அழிவின் விளிம்பில் வங்குநரி, சமநிலை காக்க `வங்குநரி அறிவியல் வழக்காறு ஆய்வு மையம...
``நடிகர் விஜய் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்துடன் ஒன்றுபட்டுள்ளார்' - அப்பாவு
நெல்லையில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தத்திற்கு எதிராக விஜய் போராட வேண்டுமென்றால் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்க வேண்டும்.
அதை விடுத்து எஸ்.ஐ.ஆர் என்ற பெயரில் மாநில அரசுக்கு எதிராகப் போராடுவது என்பது வெறும் கண்துடைப்பு. ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை மனதில் வைத்துக்கொண்டு போராடுபவர்களை மக்கள் நம்பவில்லை.

எஸ்.ஐ.ஆருக்கு எதிரான போராட்டம் எனக்கூறிவிட்டு எஸ்.ஐ.ஆருக்கு எதிராக விஜய், ஒரு வார்த்தைகூட பேசவில்லை. தமிழக அரசுக்கு எதிராகவே பேசியிருக்கிறார். எஸ்.ஐ.ஆர்-ஐ பார்த்து முதல்வருக்கு எந்த பயமும் கிடையாது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முகவர்கள் தினந்தோறும் 50 வாக்காளர்களிடம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைப் பெற்று வாக்குச்சாவடி அலுவலர்களிடம் கொடுக்கலாம் என தேர்தல் ஆணையமே கூறியுள்ளது.
இது தமிழக வெற்றிக்கழகத்திற்கு தெரியாதா? ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்துடன் விஜய் ஒன்றுபட்டுள்ளார். எனவே அவர்கள் இருவரும் ஒன்றாக இணைவர். எஸ்.ஐ.ஆருக்கு எதிராக வருவாய்த்துறை அலுவலர்களை தூண்டிவிடும் பழக்கம் தி.மு.க-வுக்கு கிடையாது. பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்துகின்றனர்.

மத்திய அரசு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்திய உடனே மாநில அரசும் அகவிலைப்படியை உயர்த்தியுள்ளது. மத்திய அரசு தமிழக அரசுக்கு தர வேண்டிய நிதியை வழங்கினாலே ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை இங்கு செயல்படுத்த முடியும்.” என்றார்.
















