செய்திகள் :

"நான் யாருடைய நிழலிலும் இருக்க விரும்பவில்லை"- கேப்டன் பொறுப்பு குறித்து ஸ்ரேயஸ் ஐயர்

post image

இந்திய டி20 கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ஸ்ரேயஸ் ஐயர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இங்கிலாந்து, அயர்லாந்து தொடர்களில் இந்திய அணியை வழிநடத்த இருக்கும் ஸ்ரேயஸ் ஐயர் தனது புதிய பொறுப்பு குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார்.

ஸ்ரேயஸ் ஐயர்
ஸ்ரேயஸ் ஐயர்

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், "நான் என்னுடைய தனித்துவத்தை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

நான் இதற்கு முன்பு எப்படி இருந்தேனோ, அதே நபராகத்தான் இப்போதும் இருக்க வேண்டும். வேறொருவரைப் போல மாறவோ அல்லது யாருடைய நிழலிலும் இருக்கவோ நான் விரும்பவில்லை.

நான் வளரும்போதே சவால்களை எதிர்கொள்வதை விரும்பினேன். குறிப்பாக மும்பையில் இருந்து வந்ததால் சவால்களை எதிர்கொள்வது எனக்குப் பழகிவிட்டது. அங்கு கிரிக்கெட் என்பது மிகப்பெரிய விஷயம். போட்டி கடுமையாக இருக்கும். அங்கு தெருவில் இருக்கும் ஒவ்வொரு குழந்தையும் மும்பை அணிக்காக விளையாட வேண்டும் என்றுதான் ஆசைப்படும்.

ஸ்ரேயஸ் ஐயர்
ஸ்ரேயஸ் ஐயர்

அதனால் எனது மனநிலை எப்போதும் சவால்களை வெல்வதைப் பற்றியதாகவே இருந்தது. தற்போது எனக்கு கேப்டன் என்ற பொறுப்பு கிடைத்திருக்கிறது. இது எனக்கு மிகப்பெரிய சவால். அதை சரியாக செய்ய வேண்டும்" என்று பேசியிருக்கிறார்.

IPL: "இரண்டு அணிகளைத் தவிர மற்ற அணிகள் என்னை ஏலம் கேட்கவில்லை, ஏன் என.!"- வைபவ் சூர்யவன்ஷி

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி ப்ளே ஆஃப் சுற்றில் தோல்வியடைந்திருந்தாலும் அந்த அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். 15 வயதான சூர்யவன... மேலும் பார்க்க

INDvAFG: சதமடித்து மிரட்டிய கில், ராகுல்; சாய், பண்ட் அரைசதம்! - முதல் நாளில் இந்தியா ஆதிக்கம்

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், இந்திய அணி பேட்ஸ்மேன்களின் அபார ஆதிக்கத்தால் வலுவான நிலையில் உள்ளது. தொடக்க வீரர் கே.எல். ராகுல் மற்றும் கேப்டன் ஷுப்மன் க... மேலும் பார்க்க

இந்திய அணிக்கு தேர்வானார் சூர்யவன்ஷி! - இங்கிலாந்து, அயர்லாந்து தொடரில் இருந்து புதிய கேப்டன்!

இந்திய அணிக்கு தேர்வாகி இருக்கிறார் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி. அயர்லாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெறும் இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டிருக்கிறது. அதில் இளம் வீ... மேலும் பார்க்க

உலகக் கோப்பை வென்ற 3 மாதங்களில் பதவிக்கு ஆபத்து! சூர்யகுமார் யாதவை கழற்றிவிட BCCI முடிவு?

இந்திய டி20 கிரிக்கெட் அணிக்கு உலகக் கோப்பையை வென்று தந்து வெறும் 3 மாதங்களே ஆன நிலையில், கேப்டன் சூர்யகுமார் யாதவின் பதவி பறிபோகும் அபாயத்தில் உள்ளது. கேப்டன் பதவியிலிருந்து அவர் நீக்கப்படுவது மட்டும... மேலும் பார்க்க

கோலிக்கு அவமரியாதை? `இது குரூரம்!' - இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷிக்காக கொந்தளித்த ஹர்ஷா போக்ளே!

ஐபிஎல் 2026 தொடர் கோலாகலமாக முடிவடைந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் நட்சத்திர வீரரான வைபவ் சூர்யவன்ஷியைச் சுற்றி ஒரு சர்ச்சை வெடித்துள்ளது. ஒரு வீடியோ, சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பர... மேலும் பார்க்க

வெறும் பேட்டிங் அணி அல்ல, சாம்பியன் படை! ஆர்சிபியை செதுக்கிய பயிற்சியாளர் ஆண்டி பிளவர் - யார் இவர்?

ஐபிஎல் தொடர்களில் எத்தனையோ ஜாம்பவான் பயிற்சியாளர்கள் வந்திருந்தாலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலையெழுத்தையே மாற்றி எழுதிய பெருமை அதன் தலைமைப் பயிற்சியாளர் ஆண்டி பிளவரையேசேரும். தொடர்ச்சியாக... மேலும் பார்க்க