செய்திகள் :

'தவெக-வின் கொள்கை குறித்து அதிகம் பேசினார்' - TVK-வில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன்

post image

எம்.எஸ்.எம். ஆனந்தன், அ.தி.மு.க- வின் இரண்டாம் கட்ட தலைவர்களில் ஒருவராக விளங்கியவர். விவசாயம் மற்றும் வணிக குடும்பப் பின்னணியைக் கொண்ட இவர், 2011-ம் ஆண்டு முதன் முதலாக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தரப்பில் திருப்பூர் வடக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தொடர்ந்து, 2021-ம் ஆண்டு தேர்தலில் பல்லடம் சட்டமன்றத் தொகுதியில் வென்றார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சராகவும், பின்னர் வனத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர்.

அ.தி.மு.க- வில் நீண்ட காலமாகப் பயணித்த இவர், அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் உள்ளிட்ட முக்கியப் பதவிகளையும் வகித்துள்ளார்.

இந்தத் தேர்தலில் திருப்பூர் வடக்கு தொகுதியில் போட்டியிட்டு த.வெ.க வேட்பாளரிடம் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். இந்த நிலையில்தான் தற்போது அ.தி.மு.க-வில் இருந்து விலகி‌ த.வெ.க இணைந்துள்ளார்.

எம்.எஸ்.எம். ஆனந்தன்!
எம்.எஸ்.எம். ஆனந்தன்!

கட்சி மாறிய பின்னணி குறித்து தெரிவித்த அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர், "கடந்த சில தேர்தல்களாக அ.தி.மு.க தொடர் தோல்விகளையும், பின்னடைவுகளையும் சந்தித்து வருவதால் அதிருப்தி மனநிலையில் இருந்தார்.

திருப்பூர் நகர் மற்றும் பல்லடம் பகுதிகளில் செல்வாக்கு கொண்ட இவரின் அரசியல் எதிர்காலம் மட்டுமின்றி இவரை நம்பியிருக்கும் தீவிர ஆதரவாளர்களின் செல்வாக்கையும் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளவே ஆளுங்கட்சியான த.வெ.க தேவை எனக் கூறி வந்தார்.

கூட்டணிக் கட்சிகளுடனும், புதிதாக இணைபவர்களுடனும் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளும் த.வெ.க-வின் கொள்கை குறித்தும் அதிகம் பேசி வந்தார். அரசியல் ரீதியாக மீண்டும் பெரிய பொறுப்புகளைப் பெற இது ஒரு நல்வாய்ப்பாக கருதி இணைந்துள்ளார்" என்றனர்.

"அதிமுக-வுக்கு ஆதவ் அர்ஜுனா வர முயன்றார்; அதிமுகவை பற்றி பேச..!"- கே.பி முனுசாமி பதில்

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, எம்.சி சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோரும், முன்னாள் எம்எல்ஏக்கள் சிலரும் த.வெ.கவில் இன்று இணைந்திருக்கின்றனர். இந்த இணைப்பு நிகழ்ச்சியில் பேசிய ஆதவ் அர்ஜ... மேலும் பார்க்க

’நவீன தீண்டாமைக்கு முற்றுப்புள்ளி’ - பட்டியலின மக்களின் கிராமத்திற்கு இயக்கப்படும் அரசுப் பேருந்து!

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகேயுள்ள அண்ணா நகர் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட பட்டியலினக் குடும்பங்கள் உள்ளன. இவர்களில் பெரும்பாலானோர் படிப்பு மற்றும் வேலைகளுக்குச் செல்ல அரசுப் பேருந்தையே பயன்படு... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் தூண் விவகாரம்: ``அமைச்சரின் பேச்சைக் கண்டிக்கிறேன்" - தமிழிசை காட்டம்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தனி நீதிபதியின் உத்தரவின் அடிப்படையில் தீபம் ஏற்றாததால், பதியப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழ்நாடு அரசு தன் நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும் என உயர்... மேலும் பார்க்க

CPI அலுவலகத்திற்குச் சென்ற ப.சிதம்பரம்; இடதுசாரிகளைக் கூட்டணிக்குள் இழுக்க முயற்சியா?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்திற்குச் சென்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியனை காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் சந்தித்திருக்கிறார்.இடதுசாரிகளைக் கூட்டணியில் சேர்க்க ப.சிதம்பரம் மு... மேலும் பார்க்க

`பவர் முக்கியம் அமைச்சரே!’ ஜெயலலிதா குட்புக்கில் இருந்த எம்.சி.சம்பத், தவெகவில் தஞ்சமடைந்த பின்னணி!

தமிழகத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றிபெற்றதையடுத்து, அதன் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அதே போல இந்தத் தேர்தலில் 47 இடங்களில் வெற்றிபெற்ற அ.தி.... மேலும் பார்க்க

Vijay: 'முதல்வர் விஜய் செய்தியாளர்களைச் சந்திக்க மறுப்பது ஏன்?'- நிர்மல்குமார் சொல்லும் காரணம் என்ன?

மதுரை அழகர் கோவில் சாலை பகுதியிலுள்ள அரசு சுற்றுலா மாளிகையில் அமைச்சர் நிர்மல்குமார் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமை... மேலும் பார்க்க