செய்திகள் :

சூதாட்ட செயலி விளம்பரம்: யுவராஜ் சிங், உத்தப்பா, நடிகர் சோனுசூட்டின் ரூ.7.93 கோடி சொத்து பறிமுதல்

post image

கடந்த இரண்டு ஆண்டுகளாக சட்டவிரோத சூதாட்ட செயலி மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த மொபைல் செயலி மூலம் சட்டவிரோதமாக கிரிக்கெட் சூதாட்டம் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இதில் வரக்கூடிய வருமானத்திற்கு முறையாக கணக்கு காட்டுவது கிடையாது. இந்த சட்டவிரோத மொபைல் செயலிகளுக்கு எதிராக அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். 1xBet என்ற சட்டவிரோத கிரிக்கெட் சூதாட்ட மொபைல் செயலியை விளம்பரப்படுத்துவதில் கிரிக்கெட் வீரர்கள், நடிகர், நடிகைகள் ஈடுபட்டனர்.

இதன் மூலம் 1xBet மொபைல் செயலி இந்தியாவில் சட்டவிரோதமாக ரூ.1000 கோடிக்கு வர்த்தகம் செய்தது. ஆனால் இந்த மொபைல் செயலி வெளிநாட்டை சேர்ந்தது ஆகும்.

சோனு சூட்

இந்த சட்டவிரோத மொபைல் செயலிக்காக சோசியல் மீடியா மற்றும் எலக்ட்ரானிக் மீடியாவில் விளம்பரம் செய்தது தொடர்பாக பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் மீது பணமோசடி தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன் படி ஏற்கனவே கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, சிகர் தவான் ஆகியோரின் ரூ.11.14 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தற்போது மேலும் சில பிரபலங்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், ராபின் உத்தப்பா, நடிகர் சோனு சூட், நடிகை ஊர்மிளா ரவுடேலா, மிமி சக்ரவர்த்தி, நேகா சர்மா ஆகியோரின் ரூ.7.93 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இதன் மூலம் இவ்விவகாரத்தில் இதுவரை 19.07 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சொத்து பறிமுதல் செய்யப்பட்டவர்களிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பிரபலங்கள் தெரிந்தே வெளிநாட்டு மொபைல் செயலிக்காக விளம்பர ஒப்பந்தங்களில் ஈடுபட்டுள்ளனர் என்று அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கிரிக்கெட் சூதாட்ட செயலியால் சத்தீஷ்கர் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

திருவள்ளூர்: ரூ.3 கோடி இன்சூரன்ஸ் பணம்; அரசு வேலை - பாம்பை வைத்து அப்பாவை கொலை செய்த மகன்கள்

திருவள்ளூர் மாவட்டம், பொதட்டூர்பேட்டை நல்ல தண்ணீர்குளத்தை சேர்ந்தவர் கணேசன் (56). அந்தப்பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு மோகன்ராஜ் (29), ஹரிஹ... மேலும் பார்க்க

நண்பர் அறை என கருதி கதவை தட்டிய செவிலியர்; உள்ளே இழுத்து பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர் - அதிர்ச்சி

மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சாம்பாஜி நகர் ரயில் நிலையம் அருகில் உள்ள ஹோட்டலில் அறை எடுத்து கிரண் ரத்தோட் உட்பட 3 நண்பர்கள் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தனர். அந்நேரம் பெண் ஒருவர் வந்து அந்த அறை கதவ... மேலும் பார்க்க

கரூர்: '1000 ஆண்டுகள் பழமையான கோயில் கலசங்கள் திருட்டு' - குற்றவாளிகளை தேடும் போலீஸ்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள சங்கரமலைப்பட்டியில் மலை உச்சியில் ஸ்ரீசௌந்தரநாயகி உடன் சங்கரேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ,அதேபோல், இந்தக் க... மேலும் பார்க்க

`உயர்ரக போதை, உச்சக்கட்ட உறவு; சர்வதேச கும்பல்' - குமரி ரிசார்ட்டில் போதை ஆட்டம்; பகீர் தகவல்கள்

கன்னியாகுமரி அருகே உள்ள மருங்கூரில் செயல்பட்டுவரும் தனியார் ரிசார்டில் தடைச் செய்யப்பட்ட உயர் ரக போதை விருந்து நிகழ்ச்சி நடைபெறுவதாக கன்னியாகுமரி எஸ்.பி டாக்டர் ஸ்டாலினுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எஸ்... மேலும் பார்க்க

சிதுமூஸ்வாலா கொலையாளிகளுக்கு அடைக்கலம் - செல்பி எடுப்பதுபோல் வந்து கபடி வீரர் சுட்டுக்கொலை

பஞ்சாப் மாநிலத்தில் ஆயுத கலாசாரம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் இன்னும் குறையவில்லை. எல்லையில் பாகிஸ்தான் இருப்பதால் அடிக்கடி அங்கிருந்து துப்பாக்கி மற்றும் போதைப்பொருள் கடத்தி வரப்படுவது வழக்கமாக நடந்... மேலும் பார்க்க

அர்ஜுனா ரணதுங்க: பெட்ரோலிய ஊழல் வழக்கில் கைதாவாரா? - இலங்கை நீதிமன்றத்தில் அதிகாரிகள் தகவல்!

இலங்கையின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரும், முன்னாள் பெட்ரோலியத் துறை அமைச்சருமான அர்ஜுனா ரணதுங்க மற்றும் அவரது சகோதரர் தம்மிக்க ரணதுங்க ஆகியோர் மீது 2017 ஆம் ஆண்டு எண்ணெய் கொள்முதல் ஒப்பந்தங்களில் ஊழல்... மேலும் பார்க்க