செய்திகள் :

நண்பர் அறை என கருதி கதவை தட்டிய செவிலியர்; உள்ளே இழுத்து பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர் - அதிர்ச்சி

post image

மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சாம்பாஜி நகர் ரயில் நிலையம் அருகில் உள்ள ஹோட்டலில் அறை எடுத்து கிரண் ரத்தோட் உட்பட 3 நண்பர்கள் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தனர். அந்நேரம் பெண் ஒருவர் வந்து அந்த அறை கதவை தட்டினார். உள்ளே இருந்தவர்கள் கதவை திறந்தபோது, அவர்களிடம் தனது நண்பர் ஒருவரின் பெயரை சொல்லி அவர் இருக்கிறாரா என்று கேட்டுள்ளார். அவர்கள் உங்களது நண்பர் உள்ளேதான் இருக்கிறார் என்று சொல்லி அப்பெண்ணை உள்ளே இழுந்து மூன்று பேரும் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டனர்.

இது குறித்து இன்ஸ்பெக்டர் பிரவினா கூறுகையில், ''பாதிக்கப்பட்ட பெண் ஒரு செவிலியர். அவரின் கணவருக்கு வேலை இல்லை. இதனால் பண நெருக்கடியில் இருந்தார். இதனால் தனக்கு தெரிந்த நண்பர் ஒருவரிடம் பணம் கேட்டு இருந்தார். அந்த நண்பர் பணம் தருவதாக கூறி அப்பெண்ணை ஹோட்டலுக்கு வரவழைத்தார்.

இரவு 11 மணிக்கு அப்பெண் போன் பேசுவதற்காக ஹோட்டல் அறையில் இருந்து வெளியில் வந்தார். அவர் பேசிவிட்டு மீண்டும் அதே அறைக்கு செல்ல நினைத்தபோது தவறுதலாக வேறு ஒரு அறை கதவை தட்டிவிட்டார்.

அவரது நண்பர் 105வது அறையில் இருந்தார். ஆனால் அப்பெண் தவறுதலாக 2வது மாடிக்கு சென்று 205வது அறை கதவை தட்டினார். உள்ளே கதவை திறந்தவர்கள் மது அருந்திக்கொண்டிருந்தனர். அவர்களிடம் தனது நண்பர் பெயரை சொல்லி கேட்டுள்ளார். அதில் ஒருவர் உங்களது நண்பர் பாத்ரூம்பில் இருப்பதாக கூறி அறைக்குள் இழுத்துள்ளார். அறைக்குள் இழுத்த பிறகு அப்பெண்ணை கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்து மூன்றுபேரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துவிட்டனர்.

அப்பெண் அதிகாலை 4 மணிக்கு மூன்று பேரிடமிருந்து தப்பித்து கதவை திறந்து கொண்டு வெளியில் வந்து போலீஸில் புகார் செய்தார்'' என்றார். அப்பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகள் மூன்று பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர்: ரூ.3 கோடி இன்சூரன்ஸ் பணம்; அரசு வேலை - பாம்பை வைத்து அப்பாவை கொலை செய்த மகன்கள்

திருவள்ளூர் மாவட்டம், பொதட்டூர்பேட்டை நல்ல தண்ணீர்குளத்தை சேர்ந்தவர் கணேசன் (56). அந்தப்பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு மோகன்ராஜ் (29), ஹரிஹ... மேலும் பார்க்க

சூதாட்ட செயலி விளம்பரம்: யுவராஜ் சிங், உத்தப்பா, நடிகர் சோனுசூட்டின் ரூ.7.93 கோடி சொத்து பறிமுதல்

கடந்த இரண்டு ஆண்டுகளாக சட்டவிரோத சூதாட்ட செயலி மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த மொபைல் செயலி மூலம் சட்டவிரோதமாக கிரிக்கெட் சூதாட்டம் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இதில் வரக்கூடிய வருமானத்திற்... மேலும் பார்க்க

கரூர்: '1000 ஆண்டுகள் பழமையான கோயில் கலசங்கள் திருட்டு' - குற்றவாளிகளை தேடும் போலீஸ்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள சங்கரமலைப்பட்டியில் மலை உச்சியில் ஸ்ரீசௌந்தரநாயகி உடன் சங்கரேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ,அதேபோல், இந்தக் க... மேலும் பார்க்க

`உயர்ரக போதை, உச்சக்கட்ட உறவு; சர்வதேச கும்பல்' - குமரி ரிசார்ட்டில் போதை ஆட்டம்; பகீர் தகவல்கள்

கன்னியாகுமரி அருகே உள்ள மருங்கூரில் செயல்பட்டுவரும் தனியார் ரிசார்டில் தடைச் செய்யப்பட்ட உயர் ரக போதை விருந்து நிகழ்ச்சி நடைபெறுவதாக கன்னியாகுமரி எஸ்.பி டாக்டர் ஸ்டாலினுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எஸ்... மேலும் பார்க்க

சிதுமூஸ்வாலா கொலையாளிகளுக்கு அடைக்கலம் - செல்பி எடுப்பதுபோல் வந்து கபடி வீரர் சுட்டுக்கொலை

பஞ்சாப் மாநிலத்தில் ஆயுத கலாசாரம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் இன்னும் குறையவில்லை. எல்லையில் பாகிஸ்தான் இருப்பதால் அடிக்கடி அங்கிருந்து துப்பாக்கி மற்றும் போதைப்பொருள் கடத்தி வரப்படுவது வழக்கமாக நடந்... மேலும் பார்க்க

அர்ஜுனா ரணதுங்க: பெட்ரோலிய ஊழல் வழக்கில் கைதாவாரா? - இலங்கை நீதிமன்றத்தில் அதிகாரிகள் தகவல்!

இலங்கையின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரும், முன்னாள் பெட்ரோலியத் துறை அமைச்சருமான அர்ஜுனா ரணதுங்க மற்றும் அவரது சகோதரர் தம்மிக்க ரணதுங்க ஆகியோர் மீது 2017 ஆம் ஆண்டு எண்ணெய் கொள்முதல் ஒப்பந்தங்களில் ஊழல்... மேலும் பார்க்க