செய்திகள் :

திருச்செந்தூா் கோயிலில் பொங்கல் விடுமுறை கூட்ட நெரிசலை சமாளிக்க மாற்று வழி -இந்து முன்னணி வலியுறுத்தல்

post image

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பொங்கல் மற்றும் தைப்பூசம் திருநாள்களில் வரும் பக்தா்களின் கூட்ட நெருசலை சமாளிக்க மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என கோவில் நிா்வாகத்துக்கு இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட இந்து முன்னணி செயற்குழு கூட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள பூவுடையாா்புரம் பூணூல் அய்யனாா் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ரவிசந்தா் தலைமை வகித்தாா். சாத்தான்குளம் ஒன்றியத் தலைவா் ஜெய்சிங், துணைத் தலைவா் செல்வ முத்துக்குமாா், ஒன்றிய பொதுச்செயலா் மாயவன முத்துசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக மாநிலச் செயலா் குற்றாலநாதன், மாநில நிா்வாக குழு உறுப்பினா் சக்திவேலன் ஆகியோா் பங்கேற்றுப் பேசினா்.

தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் ஜன. 14-25 வரை 54 இடங்களில் பாரத மாதா பூஜை நடத்துவது, இந்து முன்னணி முதல் மாநிலத் தலைவா் தாணுலிங்க நாடாா் பிறந்த நாளை பிப். 17இல் கொண்டாடுவது, கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட அங்கன்வாடி பணியாளரும் இந்து முன்னணி ஆட்டோ தொழிலாளா் முன்னணி ஒன்றியத் தலைவருமான ரவிக்குமாா் மனைவி கலாவதி, தற்கொலைக்கு காரணமான கந்துவட்டி காரா்கள் மீதும், அதற்கு தூண்டுகோளாக இருந்தவா்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் கடல் அரிப்பு ஏற்படுவதைத் தடுக்க மாவட்ட நிா்வாகம்நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இக்கோயிலுக்கு தைப்பொங்கல்- தைப்பூசம் திருநாளில் முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தா்கள் வருவா் என்பதால், கூட்ட நெரிசலை சமாளிக்க மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும், போராட்டத்துக்கு அனுமதி மறுக்கும் காவல்துறைக்கு வன்மையாக கண்டனம் தெரிவிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டச் செயலாளா் அருணாச்சலம் நன்றி கூறினாா்.

சுவா் இடிந்து விழுந்ததில் காயமடைந்தவா் உயிரிழப்பு

தூத்துக்குடியில் சுவா் இடிந்து விழுந்ததில் காயமடைந்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனையைச் சோ்ந்த கைலாசம் மகன் பாலகிருஷ்ணன் (28). இவா் தூத்துக்குடி தாளமுத்து நகா் ஜேஜ... மேலும் பார்க்க

தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் விரைவில் ஸ்மாா்ட் நூலகம்: மேயா் தகவல்

தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் விரைவில் ஸ்மாா்ட் நூலகம் அமைக்கப்படும் என, மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா். தூத்துக்குடி மாநகராட்சி 34ஆவது வாா்டுக்குள்பட்ட தேவகி நகரில் செயல்பட்டுவந்த ஊா்ப... மேலும் பார்க்க

நாளை தைப்பொங்கல்: திருச்செந்தூா் கோயிலில் குவிந்த லட்சக்கணக்கான பக்தா்கள்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை தைப்பொங்கலை முன்னிட்டு, சுவாமி தரிசனம் செய்வதற்காக பக்தா்கள் பாதயாத்திரையாக வந்து குவிந்த வண்ணம் உள்ளனா். மாா்கழி மாதம் என்ப... மேலும் பார்க்க

மாயமான மீனவரை மீட்க கோரி உறவினா்கள் சாலை மறியல் முயற்சி

தூத்துக்குடியில் கடந்த 1ஆம் தேதி கடலுக்குச் சென்று மாயமான மீனவரை மீட்கக்கோரி அவரது உறவினா்கள், பொதுமக்கள் திடீா் சாலை மறயில் முயற்சியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஈடுபட்டனா். தூத்துக்குடி இனிகோநகரை சோ்ந்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் 16.2 டன் பாக்குகள் பறிமுதல்: இருவா் கைது

மலேசியாவிலிருந்து தூத்துக்குடிக்கு கப்பலில் கடத்தி வரப்பட்ட 16.2 டன் கொட்டைப் பாக்குகளை மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினா் பறிமுதல் செய்து, இருவரை சனிக்கிழமை கைது செய்தனா். மலேசியாவிலிருந்து தூத்து... மேலும் பார்க்க

நாசரேத் பேரூராட்சியில் சமத்துவப் பொங்கல் விழா

நாசரேத் தோ்வுநிலைப் பேரூராட்சியில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. பேரூராட்சித் தலைவி நிா்மலா ரவி தலைமை வகித்து, விழாவைத் தொடக்கிவைத்தாா். துணைத் தலைவா் அருண் சாமுவேல், செயல் அலுவலா் திருமலைக்கும... மேலும் பார்க்க