செய்திகள் :

"திமுக மீது பழி போடுவதை நிறுத்திவிட்டு, முதல்வர் பொறுப்புடன் செயல்படுவது எப்போது?" - கனிமொழி கேள்வி

post image

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அருகே பெண் ஒருவர் தவெக நிர்வாகிகள் இருவரால் வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் செல்லப்பட்டு, மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்.

பாதிக்கப்பட்ட பெண் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

இந்தக் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டதாக தவெக தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகி பாலமுருகன் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட தவெக நிர்வாகி ஜெயபால் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்ற உத்தரவின்படி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் திமுக எம்.பி கனிமொழி தவெக அரசுக்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "திருவைகுண்டம் அருகே பெண் ஒருவர், தவெக நிர்வாகிகள் இருவரால் வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் செல்லப்பட்டு, மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

பெண்கள் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ள இன்றைய சூழலில், தேர்தல் காலத்தைப் போல திமுகவின் மீது பழி போடுவதை நிறுத்திவிட்டு, தாங்கள்தான் ஆளுங்கட்சி என்பதை உணர்ந்து 'பொறுப்புடன்' முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் செயல்பட போவது எப்போது?" என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

தொடரும் விலகல், தத்தளிக்கும் நிர்வாகிகள் : மம்தாவின் கைகளை விட்டு நழுவுகிறதா திரிணாமுல் காங்கிரஸ்?

ஒரு அரசியல் கட்சிக்கு இரங்கற்பா எழுதுவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. கட்சிகள் என்பவை ஜெரிக்கோவின் ரோஜாக்கள் போன்றவை என்பார்கள். (ஜெரிகோவின் ரோஜா (Rose of Jericho) என்பது பாலைவனச் சூழலிலும் பல ஆண்... மேலும் பார்க்க

Vijay: "உதவியாளர் வீட்டு விழாவைச் சிறப்பிக்க பெண்களின் பாதுகாப்பை Compromise செய்தீர்களா?" - இபிஎஸ்

சென்னை தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்பனையைத் தட்டிக் கேட்ட 23 வயது விஷ்ணு என்ற இளைஞரை சுத்தி, அம்மிக்கல், பீர் பாட்டில் போன்றவற்றால் அடித்துக் கொலை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்க... மேலும் பார்க்க

`உள்ளே நடந்தது ஒன்று; சொன்னது வேறு' நெதன்யாகு மீது கோபத்தில் ட்ரம்ப் - போன்காலில் வெடித்த பிரச்னை?

நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இருவரும் தொலைபேசியில் பேசியுள்ளனர். ட்ரம்ப் ஈரான் போரை முடிப்பதில் மும்முரமாக இருக்கிறார். ஆனால், நெதன்யாகுவோ அதற்கு முட்டுக்கட்டை போடு... மேலும் பார்க்க

'நான் இடைதேர்தலில் போட்டியிட மாட்டேன்; எனக்கு அமைச்சர் ஆக ஆசை இல்லை' - விஜயிடம் கூறிய திருமா|Today News Live Updates

திருச்சி கிழக்கில் திருமா போட்டியா?தமிழ்நாட்டில் திருச்சி கிழக்கு உள்ளிட்ட தொகுதிகளில் இடைத்தேர்தலை சந்திக்க உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் போட்டியிட்டு வென்ற தொகுதியான திருச்சி கிழக்கில் விசிக த... மேலும் பார்க்க