நோக்கில், அந்த மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஹைதராபாத்தில் உள்ள ஒரு முக்கியச் சாலைக... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தை உடைக்க சதி - கொந்தளிக்கும் கு.பாரதி

அம்பத்தூர் மண்டலத்தில் தூய்மைப் பணியாளர்களின் சம்பள விவகாரத்தில் ஊழல் நடப்பதாக பாஜகவின் மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன் சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனிடம் புகார் கொடுத்திருந்தார்.கராத்தே திய... மேலும் பார்க்க

TVK : கட்டையை போட்ட ரங்கசாமி; சங்கடத்தில் விஜய்! - புதுச்சேரி விசிட் பின்னணி என்ன?

தவெக தலைவர் விஜய் நாளை புதுச்சேரியில் பொதுக்கூட்டத்தை நடத்தவிருக்கிறார். கட்சி ஆரம்பித்த பிறகு விஜய் முதல் முறையாக புதுச்சேரிக்கு செல்கிறார். ஏற்கனவே டிசம்பர் 5 ஆம் தேதி அங்கே கூட்டம் நடத்துவதாக இருந்... மேலும் பார்க்க

US: ``உங்கள் மனைவி உஷாவை இந்தியாவுக்கு அனுப்புங்கள்'' - ஜேடி வான்ஸ் மீது கடும் விமர்சனம் ஏன்?

அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் (JD Vance) “அதிகப்படியான குடியேற்றம் (Mass Migration) என்பது அமெரிக்கக் கனவைத் திருடுவது” என்று தெரிவித்த கருத்து, பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.`இந்தக் கருத்து முரண... மேலும் பார்க்க