செய்திகள் :

"நாளை மறுநாள் டெல்லி செல்கிறேன்" - எடப்பாடி உடனான சந்திப்பு குறித்து நயினார்

post image

அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று (டிச.11) நடைபெற்றது.

அதில், கூட்டணியில் இடம் பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கி இருப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், இன்று (டிச.11)பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எடப்பாடி பழனிசாமியை பசுமை வழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பேசினார்.

அதிமுக பொதுக்குழு கூட்டம்
அதிமுக பொதுக்குழு கூட்டம்

வரும் 14ஆம் தேதி நயினார் நாகேந்திரன் டெல்லி செல்ல இருக்கிறார்.

அதற்கு முன்னதாக எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்திருப்பது கவனம் பெற்றிருக்கிறது.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரனிடம் எடப்பாடியுடனான சந்திப்பு குறித்து கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த அவர், "நேற்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்தது. அதைப் பற்றி தான் எடப்பாடியிடம் பேசினேன். அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன்.

எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன்
எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன்

ஓ. பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் உள்ளிட்டோரை கூட்டணிக்குள் கொண்டுவருவது பற்றியோ, தொகுதி பங்கீடு பற்றியோ பேசவில்லை. நாளை மறுநாள் டெல்லி செல்கிறேன்" என்று விளக்கம் அளித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் : `நீதிபதி உணர்ச்சிவசப்பட்டுத் தீர்ப்பளிக்கவில்லை.!’ - எஸ்.ஜி.சூர்யா | களம் 2

எந்த ஒரு விவகாரத்துக்கும் பல முகங்கள் இருக்கும். பல்வேறு நபர்களின் பார்வைகள் வேறுபட்டு இருக்கும். அவை அனைத்தையும் ஒரே பகுதியில் இணைக்கும் ஒரு முயற்சி தான்,`களம்’இந்த மினி தொடரில் நாம் பார்க்கப் போவது’... மேலும் பார்க்க

"இந்தியா மீதான வரியை ரத்து செய்ய வேண்டும்" - அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்; காரணம் என்ன?

இந்தியா, அமெரிக்கா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இதனால், இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 25 சதவீத பரஸ்பர வரி, 25 சதவீத கூடுதல் வரி என மொத்தம் 50 சதவீத வரியும் தொடர்ந்த... மேலும் பார்க்க